Monday, July 31, 2006

மனமே என்னை மோசம் செய்யாதே...

கண்ணினு
மொன்னுபா3ரே மொக மோஸ்கர்நகொரே தொக
புன்னவயிரே ஜு:க்கு தி3ந்நு ர:வ்வாய்ரே [மொ]

ஜானகொரே த4மி ஜானொகொரே தூ
ஸானகொரே ஸங்கே3 தா4னுகைகிரே [மொ]

ஹிப்பி3ரா:ரே மொன்னு ஹிப்பி3ரா:ரே தொகொ
கொ2ப்பி ஹல்லுநா பத3ம் ஹரி தே3யிரே [மொ]

தி3ந்நுஜேட3ரேஸ் எமாக் கு3ண்ணு கைநீ:ரே மொக
மோஸ்கரொரேஸ் தொகொ ஸெர்கநா:ரே [மொ]

வடஸேரே அம்கொ வடஸேரே அம்ரெ
வடபத்ரஸாயி ஜொவள் வடஸேரே [மொ]

கெட்டராவ்ரே தெங்க்3ள கெட்டராவ்ரே ஸ்ரீ
நடனகோ3பால நாயகி ஹொய்லுவாய்ரே [மொ]

கண்ணினு
மொன்னுபா3ரே மொக மோஸ்கர்நகொரே தொக
புன்னவயிரே ஜு:க்கு தி3ந்நு ர:வ்வாய்ரே [மொ]

மனமென்ற ஐயா என்னை மோசம் செய்யாதே, உனக்கு
புண்ணியம் கோடி, பல காலம் வாழலாம்

ஜானகொரே த4மி ஜானொகொரே தூ
ஸானகொரே ஸங்கே3 தா4னுகைகிரே [மொ]

போகாதே (என்னை விட்டு) ஓடாதே ஐயா நீ
பார்க்காதே (முறைக்காதே), சொன்னதை கேள்ளையா.

ஹிப்பி3ரா:ரே மொன்னு ஹிப்பி3ரா:ரே தொகொ
கொ2ப்பி ஹல்லுநா பத3ம் ஹரி தே3யிரே [மொ]

நில்லைய்யா மனமே நில்லப்பா, நீ
நிலைக்க செய்யும் நிலையை ஹரி தருவானைய்யா.

தி3ந்நுஜேட3ரேஸ் எமாக் கு3ண்ணு கைநீ:ரே மொக
மோஸ்கரொரேஸ் தொகொ ஸெர்கநா:ரே [மொ]

நாட்கள்கள் கழியுதையா, எமன் வேறு அறியாதவனையா, என்னை மோசம் செய்கிறாய், உனக்கு சரியில்லைய்யா.

வடஸேரே அம்கொ வடஸேரே அம்ரெ
வடபத்ரஸாயி ஜொவள் வடஸேரே [மொ]

இடம் உண்டையா நமக்கு இடம் உண்டைய்யா
நம் வடபத்திர ஸாயிடம் இடம் உண்டைய்யா.
கெட்டராவ்ரே தெங்க3 கெட்டராவ்ரே ஸ்ரீ
நடனகோ3பால நாயகி ஹொய்லுவாய்ரே [மொ]

கரையேறைய்யா அவரது கரையேறைய்யா ஸ்ரீ
நடனகோபால நாயகி(பக்தன்) ஆகலாமைய்யா.

Saturday, July 29, 2006

அடையுங்கள் அடையுங்கள்



நேற்றைய பதிவின் தொடர்ச்சி,

மிடியாரிருவினைகள் பொடியாம் மேலாமிடமேறப் படியாம்
நெடியோனடி குடியாம் நீங்கா செல்வத்துக்கடியாம்
படிவாழ்வதென அப்படி அலையாமல்
அடியார் மகிழ் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இவ்வுலக அடியார்களின் இருவினைகளும் தீர்ந்துவிடும், விண்மண் மண் அளந்த நெடியோனின் அடியார் குடியாம், குறையாத செல்வத்துக்கு அடித்தளமாம், அதன்படி தான் வாழ்கிறோம் என்று திரியாமல், அடியார்கள் கூடி மகிழும், திருவல்லிபுத்தூரதினில் சென்று ஆண்டாளின் பாதகமலங்களை பற்றி கொள்ளுங்கள்.

துன்பவினை ஓடி வரும் துணை தொண்டரருள் கிருபை நாடி வரும்
இன்பகவி பாடவரும் ஹிருதயம் ஒளிவுதயமாகும்
துன்ப சரீர போகம் இன்பமென்றடையாமல்
அன்பர்குழாம் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

துன்பவினைகள் உங்களை நோக்கி ஓடி வரும் அதை தடுக்க, அதன் பாதயிலுருந்து அகன்று தொண்டரருளை துணையாக கொண்டு விட்டால், அவனடியார்கள் கிருபை நாடி வரும், நீங்களும் பன்னெடுத்து பாடலாம், உங்கள் உள்ளத்தில் தெளிவும், ஒளியும் பிறக்கும், துன்பங்கொண்ட சரீரத்தால் போகத்தை நிலையான இன்பம் என்று இருக்காமல், அடியார் குழாத்துடன், ரெங்கமன்னர் வழும் தலமாம் திருவல்லிப்புத்தூர் தன்னில் சரணடையுங்கள்.

