Tuesday, January 02, 2007

கண்ணன் எப்போது வருவானடி??



இன்று மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள். மாதங்களின் நான் மார்கழி என்றான் கண்ணன் கீதையில். ஒவ்வொரு மாதத்திலும் மதிநிறைந்த நன்னாள் (பௌர்ணமி) எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அதைக் கொண்டு தான் மாதங்களின் பெயர்களை வைத்திருக்கிறார்கள். மார்கழியில் மதி நிறைந்த நன்னாள் மிருகசீருஷ நட்சத்திரத்தில் வருகிறது. அதனால் வடமொழியில் மார்கழிக்கு மார்க்கஸீருஷம் என்று பெயர். கண்ணனும் கீதையில் 'மாஸானாம் மார்க்கஸீர்சோஹம்' என்கிறான்.

இந்த நன்னாளில் தான் மதுரையின் ஜோதி எனப் போற்றப்படும் ஆண்டாளின் அவதாரம் நவ யுக ஆழ்வார் நடனகோபால நாயகி சுவாமிகள் அவதரித்தார். இந்த நன்னாளில் சுவாமியின் பாடல் ஒன்றை பதிக்க வேண்டும் என்று சிவமுருகன் விரும்பி மின்னஞ்சல் அனுப்பினார். கரும்பு தின்னக் கசக்குமா? உடனே பாடலைப் பதிக்கிறேன்.


சுவாமிகள் நாயகி கோலத்தில்

கண்ணன் எப்போது வருவானடி கலந்து சுகம் பெறவே
நண்ணிய இத்துன்பவினை நாசமதாய் அறவே (கண்ணன்)

எண்ணம் அறிந்தது போலே இன்பம் ஈவானோடி? - ஆ
எண்ணம் இழுத்துக் கொண்டு நம்மோடிருப்பான் கூடி (கண்ணன்)

எண்ணம் இங்கெங்கே இருக்கு? இருடிகேசன் மேலே
எண்ணத் தரமோ அவன் தன் லீலைகள் நம்மாலே (கண்ணன்)

விண்ணவர்களுக்கு அமுதம் விரும்பித் தந்தானேடி
அண்ணலேடி நமக்கு இனிமேல் ஆரேடி போடி (கண்ணன்)

ஐயன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்
பொய்யல்ல மெய் ஈதறிவாய் போயழை நாம் உய்வம் (கண்ணன்)

ஏடி விட்டுப் போனான் இங்கே என் செய்வேன் சந்திர முகியே
போடி அவன் எங்கேயோ நீ போய் அழை என் சகியே (கண்ணன்)

வயிறெரியுது எங்ஙனம் போய் எவரிடத்தில் விழுவேன்
இயம்பிய வார்த்தைகளை நான் எங்ஙனம் சொல்லி அழுவேன் (கண்ணன்)

பொய் உரைப்பானோ உரையாய் பொன்னரங்கன் எம்பால்
பையரவின் மேல் நடித்த பாதனேடி அன்பால் (கண்ணன்)




நடித்த திருவடி பணிந்து நங்காய் அழை போடி
முடித்த முடி அவிழ்த்திட யாரால் முடியும் போடி (கண்ணன்)

கண்ணீர் ஆறாய் பெருக அவன் காணாது சென்றானே
பண்ணிய தவப்பயனோ பரதவிக்கின்றேனே (கண்ணன்)


இராகம்: புன்னாகவராளி
தாளம்: ரூபகம்
பாடலை டி.எம்.எஸ். பாடிக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

Thursday, October 19, 2006

ராதா4 தொகனவெ நாயகி ஸ்வாமின்

ராதா4 தொகனவெ நாயகி ஸ்வாமின்
எழுத்தாளர்: T.S. சரோஜா சுந்தர்ராஜன், கோவை
தூ மது2ராபுரிமு ரி:யெஸ்கி பா3
கோ3குலும் மொய்ரெ ஒயஸு ஜியெஸ்கி பா3
தூ மது3ராக் ஜெயெ பா4டாம் ஜூலோ ப4ந்தி3
அம்ரெ ஸ்ருங்கா3ர் கே2ளும் ஸௌரஸேனிம் க3வ்லி
ப்ரக்ருதிம் பஸுபக்ஷிம் அகாஸ் நெத்3தி3ம்
கீஷ்டு தொய்ரெ அங்க3லெக்ஷண் ஸீலி ஸீலி
வராம் பொ4ரி ரி:யெதொய்ரெ பொ3ங்க்3ஸூ ஜகில்லி
விரக்3டாப் ஸஹன்கெர்லி ஜுலிஸ்கி பா3
தூமது2ரா புரிமு ரி:யஸ்கி பா3
தூமது2ரா புரிமு ரி:யஸ்கி பா3

'ராதா4' நமம் க4லிகின் ஹவ்ட்4யாகி பா3
ப்ரேம் தா3ராகன் தொய்ரெஹோர் கெ3ளீஸ்கி பா3
ஞாந்தே3ன் தொய்ர் ப்ரேவுக் ஜல்னாஸ்தகு
ஞானினும் மேட் ஞானி 'மீஸ் மெனி' மெல்லீஸ்கிபா3
பரமாத்மா தொரெ ஸெரொ ஐக்யம் ஹொனிக்
ஜீவாத்மாமீ க2டெ ஜெலுமுன் ஸங்குஸ்கி பா3

