அர்ச்சுனன் பாண்டவர்களில் நடுவனாய் இருந்தாலும் அவன் தான் மகாபாரத்தின் கதா நாயகன். கண்ணனுடன் தோழமை கொண்டவன். வில் வித்தையில் சிறந்து 'வில்லுக்கு விஜயன்' என்ற பெயர் பெற்றவன். குற்றமற்றவன் என்பதால் அனகன் என்னும் பெயர் பெற்றவன். அவனை நம்பியே பாண்டவர்களின் வெற்றி இருந்தது. அதன் காரணத்தாலேயே தன் பக்தர்களை எந்த நேரத்திலும் கைவிடாத அச்யுதனான கண்ணன் அந்த பார்த்தனுக்கு சாரதியாய் அமர்ந்தான்.
வீரத்துடன் தன் கடமையைச் செய்வதற்காக போர்களத்திற்கு மாதவனோடு வந்தான் அனகன். அதுவரை பல போர்களங்கள் கண்டவன். எதிரிகளை நெருப்பென தகிப்பதால் பரந்தபன் என்ற பெயர் அடைந்தவன். அவன் இந்த போர்களத்திற்கும் மிக்க ஊக்கத்துடன் வந்ததில் வியப்பேதும் இல்லை. கண்ணனிடம் 'அச்யுதா. இந்த தருமநெறி தவறிய கௌரவர்களுக்காக என்னுடன் போரிட வந்திருப்பவர்களை பார்க்கவேண்டும். ரதத்தை இரு சேனைகள் நடுவில் நிறுத்து' என்றான். கண்ணனும் அவ்விதமே செய்து 'குந்தியின் மகனே. இதோ போரிட வந்திருக்கும் உன் உறவினரான கௌரவர்களைப் பார்' என்றான்.
அங்கு பார்த்தன் பார்த்த காட்சி யாராயிருந்தாலும் உலுக்கியிருக்கும். எங்கு நோக்கினாலும் எதிர்தரப்பில் இருப்பவர்கள் எல்லோரும் உறவினர்களே. இதுவரை எந்த போர்களத்திலும் வராத நடுக்கம் உறவினர்களைக் கண்டதும் அர்ச்சுனனுக்கு வந்துவிட்டது. பலவிதமான நியாயங்களை எடுத்துக் கூறி தான் போர் புரிய மாட்டேன் என்று கூறி வில்லை கீழே வைத்துவிட்டு அமர்ந்துவிட்டான். இன்று இவன் கூறும் நியாயங்கள் எல்லாம் உறவினர்களைப் பார்த்ததால் வந்தது. அந்த நியாயங்கள் எந்தப் போருக்கும் பொருந்தும் - ஆனால் அந்தப் போர்களங்களில் எல்லாம் அனகன் அதைப் பற்றி எண்ணிப்பார்த்து கிடையாது.
'நீ செய்வது தவறு. கௌரவர்கள் தான் போரை வலுக்கட்டாயமாய் தொடங்கியவர்கள். தருமத்திற்காக போர் செய்யப் பிறந்த நீ இப்படி பேடியாய் இருக்கக்கூடாது' என்கிறான் மாயவன். பார்த்தனுக்கும் புரிகிறது தான் செய்வது தவறு என்று. ஆனால் 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என்னும் முதுமொழிக்கேற்ப மனது குழப்பம் உற்றிருக்கிறது. அதனால் தனக்கு தகுந்த வழியைக் காட்டித்தருமாறு பகவானைச் சரணடைந்தான்.
தன்னிடம் சிஷ்யனாய் சரணடைந்த அனகனுக்கு ஆண்டவன் பல விதமான தருமங்களைப் போதிக்க ஆரம்பித்தான். அது அனகனுக்கு மட்டும் சொன்னதா? இல்லை நம் அனைவருக்கும் சொன்னது.
மனிதன் உடலும் மனமும் கொண்டிருக்கும் வரை செயல் செய்யாமல் இருக்க முடியாது. அதனால் செய்யும் எல்லா செயல்களையும் இறைவனுக்கு தத்தம் செய்துவிட்டு செயலாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். 'செய்க வினை; பயன் நோக்காது ஆற்றுக' என்றான் மாதவன்.
மனமோ மிகவும் சஞ்சலமானது. அவ்விதம் இருக்க எல்லா செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து செயலாற்றுவது எப்படி சாத்தியம் என்றான் குந்தி மகன்.
நிலையானது எது; நிலையற்றது எது என்ற ஞானத்தை அடைந்தால் அப்படி செயல் செய்வது சாத்தியம் என்றான் மாதவன்.
அந்த ஞானத்தை எப்படி அடைவது என்றான் தருமனின் தம்பி.
மீண்டும் மீண்டும் அதைப் பற்றி தியானம் செய்வதால் அந்த ஞான நிலையை அடையலாம் என்றான் கேஸவன்.
அறிவு சிறந்தால் கருவம் தானே ஓங்குகிறது. கருவம் ஒருவனை கீழே தள்ளிப் புதைத்துவிடுமே என்றான் அனகன்.
எல்லாம் வல்ல இறைவனின் மேல் காதல் கொண்டால் அந்த பக்தி ஒருவன் அடையும் ஞானத்தால் வரும் கருவத்தை நீக்கிவிடும் என்றான் கமலக்கண்ணன்.