வித்தமதருளும் கைசேரும் விளையும் துன்பவினை தீரும்
நித்தமும் கைங்கர்யம் நேரும் நெஞ்சமதிலே வஞ்சம் தீரும்
பித்தமர் உலகுதனில் திரிந்தலையாமல்
அத்தன் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வித்தைகளை தினமும் அருளி கைகூடவைக்கும், விளைகின்ற துன்பவினைகள் தீரும், நித்தமும் பகவத் கைங்கர்யம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும், நெஞ்சத்தில் உள்ளத்தில் ஏற்படும் அழுக்கான அழுக்காறு, வஞ்சங்கள் தீர்ந்து விட செய்யும். துன்ப வினைகள் கொண்ட பித்தத்துடன் இந்த உலகில் திரியாமல், அத்தனையும் செல்வங்களும் தரும் திருவல்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள்.

வடபத்ராரியர் அருள்பெறலாம் மலராள் சந்நதிக்கே பெறலாம்
நடனகோபாலன் கிருபை பெறலாம் நாயகியார் எனும் பேர் பெறலாம்
சடலமதை நம்பி கெட்டலையாமல்
திடவில்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வடபத்ரரின் அருள்பெறலாம், மலராளாம், பூமகளின் திருஅவதாரமாம் ஆண்டாளின் சந்நதியை அடைந்தாள் அவை அனைத்தும் பெறலாம், உயிருள்ள சடலமான இவ்வுடலை நம்பி கெட்டலையாமல், உண்மையான-திடமான நம்பிக்கை தரும் திருவல்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள்.

தமிழக அரசின் சின்னத்திலும் இத்திருவல்லிபுத்தூரின் கோவிலின் கோபுரம் இடம்பெற்றிருப்பது குறிபிடத்தக்கது.

Friday, July 28, 2006

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி

ஒருமுறை நாயகி சுவாமிகளின் வரகவிதுவத்தை ஆண்டாள் நாச்சியார் கேட்க எண்ணி அவர் கனவில் தோன்றி, தம்மை திருவில்லிபுத்தூரில் தம்மை சந்திக்கும்படி வேண்டியதை அவளிட்ட கட்டளையாக பாவித்து சுவாமிகளும் உடனே அங்கே எழுந்தருளி அங்கிருந்த அரங்கனையும், ஆண்டாளையும் தரிசித்து நின்று தமது கீர்த்தனைகளால் பாடி அங்கிருந்தவர்களை பரவச படுத்தியும் தாமும் பரவசப்பட்டார். இன்றைய ஆடி பூரம் “நல்ல நாளில்” மேலும் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டும் அவர் அன்று பாடிய பாடல் இப்பதிவில். இப்பாடலை டி.எம்.எஸ்.அவர்கள் பாடியுள்ளார்.


பல்லவி
அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்
நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள் (அடையுங்கள்)


அநுபல்லவி
விடையேறும் சிவனாதி தேவர்கள் போற்றும்
நடனகோபாலனிடம் சேர்த்திடுவாள் (அடையுங்கள்)


சரணங்கள்
பவரோக அவதி தீரும் பஞ்சேந்திரியம் ஒன்றாய்ச் சேரும்
தவமாம் நல்வழி கைகூடும் தாரணியோர் வாய்புகழ் பாடும்
சவமாய் உடலம் தரைசாய்ந்திடுமுன்
புவனம்தனில் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

தாமசமாம் குணம் ஒழியும் சாகர சஞ்சலம் ஒழியும்
நேமமிகும் வழி தெரியும் நிஜமாகிய பக்தி விரியும்
பாமர வாழ்கையிலே கிடந்தலையாமல்
க்ஷேமம் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

நித்யானந்தவாழ்வு நிலை அடையாதிருப்பதே தாழ்வு
பக்திசெய்திடுவார்க்கே வாழ்வு பலநெறி நடப்பவர்கே தாழ்வு
செத்துப்போமாக்கை நித்தியமென்றிருக்காமல்
சித்திதரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

தன்னருட்காளாயிடலாம் தாஸர்களுக்குத் தாஸனாகலாம்
விண்ணவர் கிருபைக்காளாயிடலாம் வீதிகள்தோறும் பாடி ஆடலாம்
எண்ணம்பல வழிநண்ணி கெட்டலையாமல்
அண்ணல் வாழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