ராதா4 க்ருஷ்ணாக் ஜெய் ஜெய்
ராதா4 க்ருஷ்ணாக் ஜெய் ஜெய்

ஸௌரஸேனி கவிபுருஷ் ஸூர்தா3ஸ் ஹொய்லி
ஸஸர்லாக்2 கவிடான் ராதா4 க்ருஷ்ண ஸ்ருங்கா3ர் லீலான்
3விக3விகின் ஸொம்பு ஹொயெஸ் அந்தர் த்3ருஷ்டிமூ
த்3ருஷ்டுகீன் ஸுர்தாஸுக் லாஜ்நீ: மெந்யாஸி
ஸௌரஸேனி பா4ஷாக் இன்பு பொங்க்3ஸூர் கெர்த்யேஸி
கோ3வர்தன் கிரி த4வ்ராம் அஷ்டசாபுன் ஸெரொ
3விநசிது4ங்கி வைப4வ் ஜிவ்னம் ஜிவேஸி

ஜெய் கோ3வர்தன்கி3ரி ஸ்ரிநாதுக் ஜெய்
ஜெய் கோ3வர்தன்கி3ரி ஸ்ரிநாதுக் ஜெய்

ஸௌரஸேனி சிகுர் பா3ஷா மராட்டி பெ3ய்கன்
மீரா நமம் க4ல்லி க்ருஷ்ணபத்னி மெல்லிஸ்
தொரெ ப4ஜன் க4வ்லேத் வராபோக் ஜியெ ஜீவ்
தமிழ் பா4ஷா ஆண்டா4ள் கொய்லி பாஸுரம் க3விஸி
பு2லெ பூ2லூனும் தொரெஸ்மிதமுக ஸிங்கா3ர் ஸீலி
பூ2லுமாலெ கெ3ளாம் கல்லி தொக34ல்திஸி
ராதா4ஸொகன் கோ3பிகானுக் செர்ச்சிலிஸ்கிபா

மார்க3சீர்ஷொ ம:டொ3 போர் புந்நிம் திந்நுமெநொ
மார்க3சீர்ஷொ ம:டொ3 போர் புந்நிம் திந்நுமெநொ

ஸௌரஸேனி சிகுர்பா4ஷொ ஸௌராஷ்ட்ர கவிகன்
நடன கோ3பால் தொரெ நாயகி3 ஹொய்யேஸ்
ராதா4ஜெலும் ரீ:லி கெரெ மொய்ர்ப4க்தி ஸ்ங்கி3ல்லி
தொர் ந்யாவ் மொர்ந்யாவ் ரஜமன்னார்ஜோள் ஸங்கி3தேஸ்
ராதா4ஜெலும்மு ரி:யெ ஹங்க்ருதி ஜெயெஹால்
ராஜமன்னார் தொக கெ4டி3பொ3வி மொய்ர்ஸெரொ செர்சிதேஸ்
த்4யானும்பிஸி 'ஹரி அவ்டி3யோ' மெல்லெத்கன்
ப்ராண்ஸொட3ன் வேள் கெ3ருட்3 வாஹனோ:ர் பொ3ல்ஜியேஸ்

ஸன்மார்கு3ம் பா4ஷாப4க்திர் ப4ஜன் கெரேதி
வடபத்ர ஸாயி ஜொவள் வடஸே வடஸே

Wednesday, October 18, 2006

ஸ்ரீ இராமனை ...

ஒரு சொல்லை ஓரிரு முறை சொன்னால் அது மறந்து விடுகிறது. ஆனால், அதுவே பல முறை நூறு முறை சொல்லப்படும் போது, அதுவே குணமாக மாறிவிடுகிறது. மாறியகுணம் உங்கள் வாழ்வை மாற்றுகிறது. மாறிய வாழ்வு, உங்கள் சுற்று புறத்தை மாற்றுகிறது. எல்லாவற்றிர்க்கும் ஆரம்பம் நம்மிடம் தான் ஆகவே தான் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் தங்களது மாணவ வம்சாவழிக்கு தரும் ஒரு பெரிய நீதியாக இந்நாமாவளி சொல்லப்படுகிறது.

ஸ்ரீ இராமனை துதிசெய் மனமே
ஸ்ரீ வாமனை கதியென்றிரு தினமே
எமனை அடிக்கும் வில்குணமே
காமனை ஜெயிக்கும்சொல் மனமே


உன்னை காக்க அந்த நாராயணனின் அவதாரமான இராமனே வரவேண்டும் ஆகவே அவனை துதிசெய்.
உன்னை காக்க அந்த நாராயணனின் அவதாரமான வாமனனே வரவேண்டும் அவனை கதி என்று இரு.
ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்த இராமனது அறம் (குணம்) தான் எமனையும் காமனையும் வெற்றி கொள்ளும் அறம் ஆகவே அவனை சொல் (வணங்கு), அவனது புகழ் பாடுவாய்.