இதெல்லாம் எல்லோரும் செய்ய முடியுமா? என்னால் முடியாது என்று தோன்றுகிறது. எளிதான வழி இருந்தால் சொல் என்றான் அனகன்.
உண்டு. இங்கு உனக்குள்ளது என்று நீ நினைக்கும் எல்லாவிதமான பந்தங்களைப் பற்றிய பாசங்களை விட்டுவிட்டு என்னையே சரணடைவாய். நான் உன்னை எல்லாவிதமான பாவங்களில் இருந்தும் விடுவிக்கிறேன் என்றான் ஆண்டவன்.
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜஅஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: எல்லாவிதமான பந்தங்களை விட்டுவிடுவதென்றால் எல்லோரும் துறவு பூண வேண்டுமா?
இல்லை. இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே பந்தங்களில் உள்ள பாசத்தைப் பற்றுதலை மட்டும் துறக்க வேண்டும்.
அப்படி என்றால் என் குழந்தை அழுதால் நான் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாமா?
அந்த குழந்தை மேல் உள்ள அன்பைக் காதலைத் துறக்க வேண்டாம். ஆனால் அந்த குழந்தை மட்டுமே என்னுடையது என்ற பற்றுதலை நீக்க வேண்டும். இங்கிருக்கும் எல்லோரும் இறைவனுக்குரியவர்; அதனால் எல்லோரும் என் அன்பைப் பெறத் தகுந்தவர்கள் என்னும் எண்ணம் கொள்ளவேண்டும்.
'என்னையே சரணடை. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்' என்று கண்ணன் கொடுத்த உறுதிமொழியே கீதையின் கடைசி உபதேசம்; கடைசி ஸ்லோகம்; சரம ஸ்லோகம் எனப்படுவது. இந்த சரம ஸ்லோகத்தைப் பற்றி நாயகி ஸ்வாமிகள் இந்த பாட்டில் குறிப்பிடுகிறார்.
பரமபதமுக் வாடேஸ் ஐகி மொந்நூபாப் ஜாய் பஜன கேர் பரமபதமுக் வாடேஸ் ஐகி மொந்நூபரமபதமுக் வாடேஸ் அர்ஜுநுக்சரம ஸ்லோக்ஹால் ஸங்கி ரி:யேஸ்ஹரிமொர நுஜ்வாவுநு நீ:ஸ்தகொ ரி:யேபரமபதமு தேய் தேய் தேயி (நிச்சு)
paramapadhamuk vaatES aiki mo-n-nUpaap jaay bajana kEr paramapadhamuk vaatES aiki mo-n-nUparamapadhamuk vaatES arju-nuksaramaSlOk-haal Sangki ri:yES-harimora nujvaavu-nu nI:Sthako ri:yEparamapadhamu dEy dEy dEyi (-niccu)பரமபதமுக் வாட் ஏஸ் ஐகி மொந்நூ - பரமபதத்திற்கு வழி இதுதான் கேள் மனமே
பாப் ஜாய் பஜன கேர் - பாபம் போகும் பஜனை செய்
பரமபதமுக் வாடேஸ் ஐகி மொந்நூ - பரமபதத்திற்கு வழி இதுதான் கேள் மனமே
பரமபதமுக் வாடேஸ் அர்ஜுநுக் சரம ஸ்லோக்ஹால் ஸங்கி ரி:யேஸ்ஹரி - பரமபதத்திற்கு வழி இதுதான். சரம ஸ்லோகத்தால் அர்ச்சுனனுக்கு ஹரி சொல்லியிருக்கிறான்.
மொர நுஜ்வாவுநு நீ:ஸ்தகொ ரி:யே - மரணம் பிறப்பு என்பவை இல்லாத
பரமபதமு தேய் தேய் தேயி - பரமபதம் கொடுப்பான்; கொடுப்பான்; கொடுப்பான்.
கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமமுக்ருஷ்ணா ராமா மேன் கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமமுகெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமம்தட புத்தி ஸெரொ மிளி கவியாஸ்தென்கொவடபத்ரார்யுநு க்ருபஹால் வாட் அப்பேஸ்நடனகோபால நாயகி ஹொய் து (நிச்சு)
keto -hinggaday srI kESava namamukrushNaa raamaa mEn keto -hinggaday srI kESava namamuketo -hinggaday srI kESava namamthata budhdhi Sero miLi gaviyaaSthenkovatapathraaryu-nu kruba-haal vaat abbES-natanagOpaala naayaki -hoy thu (-niccu)கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமமு - கரையேற்றும் ச்ரீ கேஸவ நாமம்
க்ருஷ்ணா ராமா மேன் - க்ருஷ்ணா ராமா என்று சொல்
கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமமு - கரையேற்றும் ச்ரீ கேஸவன் நாமம்
தட புத்தி ஸெரொ மிளி கவியாஸ்தென்கொ - உருகிய மனத்துடன் பாடியவர்களை
வடபத்ரார்யுநு க்ருபஹால் வாட் அப்பேஸ் - நம் குருநாதராகிய வடபத்ரார்யர் கருணையால் நல்லவழி கிடைத்தது.
நடனகோபால நாயகி ஹொய் து - நடனகோபாலனாம் நம் இறைவனுக்கு நாயகியாய் நீ தினமும் ச்ரீ ஹரி பஜனை செய் மனமே!