கேட்ட வரம்தனை அளிப்பாள் கிருபாசாகரமாய் இருப்பாள்
கூட்டங்கூட்டமாய் அழைப்பாள் கொணர்ந்து ஸமர்ப்பித்ததே வகிப்பாள்
சேட்டைவளர் ஜெகம்தனில் திரிந்தலையாமல்
ஆட்டமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இகபர வாழ்வு பலிக்கும் எண்ணமது நல்வழி நிலைக்கும்
சுகமென்மேலும் பலிக்கும் தொண்டுசெய்திடும் பக்தி வலுக்கும்
இகவாழ்வே சுகமென்றிடரடையாமல்
அகமகிழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இருவினையும் குடிவாங்கும் இகமேற் பற்பல இடர் நீங்கும்
குருவருளும் தானோங்கும் கோபாலன் திருவடி தலை தாங்கும்
வறுமைதரும் வையம் திரிந்தலையாமல்
அரி அருளாய் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

பந்தமறும் பாத்தியமாம் பரமானந்த ஹிருதயமாம்
அந்தகன் வந்தனம் செய்வான் ஹரிவந்து கொடு நெறி செய்வான்
இந்தவகிலமே சொந்தமென் றலையாமல்
அந்தமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

மிடியாரிருவினைகள் பொடியாம் மேலாமிடமேறப் படியாம்
நெடியோனடி குடியாம் நீங்கா செல்வத்துக்கடியாம்
படிவாழ்வதென அப்படி அலையாமல்
அடியார் மகிழ் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

துன்பவினை ஓடி வரும் துணை தொண்டரருள் கிருபை நாடி வரும்
இன்பகவி பாடவரும் ஹிருதயம் ஒளிவுதயமாகும்
துன்ப சரீர போகம் இன்பமென்றடையாமல்
அன்பர்குழாம் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வித்தமதருளும் கைசேரும் விளையும் துன்பவினை தீரும்
நித்தமும் கைங்கர்யம் நேரும் நெஞ்சமதிலே வஞ்சம் தீரும்
பித்தமர் உலகுதனில் திரிந்தலையாமல்
அத்தன் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வடபத்ராரியர் அருள்பெறலாம் மலராளை சந்நதிக்கே பெறலாம்
நடனகோபாலன் கிருபை பெறலாம் நாயகியார் எனும் பேர் பெறலாம்
சடலமதை நம்பி கெட்டலையாமல்
திடவில்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்
நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள் (அடையுங்கள்)


அடையுங்கள் ஸ்ரீஆண்டாளின் திருவடிகளை அடையுங்கள்.

விடையேறும் சிவனாதி தேவர்கள் போற்றும்
நடனகோபாலனிடம் சேர்த்திடுவாள் (அடையுங்கள்)


அந்த நந்தீஸர் மீது வலம் வரும் மஹாதேவன் ஈசனும் ஏனைய தேவர்களும் போற்றும், அந்த நடன கோபாலனிடம் சேர்த்திடுவாள். எனவே ஆன்றோர்களே! சான்றோர்களே! அடையுங்கள், அவளடியை அடையுங்கள். இந்த அனுபல்லவியில், மார்கழி மாத திருப்பாவை பாடினால் நடன கோபாலனிடம் சேர்ந்திடலாம் என்பதை மறைபொருளாக சொல்லியிருக்கிறார் சுவாமிகள்.

சரணங்கள்
பவரோக அவதி தீரும் பஞ்சேந்திரியம் ஒன்றாய்ச் சேரும்
தவமாம் நல்வழி கைகூடும் தாரணியோர் வாய்புகழ் பாடும்
சவமாய் உடலம் தரைசாய்ந்திடுமுன்
புவனம்தனில் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)


மாறி பிறவி எடுக்க வைக்கும் இப்பிறவி பிணிதன்னை அதிகரிக்கும் ஐந்திரியங்களும் ஒன்றாகும், பல காலம் தவம் செய்தாலும் கிட்டாத நல்வழியாம் வைகுண்ட வழி கைகூடும். உன்னை ஏசி திறிந்த உலக்கதார் வாய் உன்னை புகழ்வர், இறந்து தரை சேற்வதற்க்கு முன்னால், உலகிலிருக்கும் திருவல்லி புத்தூருக்கு சென்று ஆண்டாளை சரணனடையுங்கள்.


தாமசமாம் குணம் ஒழியும் சாகர சஞ்சலம் ஒழியும்
நேமமிகும் வழி தெரியும் நிஜமாகிய பக்தி விரியும்
பாமர வாழ்கையிலே கிடந்தலையாமல்
க்ஷேமம் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

எல்லாவற்றையும் தள்ளி போடும் தாமச குணத்தை ஒழிக்கும், சஞ்சலங்களை ஒழிக்கும், நேசம் மிகுந்து விடும், வைகுண்ட வழிதெரியும், என்றும் உண்மையான பக்தி வழி தெரியும், ஏதும் தெரியாத பாமர வாழ்வு வாழ்வதை விட, எல்லா நன்மைகளையும் அள்ளி தரும் அந்த திருவல்லிபுத்தூர்தனில் உறையும் தெய்வமான ஆண்டாளை சரணடையுங்கள்.