Monday, August 21, 2006

கருடாருட வாகனத்தில் அந்த அரங்கனை...

கருடாருட வாகனத்தில் அந்த அரங்கனை கண்டால் அடுத்த வினாடியே அவன் வைகுண்ட வாசம் பெருகிறான், அப்பேற்பட்ட பேற்றை பெற என்ன வழி என கேட்ப்பவர்களுக்கு சுவாமிகள் தரும் ஒரு அறிவுரையாக, இப்பாடலை பாடியுள்ளார்.

இப்பாடல் தமது சங்கீத குரலில் திரு. ராமரத்தினம் அவர்கள் பாடியுள்ளார்.



இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி
பொ3வொ
ஆரபி4 ராகு
ஆதி3 தாளு
பல்லவி
இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி பொ3வொ
பிஸொ திரிஜாய் பாப் ஜாயி (இஸொ)


அநுபல்லவி
நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)


சரணு
மகெ3 வரமுனு தே3ய் மாத4வா ஹரி மெனொ
கொகொ3 பு4க்கொ ஸுக்கரி:யாஸ்
சொக்கட்க3தி தே3 ஹரி சூகுன் அண்சிலெமெனொ
தெ3க்கெதா4நுக் ஹிண்டெ3த் தே3வ் க்ருப கோனக்கரய் (இஸொ)

அக்கரகன் ஸெரிர் ஹிப்பி3ரா:னா து4ளிஜாய் ஸ்ரீ
ஜானகி ரமணா மெனொ
ஜானா பாப் அஸ்கி ஜாய் ஜல்வொ ஸ்ரீ ஹரி பத3ம்
தே3னாவ்மெனி பொ3வ்னாஜியேத் தே3வ் க்ருப கோனக்கரய்(இஸொ)

வட அப்ப3யி ஸ்ரீ வைகுண்டும் மெனி அம்ர
வடபத்ரார்யுநு வசிரி:யாஸ் ஸ்ரீ
நடனகோ3பால ஸ்ரீ நரஹரிமெனி நசொ
தி4டவ்கன் கெ3ருடோ4ர் அவி தே3வ் க்ருப கரய் கரய் (இஸொ)


இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி பொ3வொ
பிஸொ திரிஜாய் பாப் ஜாயி (இஸொ)

நித்தமும் சர்வகாலமும் கேஸவா என அழையுங்கள்
பித்தம் தெளியுமே பாவம் தொலையுமே

அநுபல்லவி
நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)

ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்


சரணு

மகெ3 வரமுனு தே3ய் மாத4வா ஹரி மெனொ
கொகொ3 பு4க்கொ ஸுக்கரி:யாஸ்
சொக்கட்க3தி தே3 ஹரி சூகுன் அண்சிலெமெனொ
தெ3க்கெதா4நுக் ஹிண்டெ3த் தே3வ் க்ருப கோனக்கரய் (இஸொ)

கேட்ட வரமளிப்பான் கேஸவா என்று சொல்லுங்கள்
ஏன் பட்டினி கிடக்கிறீர்கள்
நல்ல கதி தந்திடுவென ஹரி குற்றங்களை பொருத்திட சொல்லுங்கள்
கண்டபடி அலைந்தால் கண்ணன் எப்படி கருணை புரிவான்

அக்கரகன் ஸெரிர் ஹிப்பி3ரா:னா து4ளிஜாய் ஸ்ரீ
ஜானகி ரமணா மெனொ
ஜானா பாப் அஸ்கி ஜாய் ஜல்வொ ஸ்ரீ ஹரி பத3ம்
தே3னாவ்மெனி பொ3வ்னாஜியேத் தே3வ் க்ருப கோனக்கரய்(இஸொ)

நிலைபெயாராது இவ்வுடல் நிற்க்காது உருண்டோடும் ஸ்ரீ
ஜானகி ரமணா என சொல்லுங்கள்
தொலையாத பாபமும் தொலைந்தோடும் ஹரியின் பாதார விந்தத்தை
தரசொல்லி அழைக்காமலிருந்தால் அவனெப்படி கருணை புரிவான்

வட அப்ப3யி ஸ்ரீ வைகுண்டும் மெனி அம்ர
வடபத்ரார்யுநு வசிரி:யாஸ் ஸ்ரீ
நடனகோ3பால ஸ்ரீ நரஹரிமெனி நசொ
தி4டவ்கன் கெ3ருடோ4ர் அவி தே3வ் க்ருப கரய் கரய் (இஸொ)

வைகுண்டத்தில் நமக்கும் இடம் கிடைக்கும் என நம்
வடபத்திரர் சொல்லியுள்ளார் ஸ்ரீ
நடன கோபலனே, நரஹரியே என பாடி ஆடுங்கள்
கட்டாயமாக கருடாருட வாகனத்தில் வந்து காட்சி தந்து கருணை புரிவான்

பல்லவி
நித்தமும் சர்வகாலமும் கேஸவா என அழையுங்கள்
பித்தம் தெளியுமே பாவம் தொலையுமே. (நித்தம்)

அநுபல்லவி

ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்(நித்தம்)

சரணு

கேட்ட வரமளிப்பான் கேஸவா என்று சொல்லுங்கள்
ஏன் பட்டினி கிடக்கிறீர்கள்
நல்ல கதி தந்திடுவென ஹரி குற்றங்களை பொருத்திட சொல்லுங்கள்
கண்டபடி அலைந்தால் கண்ணன் எப்படி கருணை புரிவான்(நித்தம்)

நிலைபெயாராது இவ்வுடல் நிற்க்காது உருண்டோடும் ஸ்ரீ
ஜானகி ரமணா என சொல்லுங்கள்
தொலையாத பாபமும் தொலைந்தோடும் ஹரியின் பாதார விந்தத்தை
தரசொல்லி அழைக்காமலிருந்தால் அவனெப்படி கருணை புரிவான்(நித்தம்)

வைகுண்டத்தில் நமக்கும் இடம் கிடைக்கும் என நம்
வடபத்திரர் சொல்லியுள்ளார் ஸ்ரீ
நடன கோபலனே, நரஹரியே என பாடி ஆடுங்கள்
கட்டாயமாக கருடாருட வாகனத்தில் வந்து காட்சி தந்து கருணை புரிவான் (நித்தம்).

Thursday, August 17, 2006

நாராயணன் திருநாமம் மிகப்பெரிய விருந்து


ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளை, பலர் உற்றார் உறவினர்களுக்கு ஆசி கூறவும் அதனையே ஒரு சாக்காக நல்ல சாப்பாடு சாப்பிடவும் வைப்பது என்று தமது விருந்து வைபவங்களில் பலர் அழைப்பதுண்டு. சாதாரணமாக எவ்வித பிரமச்சாரிகளும் இது போன்ற வைபவங்களை தவிர்ப்பர், அப்போது ஏற்படும் ஒரு தர்மசங்கடமான நிலையை சமாளிக்க தமது சீடர்களுக்கும் இப்பாடலை பாடி அறிவுரை சொல்லியும், தம் பிரமச்சாரிய தர்மத்தை காக்கும் படியும் சொல்வார்.

இப்பாடலில் வரும் ஒருரிரு வரிகளை பாடும் சமயத்தில், அவரது பக்தி ரசம், பக்தி சாப்பாடு ஆவதை காணலாம். ஹரி நாமம் ஒரு இனிய பழம் என்றவர், இனிய மிட்டாய் என்றவர், இப்பாடலில் அந்த ஆழிமழைகண்ணனின் திருநாமம் ஒரு பெரிய விருந்து உணவு என்றும், இனிய பழங்களில் கூட்டு என்றும், இனிய இனிப்புகளின் ஒரு கூட்டுப்படைப்பு என்றும், தமக்கு வீடு, பணம், நகை போல் உள்ளது என்றும், உண்டபின் எடுத்துகொள்ளப்படும் பூ, சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது என்றெல்லாம் பாடினாலும் நரகத்தை தவிர்க்கும் மார்கத்தையும், தமது குருநாதரை வணங்குவதையும் தவறவிடுவதில்லை சுவாமிகள். இப்பாடல் சுவாமிகளின் எல்லா பாடல்களின் ஒரு தொகுப்பு பாடலாக காணப்படுகிறது.

இப்பாடலை திரு டி.எம்.எஸ். அவர்களும், திரு. டி.எம். சந்திரசேகர் அவர்களும் பாடியுள்ளனர்.

தா3ள் தூப்ஸெரொ பா4த் ஜெமெஸொகன் ஸே ஸ்ரீ
தா3மோதர நமமு புஜா
போ2ள் கராஸ்தெங்கோ ஸப்பை3 யே நமமு

பாப்ஜாய் யே ஐகோ பஸெம்ஸொகன் ஸே ஸ்ரீ
கோ3பால ஹரி நமமு
பாபிநுகப்பை3கி யே நமமு

கெளொ நரெள் ஸெக்கர்குஸ்ரி க2யெஸொகன் ஸே ஸ்ரீ
கேஸவ ஹரி நமமு
கிர்தாப் தே3ரேஸ் யே நமமு

கு3ள்ளெ பொள்ளாநஸ்கி மிவ்ளெ கு3ள்ளெஸொகன் ஸே ஸ்ரீ
கோ3விந்த3 ஹரி நமமு
து3ர்கு3ண்ணுனு மரிதகய் யே நமமு

ஸெக்கர் தூ3துமிவ்ளி ஸோகுக்க2ள்யெ ஸொகன் ஸே ஸ்ரீ
ஸங்கு சக்ரதா4ரி நமமு
ஸிள்ளொ கா3ம்தே3ய் யே நமமு

சொக்கட்மி:டாய் ஜுக்கு ஜுக்கு க2யெஸொகன் ஸே ஸ்ரீ
சொவ்த் லோக் பொ4ரெ ஹரி நமமு
சூக் ஸாநா யே நமமு

கே4ர:ந்நவ் ஸொம்மு ஹொய்ரி:யெஸ் மொகொ
கெ3ருடோ4ரவய் ஹரி நமமு
கே4ர் அவைகி ஸெரொ அவை யே நமமு