நித்யானந்தவாழ்வு நிலை அடையாதிருப்பதே தாழ்வு
பக்திசெய்திடுவார்க்கே வாழ்வு பலநெறி நடப்பவர்கே தாழ்வு
செத்துப்போமாக்கை நித்தியமென்றிருக்காமல்
சித்திதரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)


நித்யமும் ஆனந்த வாழ்வு தரும் நிலை அடைவதே வாழ்வு அதை அடையாமல் அடைய முயற்ச்சிக்காமல் இருப்பது வாழ்வல்ல அது தாழ்வு, என்றும் இருப்போம் என்று இருமாப்பு கொள்ளாமல் அனைத்து சித்திகளையும் தரும் திருவல்லிபுத்தூர்தனில் இருக்கும் ஆண்டாளை சரணடையுங்கள்.

தன்னருட்காளாயிடலாம் தாஸர்களுக்குத் தாஸனாகலாம்
விண்ணவர் கிருபைக்காளாயிடலாம் வீதிகள்தோறும் பாடி ஆடலாம்
எண்ணம்பல வழிநண்ணி கெட்டலையாமல்
அண்ணல் வாழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அவளை கரம் பற்றியவனின் அருளுக்கு ஆளாயிடலாம் அவனடியாருக்கு அடியாராகிடலாம், தேவர்களுக்கு ஆளாயிடலாம் வீதிகள் தோறும் ஆடி பாடிடலாம். பல வழி உண்டு என்ற எண்ணி கெட்டு அலையாமல், அண்ணலாம் திருவரங்கன் எழுந்து வந்து ஆண்டாளை கரம்பற்றிய திருவல்லிபுத்தூர்தனில் சென்றடையுங்கள்.

கேட்ட வரம்தனை அளிப்பாள் கிருபாசாகரமாய் இருப்பாள்
கூட்டங்கூட்டமாய் அழைப்பாள் கொணர்ந்து ஸமர்ப்பித்ததே வகிப்பாள்
சேட்டைவளர் ஜெகம்தனில் திரிந்தலையாமல்
ஆட்டமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

கேட்டதை வரமாக தரும் கற்பக தருவான, அன்பு கடலான இருப்பவளை வணங்க, குழுவாக, கூட்டமாக ஒன்றாக வர அழப்பவளாம், அவளை பூ,இலைகளை சமர்ப்பித்து, சூட்டி, எப்போதும் அனர்த்தங்கள் அதிகரிக்கும் இவ்வுலகம் தன்னில் அலையாமல், எப்போதும், திருவிழாகோலம் கொண்டிருக்கும் திருவல்லிபுத்தூர் தனிலிருக்கும் ஸ்ரீஆண்டாளை சரணடையுங்கள்.

இகபர வாழ்வு பலிக்கும் எண்ணமது நல்வழி நிலைக்கும்
சுகமென்மேலும் பலிக்கும் தொண்டுசெய்திடும் பக்தி வலுக்கும்
இகவாழ்வே சுகமென்றிடரடையாமல்
அகமகிழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அவ்வுலக வாழ்வு கிட்டும், எண்ணங்கள் நல்வழியில் நிலைக்கும்,
சுகம் மென் மேலும் பெருகும் கிட்டும், தொண்டு செய்ய செய்ய பக்தி வலுக்கும், அதிகரிக்கும். இவ்வுலக வாழ்வே சுகம் என்று தளர்வடையாமல், உள்ளம் மகிழ வைக்கும் திருவல்லிபுத்தூரில் உறையும் ஸ்ரீஆண்டாளை அடையுங்கள்.

இருவினையும் குடிவாங்கும் இகமேற் பற்பல இடர் நீங்கும்
குருவருளும் தானோங்கும் கோபாலன் திருவடி தலை தாங்கும்
வறுமைதரும் வையம் திரிந்தலையாமல்
அரி அருளாய் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வல்வினை, தீவினை இருவினைகளை, மறுபிறப்பை மீண்டும் மீண்டும் பற்பல முறை பிறவி எடுக்கும் இடரை நீக்கும், குருவருளையும், தான் ஆளும் கோபாலன் திருவடியை உன் தலைக்கு அளித்து, வறுமையான சிறுமை, அறியாமையை இவ்வுலகில் திரிந்தலையாமல், ஹரியின் அருளாக, அருளுடன் திருவல்லிபுத்தூருக்கு சென்றடையுங்கள்.

பந்தமறும் பாத்தியமாம் பரமானந்த ஹிருதயமாம்
அந்தகன் வந்தனம் செய்வான் ஹரிவந்து கொடு நெறி செய்வான்
இந்தவகிலமே சொந்தமென் றலையாமல்
அந்தமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

பந்தங்களை அறுக்கும் பத்தியாமாம், அந்த பரமானந்த ஹிருதயமாம், அரங்கனிடம் சேர்ப்பாள், கண்தெரியாத அந்தகனாய், அறியாமை கண்மறைக்கும் அந்தகனை ஹரி வந்து ஆட்கொள்ள இருக்கும் நீ, இந்த உலகமே உன் எல்லை என்றில்லாமல், ஆதி அந்தமில்லா ஊரான திருவல்லிபுத்தூருக்கு சென்றடையுங்கள்.

அடுத்த சரணங்கள் அடுத்த பதிவில்.

Monday, July 24, 2006

ராம பஜனை செய்வாய் மனமே


எப்போது இறைவனை வணங்கவேண்டும் என்று கேட்டதற்க்கு விழிப்பில்(ஹுடினும்), தளர்வாக இருக்கும் சமயத்தில்(பிஸினும்), நடக்கும் சமயத்திலும்(சல்னிம்), தூக்கத்திலும் (ஹோங்கும்) என்று சொன்னவர், அப்படி என்ன எல்லாம் எவ்வளவு செய்ய வேண்டும் என்றும் சொல்லும் படியாக அமைந்த பாடல், இப்பதிவில் உள்ள பாடல், இப்பாடலிலும் மனதை விளிப்பது போல் விளித்து கிடைப்பதற்கரிய நாத நாமக்ரியா ராகத்தில் பாடத்தை பாடலாக சொல்லியுள்ளார். இப்பாடலை டி.எம்.எஸ். அவர்களும் இராம ரத்தினம் அவர்களும் பாடியுள்ளனர்.


ராம்ப4ஜன காரி மொந்நு தூ

நாத3நாமக்ரியா ராகு

ஆதி3 தாளு

பல்லவி
ராம்ப4ஜன காரி மொந்நு தூ
ராம் ப4ஜன காரி


அநுபல்லவி
ராம்ப4ஜன கரேத் காம் நீ:ஸ்தகன் ரி:யெ
கா3ம்லெகுத்தவி த்யே தா2ம் தெகஹோய் [ரா]


சரணு
ஸீன் திரி ஜாய்ரே மொந்நு ஏ
ஸீன் திரி ஜாய்ரே
ஸீன் திரி ஜாய் தீ3 கான் தீ3 ஐகோ
மான்ஹோர் ஐகுநொகன் நா:ன் வேது3நும்ஸே [ரா]

ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே
ஆஸெநு ஸுட்டி ஹரி தா3ஸுனுநுக் தா3ஸொய்
ஸ்ரீநிவாஸ ஹரி கேஸவா மெநி மெநி [ரா]

து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே
து3க்கு ஸரீர் ஸுடை ஜு:க்கு ப4க்தி ஹுடை
உக்குக்கா2ம்பு3மவெ சொக்கட் நரஸிம்ஹ [ரா]

ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே ஸங்கி3மொந்
ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே
ஸெங்க்3 ஹரிவிந நீ: ரெங்க3நாத2 ஹரி
கொங்கி3டி3 ரெ:ய்லி லோக்
பொ4ங்க3 பி2ரள்ளேத் ரி:யேஸ் [ரா]

நித்தவாடும் சாலி மொந்நு தூ
நித்தவாடும் சாலி
நித்தவாடும் சலெத் பி4த்தர் ரி:யே ஹரி
வத்த கரஸ்தக அத்த யெதூ3ரவை [ரா]

வாடு ஸங்கு3ஸ் ஐகி மொந்நு தொகொ
வாடு ஸங்கு3ஸ் ஐகி
வாடும் சொக்கட்வா டேடு உநிஸியேத்
தீ4டு விஸிஷ்டா த்3வைதம் ஹொயெ வாடுஸ் [ரா]

தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ மொந்நு தொர்
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ பு3ள்ளிபீ2 ர:ட்வநு
மொந்நு தொ2வி லங்கா ஹ§ந்நொகரெ ஸீதா [ரா]

வடபத்ரார்யுநுக் ஸாரே மொந்நு தூ அம்ரெ
வடபத்ரார்யுநுக் ஸாரே
வடபத்ரார்யுநுக் ஸா நடனகோ3பால் தொக
கெடொ ஹிங்க3டி3 ஸொடை3 ஹுடுநா ப4க்தி ஹுடை[ரா]



பல்லவி
ராம்ப4ஜன காரி மொந்நு தூ
ராம் ப4ஜன காரி


ஆஞ்சனேயர் செய்த ராம பஜனைபோல் நீயும் ராம பஜனை செய்வாய் மனமே.

அநுபல்லவி
ராம்ப4ஜன கரேத் காம் நீ:ஸ்தகன் ரி:யெ
கா3ம்லெகுத்தவி த்யே தா2ம் தெகஹோய் [ரா]

ராம் பஜன செய்தால் உன்பொருப்புகள் எல்லாம் தீர்ந்து, உனக்கு தேவலோக இடமட்டுமல்லாமல், பரமபதமும் கிடைக்கும்.

சரணு
ஸீன் திரி ஜாய்ரே மொந்நு ஏ
ஸீன் திரி ஜாய்ரே
ஸீன் திரி ஜாய் தீ3 கான் தீ3 ஐகோ
மான்ஹோர் ஐகுநொகன் நா:ன் வேது3நும்ஸே [ரா]

வலி தீர்ந்து போகும் மனமே இந்த வலிதீர்ந்து விடும்
வலி தீர்ந்து போகும் இரு காது கொடுத்து கேட்பாய்
காற்று வாக்கில் கேட்காதே, இவை அனைத்தும் வேதத்தில் சொல்லப்பட்டது, வேதத்தில் இருப்பது, இராம பஜனை செய்வாய்.

ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே
ஆஸெநு ஸுட்டி ஹரி தா3ஸுனுநுக் தா3ஸொய்
ஸ்ரீநிவாஸ ஹரி கேஸவா மெநி மெநி [ரா]

ஆசைகள் தீர்ந்து போகும் மனமே இந்த
ஆசைகள் தீர்ந்து போகும்
ஆசைகள் தீர்ந்து போகும் ஹரியின் அடியாருக்கு அடியாராகி
ஸ்ரீநிவாச, ஹரி கேஸவா என்று ராம பஜனை செய்வாய்

து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே
து3க்கு ஸரீர் ஸுடை ஜு:க்கு ப4க்தி ஹுடை
உக்குக்கா2ம்பு3மவெ சொக்கட் நரஸிம்ஹ [ரா]

(சுக)துக்கங்கள் உடலை விட்டு தீர்ந்து விடும் மனமே இந்த
துக்கங்கள் உடலை விட்டு தீர்ந்து விடும்
துக்கங்கள் உடலை விட்டு நிறம்ப பக்தி கிளம்பும்
எஃகு தூணிலிருந்து வந்த நல்ல நரசிம்மனை எண்ணி இராம பஜனை செய்வாய்.

ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே ஸங்கி3மொந்
ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே
ஸெங்க்3 ஹரிவிந நீ: ரெங்க3நாத2 ஹரி
கொங்கி3டி3 ரெ:ய்லி லோக் பொ4ங்க3 பி2ரள்ளேத் ரி:யேஸ் [ரா]

துணையே ஹரியன்றி யாருள்ளார் சொல்வாய் மனமே
துணையே ஹரியன்றி யாருள்ளார்
துணையே ஹரியன்றி யாருமில்லை, திருவரங்கன் ஹரியே
எல்லாமுமாக இருந்து உலக பம்பரத்தை இயக்கும் இராமனை பஜனை செய்வாய்.

நித்தவாடும் சாலி மொந்நு தூ
நித்தவாடும் சாலி
நித்தவாடும் சலெத் பி4த்தர் ரி:யே ஹரி
வத்த கரஸ்தக அத்த யெதூ3ரவை [ரா]

நேர்வழியில் நடப்பாய் மனமே நீ
நேர்வழியில் நடப்பாய்
நேர்வழியில் நடந்து உனுள்ளே இருக்கும் ஹரி
பேசுவதற்க்கு அப்போதே முன்வருவான் எனவே மனமே இராம பஜனை செய்வாய்.

வாடு ஸங்கு3ஸ் ஐகி மொந்நு தொகொ
வாடு ஸங்கு3ஸ் ஐகி
வாடும் சொக்கட்வா டேடு உநிஸியேத்
தீ4டு விஸிஷ்டா த்3வைதம் ஹொயெ வாடுஸ் [ரா]

வழிசொல்கிறேன் கேள் மனமே உனக்கு
வழிசொல்கிறேன் கேள்
இங்கே இருக்கும் வழியில் மிக சிறந்த வழி
திடமான விஸிஷ்டா த்வைதம் கொண்ட வழியே எனவே இராம பஜனை செய்வாய் மனமே.


தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ மொந்நு தொர்
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ பு3ள்ளிபீ2 ர:ட்வநு
மொந்நு தொ2வி லங்கா ஹுந்நொகரெ ஸீதா [ரா]

சிலர் இன்று நாளை என்று நாட்களை கடத்துவர் அவர்களை கண்டு
நாட்களை கடத்த கூடாது மனமே உன்
நாட்களை கடத்த கூடாது
நாட்களை கடத்தாமல் இப்போதே மனமே இராம பஜனை செய்வாய்
இலங்கைக்கு தீ வைத்து சீதையை கண்டவனை (அனுமனை) போல் மனதை வைத்து, ஸ்ரீ இராம பஜனை செய்வாய்.


வடபத்ரார்யுநுக் ஸாரே மொந்நு தூ அம்ரெ
வடபத்ரார்யுநுக் ஸாரே
வடபத்ரார்யுநுக் ஸா நடனகோ3பால் தொக
கெடொ ஹிங்க3டி3 ஸொடை3 ஹுடுநா ப4க்தி ஹுடை[ரா]

வடபத்ராரியரை பாரப்பா மனமே நீ நம்
வடபத்ராரியரை பாரப்பா
வடபத்ராரியரை பார் நாராயணன் உன்னை
பிறவி கடலில்லிருந்து உன்னை கரையேற்றுவான், எழும்பாத பக்தி எழும்பும் எனவே இராம பஜனை செய்வாய்.