பூ2ல் ஸிர்க்கண் பான:ப்பள் ஸொகன் ஸே லொ:வ்வத3மர்
பூ2ல் பதா3ல் ஹரி நமமு
ஜெலுமவ்நா பொஸயி யே நமமு

நரகுஜானார:வாய் யே ஜநி க3வேத் ஸ்ரீ
நடனகோ3பால நமமு
விர்ஜாநெத்தி3க் பொ3ல்ஸொடை3 யே நமமு

வடபத்ரார்யுநு மொகொ க்ருப கராஸ்
வைகுண்டு வாடு நமமு
வாட்சலேத் ஸுக2ம் தே3ய் யே நமமு


தா3ள் தூப்ஸெரொ பா4த் ஜெமெஸொகன் ஸே ஸ்ரீ
தா3மோதர நமமு புஜா
போ2ள் கராஸ்தெங்கோ ஸப்பை3 யே நமமு


பருப்பு நெய் கலந்து உண்டது போல் உள்ளது
ஸ்ரீ தாமோதரனின் திருநாமம் – பூஜை
செய்து வாழ்பவர்க்கே கிடைக்கும் இத்திருநாமம்

பாப்ஜாய் யே ஐகோ பஸெம்ஸொகன் ஸே ஸ்ரீ
கோ3பால ஹரி நமமு
பாபிநுகப்பை3கி யே நமமு


பாவம் தொலையும் கேளுங்கள் பாயசம் போலிருக்கே ஸ்ரீ
கோபாலன் ஹரி இத்திருநாமம்
பாபிகளுக்கிடைக்குமோ இத்திருநாமம்

கெளொ நரெள் ஸெக்கர்குஸ்ரி க2யெஸொகன் ஸே ஸ்ரீ
கேஸவ ஹரி நமமு
கிர்தாப் தே3ரேஸ் யே நமமு


வாழைப்பழம் தேங்காய் கலந்து உண்டது போலிருக்கே ஸ்ரீ
கேஸவ ஹரியின் நாமம்
கருணை தருகிறதே இத்திருநாமம்

கு3ள்ளெ பொள்ளாநஸ்கி மிவ்ளெ கு3ள்ளெஸொகன் ஸே ஸ்ரீ
கோ3விந்த3 ஹரி நமமு
து3ர்கு3ண்ணுனு மரிதகய் யே நமமு


இனிய பழங்களை ஒன்றான இனிமையை கொண்டுள்ளது ஸ்ரீ
கோவிந்த ஹரியின் நாமம்
கெட்ட குணங்களை கொன்று போடிடும் இத்திருநாமம்

ஸெக்கர் தூ3துமிவ்ளி ஸோகுக்க2ள்யெ ஸொகன் ஸே ஸ்ரீ
ஸங்கு சக்ரதா4ரி நமமு
ஸிள்ளொ கா3ம்தே3ய் யே நமமு


சக்கரை பால் கலந்து தாகத்தைத் தணித்தது போல் உள்ளது ஸ்ரீ
சங்கு சக்ரதாரியின் நாமம்
குளுமையான ஊரைத் தரும் இத்திருநாமம்

சொக்கட்மி:டாய் ஜுக்கு ஜுக்கு க2யெஸொகன் ஸே ஸ்ரீ
சொவ்த் லோக் பொ4ரெ ஹரி நமமு
சூக் ஸாநா யே நமமு

நல்ல மிட்டாய்களை அதிநிறைய உண்டது போல் உள்ளது ஸ்ரீ
பதினான்கு உலகில் நிரம்பிய ஹரியின் நாமம்
குற்றம் பொருக்குமே இத்திருநாமம்

கே4ர:ந்நவ் ஸொம்மு ஹொய்ரி:யெஸ் மொகொ
கெ3ருடோ4ரவய் ஹரி நமமு
கே4ர் அவைகி ஸெரொ அவை யே நமமு


வீடு, பணம், நகை ஆகவுள்ளது எனக்கு
கருடவாகனன் ஹரியின் நாமம்
வீடுபேறு கிடைக்க செய்யும் இத்திருநாமம்

பூ2ல் ஸிர்க்கண் பான:ப்பள் ஸொகன் ஸே லொ:வ்வத3மர்
பூ2ல் பதா3ல் ஹரி நமமு
ஜெலுமவ்நா பொஸயி யே நமமு

மலர், சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது செந்தாமரை
மலர் தாளினை கொண்ட ஹரியின் நாமம்
ஜென்மம் எடுப்பதை துடைத்து போடும் இத்திருநாமம்


நரகுஜானார:வாய் யே ஜநி க3வேத் ஸ்ரீ
நடனகோ3பால நமமு
விர்ஜாநெத்தி3க் பொ3ல்ஸொடை3 யே நமமு


நரகத்தை தவிற்கலாம், அறிந்து பாடினால் ஸ்ரீ
நடன கோபாலனின் நாமம்
விர்ஜை நதிக்கு கொண்டு போய்விடும் இத்திருநாமம்

வடபத்ரார்யுநு மொகொ க்ருப கராஸ்
வைகுண்டு வாடு நமமு
வாட்சலேத் ஸுக2ம் தே3ய் யே நமமு


வடபத்திரர் எனக்கு கருணை புரிந்துள்ளார்
வைகுண்ட வழி இத்திருநாமம்
வழியில் இன்பங்களை பல தந்துள்ளன இத்திருநாமம்.


பருப்பு நெய் கலந்து உண்டது போல் உள்ளது ஸ்ரீ
தாமோதரனின் திருநாமம் – பூஜை
செய்து வாழ்பவர்க்கே கிடைக்கும் இத்திருநாமம்

பாவம் தொலையும் கேளுங்கள் பாயசம் போலிருக்கே ஸ்ரீ
கோபாலன் ஹரி இத்திருநாமம்
பாபிகளுக்கிடைக்குமோ இத்திருநாமம்

வாழைப்பழம் தேங்காய் கலந்து உண்டது போலிருக்கே ஸ்ரீ
கேஸவ ஹரியின் நாமம்
கருணை தருகிறதே இத்திருநாமம்

இனிய பழங்களை ஒன்றான இனிமையை கொண்டுள்ளது ஸ்ரீ
கோவிந்த ஹரியின் நாமம்
கெட்ட குணங்களை கொன்று போடிடும் இத்திருநாமம்

சக்கரை பால் கலந்து தாகத்தைத் தணித்தது போல் உள்ளது ஸ்ரீ
சங்கு சக்ரதாரியின் நாமம்
குளுமையான ஊரைத் தரும் இத்திருநாமம்

நல்ல மிட்டாய்களை அதிநிறைய உண்டது போல் உள்ளது ஸ்ரீ
பதினான்கு உலகில் நிரம்பிய ஹரியின் நாமம்
குற்றம் பொருக்குமே இத்திருநாமம்

வீடு, பணம், நகை ஆகவுள்ளது எனக்கு
கருடவாகனன் ஹரியின் நாமம்
வீடுபேறு கிடைக்க செய்யும் இத்திருநாமம்

மலர், சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது செந்தாமரை
மலர் தாள் ஹரியின் நாமம்
ஜென்மம் எடுப்பதை துடைத்திடும் இத்திருநாமம்

நரகத்தை தவிற்கலாம், அறிந்து பாடினால் ஸ்ரீ
நடன கோபாலனின் நாமம்
விர்ஜை நதிக்கு கொண்டு போய்விடும் இத்திருநாமம்

வடபத்திரர் எனக்கு கருணை புரிந்துள்ளார்
வைகுண்ட வழி இந்நாமம்
வழியில் இன்பங்களை பல தந்துதிருக்குமே இத்திருநாமம்.

இப்பதிவு "மதுரையின் ஜோதி" பதிவின் ஐம்பதாவது பதிவு, என்னுடைய இருநூற்றி ஐம்பாதவது பதிவுமாகும்.

Tuesday, August 15, 2006

எனக்கெப்போது கருணை புரிவாய்...

கண்ணனை மனமுருகி அழைப்பதில் ஸ்ரீமந்நாயகி சுவாமிகளுக்கு நிகர் அவரே.

கண்ணனை அழைப்பவர், தான் மட்டும் அழாமல் அந்த கண்ணனையே சில சமயங்களில் அழவைத்துவிடுவார். அப்படி ஒரு பாடலை பாடி அவரது சீடர்கள் பலர் அழுது தொழுத பாடல். ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் ஒரு பாடல். இப்பாடலை ஸ்ரீமந்நாயகி சுவாமிகள் சங்கீத சமிதியை சேர்ந்த இருபத்தைந்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் (S.P. கீதா பாரதி குழுவினர்) குழுவாக பாடியுள்ளனர்.


கண்ணினு
மொக் கொ2ப்பா3க் க்ருபகரநவஸ்தெ---மொர
பாபுந் கொ2ப்பா3க் து4வை ஜாஸ்தெ ஹரி

தொக் கொ2ப்பா3கு யேடவாஸ்தெ---தொர
மொந்மொர்ஹோர் கொ2ப்பா3க் ஹுத்ரஸ்தெ ஹரி

களதெ3க்ட3ஹா தொர மொந்நு---மீ
காய்கரு தொகொ யே காய் கு3ண்ணு ஹரி

ஸொளஹோஸ்தெ கொ2ப்பா3க்மோ தி3ந்நு--தொகொ
ஸொண்ணாரி:யேஸ் ஏ மொர் கு3ண்ணு ஹரி

கு3ண்ணுனு மரி சொக் கு3ண்ணு தே3---தே3
கோ3விந்தா3 கோ3பாலா பதா3ல் தே3 தே3

தி3ந்நுன் கோ3 ஜாரேஸ் ஸேவ தே3---தே3
ஸ்ரீ தே3வு தொர்நாவுக் உடாவ் தே3 தே3

தே3மெனி மக3ரி:யெ மொகொ தூ---ஸேவ
தே3நாஜியெத் காய்ஹோய் லோகுர் தூ

ஸாமெனி மெநொரி:யெ மொக தூ---தொ3ளர்
ஸாநாஜியெத் காய்மெனய் ஜக3த் தூ

ஜக3துர்மொக தூ ஹாத்ஸொட3ன் ஹோய்கி--ஜெநெ
மாய் நு:க்ருக் மரி தொ3வ்ட3ன் ஹோய்கி ஹரி

ஹொக3த் தொர நமம்விநா ஸேகி---ஹோய்கி
மொரஹோர் தொகொ ராக் கொக3ஹால்கி ஹரி

ராக் தெ2வெத் மீ சொக்கடொ4வுகி---ஸ்ரீ
ராமா தொகொ கொ2ப்பா3க் ஸவுகி மீ தூ

யோக் ஹொய்லஸ்தெ கோந் கலம்கி---தூ
யோசன கர்லேத் ரி:யெஸ்தெ கொக3கி ஹரி

து3ஸ்ர ஹட்வுநொகரே---க்ருஷ்ணா
தொரநமம் மொகொ தூ3த்ஹொய்ரி:யெஸ்ரே ஹரி

பிஸொ தெ4ரஸ்திஸொ ஸாரே---த்யே
பிஸொ தெ4ர்நாஸ்தெக காய் ஸுக2ம்ஸேரே ஹரி

ஸுக2ம் தே3நவயி மெல்லி மீ ரி:யெஸி---
ஸோத3ன கர்லேத் தூ ரி:யெஸி ஹரி

யெகஸ்ஹா மீ தொகொ தா3ஸொ:யெஸ்தெ--- ஹரி
யேஸ்ஹா மொர ப்ராப்தமு ஸேஸ்தெ ஹரி

தீ3ஸ் நிக்ளெத் ஹந்தா3ர் ஜ:கில்ராய்கி---தே3வூ
தொர கிர்பகெது3ர் கர்முனு ரா:ய்கி ஹரி

தூ விநா து3ஸர் கோந்தி ஸேகீ---தொர
மாயா கட்வென் மொரஹால் ஹோய்கி ஹரி

கடிஹேடி3 யே கர்முநு மூளு---மீ
காய்கருயே லோக் தொரெ கே2ளு ஸ்ரீ

நடனகோ3பாலா கோ3 பீளு க4ல்நக
நசி க3வஸ்தகோஸ் ஏ வேளு



மொக் கொ2ப்பா3க் க்ருபகரநவஸ்தெ – எனக்கு எப்போது கருணை புரிவாய் மொர பாபுந் கொ2ப்பா3க் து4வை ஜாஸ்தெ ஹரி – என் பாபங்கள் எப்போது தீரும், ஹரி

தொக் கொ2ப்பா3கு யேடவாஸ்தெ – நீ எப்போது இங்கு வரப்போகிறாய்
தொர மொந்மொர்ஹோர் கொ2ப்பா3க் ஹுத்ரஸ்தெ ஹரி – நீ என்பால் எப்போது மனமிறங்கப் போகிறாய்

களதெ3க்ட3ஹா தொர மொந்நு – கரிய கல்லோ உன் மனம்
மீ காய்கரு தொகொ யே காய் கு3ண்ணு ஹரி – (அப்படி இருந்து விட்டால்) நான் என்ன செய்வேன் ஏன் இப்படி பட்ட குணமுனக்கு.

ஸொளஹோஸ்தெ கொ2ப்பா3க்மோ தி3ந்நு- எப்போது விடியுமோ என் இருண்ட நாட்களில்

தொகொ ஸொண்ணாரி:யேஸ் ஏ மொர் கு3ண்ணு ஹரி – உன்னை விடாமல் இருப்பதே என் குண்மாகும் ஹரி

கு3ண்ணுனு மரி சொக் கு3ண்ணு தே3 - தீய குணங்களை கொண்று நற்குணங்களை அருள்வாய்
தே3 கோ3விந்தா3 கோ3பாலா பதா3ல் தே3 தே3 – கோவிந்தா கோபாலா உன் பாதார விந்தத்தை அருள்வாய்

தி3ந்நுன் கோ3 ஜாரேஸ் ஸேவ தே3- நாட்கள் கரைந்தோடுகிறதே அருள்வாய்
தே3 ஸ்ரீ தே3வு தொர்நாவுக் உடாவ் தே3 தே3 – ஒளிகுறையாத தெய்வமே உன் பெயரை அருள்வாய்

தே3மெனி மக3ரி:யெ மொகொ தூ- நீ என்னை தரச்சொல்லி கேட்கிறாயோ
ஸேவ தே3நாஜியெத் காய்ஹோய் லோகுர் தூ – சேவை தராவிட்டால் உலகில் என்னவாகும்

ஸாமெனி மெநொரி:யெ மொக தூ- நீ பாரென்று சொல்கிறாய் என்னை தொ3ளர் ஸாநாஜியெத் காய்மெனய் ஜக3த் தூ – நீ உலகில் இருந்தும் என் கண்கள் காணாவிட்டால் இந்த உலகம் என்ன சொல்லும்.

ஜக3துர்மொக தூ ஹாத்ஸொட3ன் ஹோய்கி – இவ்வுலகின் என்னை கைவிடலாமோ ஹரி
ஜெநெ மாய் நு:க்ருக் மரி தொ3வ்ட3ன் ஹோய்கி ஹரி – பெற்ற தாய் பிள்ளையை கொல்வாளோ ஹரி...

ஹொக3த் தொர நமம்விநா ஸேகி – உன்நாமம் அன்றி வேறு மருந்தும் உள்ளதோ?
ஹோய்கி மொரஹோர் தொகொ ராக் கொக3ஹால்கி ஹரி – என்மீது கோபம் எதனாலோ ஹரி...

ராக் தெ2வெத் மீ சொக்கடொ4வுகி – கோபங்கொண்டால் நான் நன்றாக இருப்பேனோ?
ஸ்ரீ ராமா தொகொ கொ2ப்பா3க் ஸவுகி மீ தூ – ஸ்ரீராம எப்போது உன்னை நான் காண்பேனோ? ஹரி...

யோக் ஹொய்லஸ்தெ கோந் கலம்கி – ஒன்றாகும் நாள் எக்காலமோ
தூ யோசன கர்லேத் ரி:யெஸ்தெ கொக3கி ஹரி – நீ யோசனை செய்வது எதனாலோ ஹரி...

து3ஸ்ர ஹட்வுநொகரே – உன்னையன்றி வேறு சிந்தனை வேண்டாமைய்யா
க்ருஷ்ணா தொரநமம் மொகொ தூ3த்ஹொய்ரி:யெஸ்ரே ஹரி – கிருஷ்ணா உன் திருநாமம் எனக்கு பாலாகி (அமுதமாகி) இருந்ததைய்யா. ஹரி...

பிஸொ தெ4ரஸ்திஸொ ஸாரே – பித்து பிடித்தது போல் இருக்கிறதே
த்யே பிஸொ தெ4ர்நாஸ்தெக காய் ஸுக2ம்ஸேரே ஹரி – அந்த பித்தம் பிடிக்காமல் என்ன சுகமுண்டோ – ஹரி...

ஸுக2ம் தே3நவயி மெல்லி மீ ரி:யெஸி – நீ சுகமளிப்பாய் என நானிருந்தேன்
ஸோத3ன கர்லேத் தூ ரி:யெஸி ஹரி – நீ சோதனை தந்துகொண்டிருந்தாய் - ஹரி...

யெகஸ்ஹா மீ தொகொ தா3ஸொ:யெஸ்தெ – இதற்காகவா நானுன் தாஸனானேன்
ஹரி யேஸ்ஹா மொர ப்ராப்தமு ஸேஸ்தெ ஹரி – இல்லை இது தான் என் பிராப்தமோ என்னவோ. ஹரி...

தீ3ஸ் நிக்ளெத் ஹந்தா3ர் ஜ:கில்ராய்கி – சூரியன் வந்தால் இருள் நிற்க்குமோ?
தே3வூ தொர கிர்பகெது3ர் கர்முனு ரா:ய்கி ஹரி - உன் கருணைக்காக எத்தனை வினைகளை தாங்கனுமோ?

தூ விநா து3ஸர் கோந்தி ஸேகீ – உன்னையன்றி வேறு யவரேனுமுண்டோ
தொர மாயா கட்வென் மொரஹால் ஹோய்கி ஹரி – உன் மாயையை அறுக்க வேறு யவருமுண்டோ? ஹரி...

கடிஹேடி3 யே கர்முநு மூளு – அறுத்தெரிவாய் வினைபயனை
மீ காய்கருயே லோக் தொரெ கே2ளு ஸ்ரீ – நான் என் செய்வேன் உலகே உன் மேடை ஸ்ரீ...

நசி க3வஸ்தகோஸ் ஏ வேளு – உன்னை பாடி ஆடுபவர்களுக்கு இப்போது
நடனகோ3பாலா கோ3 பீளு க4ல்நக – நடன கோபாலா தடைகளை போடாதே.

Monday, August 14, 2006

சீதாராமா என்னை பாரப்பா...

ஸீதாராம் தொ3ளர் ஸெய்லெ ராம்
ஸேவொ மொகொ தூ தீ3டெ3 ராம்
ஏ ஜெகதுர் தொ2வி கே2ள் கெந்நொக ராம்
ஏ ஜென்மு க23ன் ஸெக்காநி ராம் [ஸீ]


சீதா ராமா எம்மை பார் ராமா,
சேவை எனக்கு தந்திடு ராமா,
இந்த உலகில் என்னை வைத்து விளையாடாதே ராமா,
இந்த ஜென்ம கடனை தாங்க முடியவில்லையே ராமா.

சீதைக்கு அனுகிரகமளித்தவனே எம்மையும் அனுகிரகிப்பாய்,
சேவை தந்து என்னையும் ஒரு மனிதனாக்கிடுவாய். இந்த உலகமானது பெண்ணிற்க்கு எப்படி புகுந்த வீடோ அப்படி எனக்கும் சற்று சலனமாக உள்ளது, அப்பேற்பட்ட ஒரு இடத்தில் வைத்து என்னை உன் திருவிளையாட்டிற்க்கு ஆளாக்காதே, சீக்கிரம் என்னை உன்னடியில் சேர்த்துக்கொள். இந்த கடன் என்னால் சகிக்க முடியவில்லை, தாங்க முடியவில்லை. சீக்கிரம் உன் சேவை தருவாய் ராமா.