Wednesday, July 19, 2006

எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா - 3

ரஜொ ஹா மொர பா3பு
அம்பொ3 அம்பொ3 (ரஜொ)
மீ ரஜொ ஹா மொரபெ3டொ
ராஜ்ஜலன் ஜாஸ்ஹா தெகொ3ஹால் [நொ]


எந்தந்தையோ ஸ்ரீராங்கார்யர், என்றால் ஸ்ரீரங்கத்திற்க்கே அரசன் என்று பொருள், ஆனால் அப்பதவி பறிபோய் அப்பெயர் என் மகனக்கு சூட்டி அவனை அரசனாக்க வேண்டி வரும். (தமது தந்தையின் பெயரை, தன் மகனுக்கு சுட்டுவது குடும்ப வழக்கம்) ஆகவே எனக்கு திருமணம் வேண்டாம். (இப்போது அவரது தாய் சற்றே யோசிக்க ஆரம்பிக்கிறார், அதை கண்ட சுவாமிகள் சந்தோஷத்துடன் தொடர்ந்தார்)

காய் ஜிவ்னம் ஜிவ்ன ஹோய்கி
அம்பொ3 அம்பொ3 (காய்)
சொக்கட் கைங்கர்யமு வாடு
கர்னாதிஸொ ஹொய்யாய் [நொ]

மாயையின் விளக்கம் கேட்ட தேவ முனிவரான நாரதரையே ஒரு வழிசெய்துவிட்ட இல்வாழ்க்கை, என்னை என்ன பாடு படுத்துமோ, என்ன வாழ்க்கை வாழவேண்டிவருமோ, நல்வழியான பகவத் சேவை செய்ய வழி இல்லாமலாகிவிடும். எனவே இதை தடுக்கும் திருமணம் எனக்கு வேண்டாம்.

ஸொம்மு ஸொமந்து3 மைலைவோ
அம்பொ3 அம்பொ3 (ஸொம்மு)
மீ ஸொம்புஹோர்ஜிவ்னம் கரெதி
ஸொந்தோஷ் ஹோர் வத்தான் கரை [நொ]

நகை, பணம், என்று உன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் நல்ல வார்த்தை சொல்லியோ, அதட்டியோ தான் அடைந்து விடுவாள், நான் மேலும் சில சந்தோஷ வாழ்க்கையை வாழவேண்டும் என்று மேலும் சில வார்த்தைகளை சொல்வாள், என்னை மற்றவரிடமிருந்து பிறிப்பாள், தனக்கே உரியவளாக்கி கொள்வாள். என்னை மற்றவரிடமும், நான் வணங்கும் கோவிந்தனிடமிருந்து பிறிக்கும் சடங்கான திருமணம் எனக்கு வேண்டாம் அம்மா.

மாய் பா3பு வத்தொ ஹெடை3யாய்
அம்பொ3 அம்பொ3 (மாய்)
லோகுர் மாயாம் ஸம்டில்லி தோணும்
மத்தி தைலுவையாய் [நொ]

தாய் தந்தையிரின் பேச்சை கேட்டு கேளாதவனாகி விடுவேன் அம்மா, நாரதன் அகப்பட்ட குழந்தை, மனைவி என்ற பந்தத்தில் அகப்பட்டு என் வாயில் நானே மண்ணிட்டு கொண்டது போலாகிவிடும். எனவே மாயையில் அகப்பட வைக்கும் திருமண பந்தம் எனக்கு வேண்டாம்.

2ல்சொ சலஸ்தெ காய் தெ3க்யாஸ்வோ
அம்பொ3 அம்பொ3 (ப2ல்ஸொ)
அத்தொ சொக்கட் க3தி பஜெமெனி
சொக்கட் வாடும் சல்லேத் ரீ:ரேஸ் [நொ]

அம்மா, பின்னர் என்ன நடக்க போவதை யாரறிவார், ஆனால் இப்போது நான் நல்வழியானை கோவிந்தனை பற்றி, நல் வழியில் நடந்து வருகிறேன். அது போதும், அப்படி நல்வழியிலிருந்து பிறழவைக்கும் திருமணம் என்ற சடங்கு எனக்கு வேண்டாம்.

செடனான் ஹொடை3 ஹொராட்3 ஹால்
அம்பொ3 அம்பொ3 (செடனான்)
ஸ்ரீ நடனகோ3பாலுக் நொம்மேத்
செடனானஸ்கி கடை ஜாய் [நொ]

இராமாயண, மஹாபாரத சண்டைகள் முதல் எல்ல சண்டை, சச்சரவுகளும் திருமணத்தால் தான் வந்தது, வளர்ந்தது அப்பேற்ப்பட்ட சண்டைகளால் நான் வணங்கும் இராமனும், கிருஷ்ணரும் இருந்துள்ளனர், அவர்களது அருளால் தான் அதுவும் தீர்ந்தது, எனவே அம்மா, அவர்களை நம்பி, இருக்கும் சண்டைகளை தீர்ப்பான். எனவே எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா.

எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா - 2

தொகொ3 மொகொ3 ஜு:க்கு விரோத் ஹோய்
ஹோய் அம்பொ3 (தொகொ)
தூ கிக்கராக் அல்லியேத் மொள்ளொ
நெக்கித்க மொகொ3 லைனாஜாய் [நொ]

தற்போது அம்மா நீ ஒரு சிறிய சுடு சொல் சொன்னாலும் நான் பயந்து விடுகிறேன், அதை எப்படியாவது தீர்க்க எண்ணுகிறேன் ஆனால் அம்மா எனக்கு திருமணம் என்ற சடங்கு நடந்து விட்டால், உனக்கும் எனக்கும் விரோதம் வளர்ந்திடும், பிறகு நீ எப்பேற்பட்ட கோபம் கொண்டாலும் அதை தவிற்க்கும், தீர்க்கும் வழி தேடாமல் இருந்து, அதுவே வழக்கமாகி விடும் அம்மா. எனவே அப்பேற்பட்ட சடங்கு எனக்கு வேண்டாம்.


பாபினு ஸெர மிளையாய்
அம்பொ3 அம்பொ3 (பாபி)
தூ ஸாபன தே3ஸ்திஸொ ஹொய்யாய்
சொக்கட் கெ3தி மொகொ3 ந்ஹீஜாய் [நொ]

பாவிகள் என்று எவரை சொல்வேன், அப்பாவி என்று எவரை எண்ணுவது என்று எல்லாம் நூறு ஆசிரியர்களுக்கு ஒப்பான தாயவள் நீ சொல்லி தானே உணர்ந்தேன். நீயே சில காலத்திற்க்கு பிறகு என்னுடைய மனைவியையும் அவளது குடும்பத்தையும் “பாவி” என்று சபிப்பாய், அப்பாவத்திற்க்கு நானும் ஆளாகிவிடுவேன், அவளை சபித்தாலும் என்னை சபித்தாலும் இரண்டும் ஒன்று தானே. தாயின் சாபத்திற்க்கு ஆளானால் நல்ல கதி எப்படி ஏற்படும், அதை தான் இப்போது நான் சொல்கிறேன். எனவே அம்மா எனக்கு திருமணம் வேண்டாம்.


அவஸ்தெ நொவ்ரி கோன்கா3தெனொகி
அம்பொ3 அம்பொ3 (அவஸ்தெ)
மீ கரஸ்தெ காம் ஹந்நௌ அஸ்கி
தெகோ3ஸ் தெ3னோகி காய்கி [நொ]

வரக்கூடிய மனைவியானவள் எப்பேற்பட்டவளோ, நான் வேலை செய்து சம்பாதிக்கும் பணம், பொருள் எல்லாம் அவளுக்கே தரவேண்டுமோ என்னவோ. பிறகு உன்னை பரிபாலிப்பார் யாரிருக்கிறார்கள். உன்னை காக்கும் கடமையிலிருந்து தவறிவிடுவேன். (காம் – வேலை, ஹந்நௌ – பணம், பொருள்)

பை3லு வத்தொ கான் ஹுகுடா3ய்
அம்பொ3 அம்பொ3 (பை3லு)
லோகுர் ஸெய்லே தொர் வத்தானுகு
அஸ்கோ கான் ஜ:க3ய்யாய்வோ [நொ]

மனைவியின் சொல்லுக்கு செவிசாய்க்க வேண்டிவரும், இந்த உலகத்தார், சுற்றத்தார் மற்றும் உன்பேச்சுகளை கேட்டும் கேட்காத செவிடன் ஆகிவிடுவேன். அம்மா எனவே எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா.

ஹொராட் மெனஸ்தே வத்தஸோட்
அம்பொ3 அம்பொ3 (ஹொராட்)
தொகொ34ராட் ஸொடி3 வெடி3க்
ஸாஸ்திஸொ ஹொய்யாய் தெகொ3ஹால் [நொ]

திருமணம் என்ற பேச்சை இத்தோடு விட்டு விடு அம்மா. உன்னை மறந்து, வீட்டை துறந்து வேடிக்கை பார்க்க வேண்டி வரும் அம்மா,

இப்படியெல்லாம் சில சாக்குகளை சொல்லி தன் தாயை சமாதான படுத்த முயல்கிறார், ஆனால் தாயோ, அதை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், பொருத்துக்கொள்கிறேன், திருமணம் செய்து கொள் என்று மேலும் வற்புறுத்த, அப்போது தமது பக்கம் இருக்கும் மேலும் சிலவற்றை சரணங்களாக பாடுகிறார் அவற்றை அடுத்த பதிவில்...

Tuesday, July 18, 2006

எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா - 1

ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் தாயார், சுவாமிகளின் திருமண வயது காலத்தில் திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தி வந்தார். அதை தவிர்க்கும் விதத்திலும், தன் தாயாரை சமாதானம் செய்யும் விதத்திலும் ஸஹாநா ராகத்தில் “அம்மா எனக்கு திருமணம் வேண்டாம்” என்று சௌராஷ்ட்ர மொழியில் பாடலை பாடி, திருமணம் செய்வதால் தமக்கு வரும், வரவிருக்கும் பிரச்சனைகளையும் அப்பாடலில் தாயாருக்கு விளக்கினார்.

இந்த பாடல் சுவாமிகளின் 300க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் சௌராஷ்ட்ர மொழி பாடல்களில் என்னுடைய விருப்பப் பாடலாகும்.


பல்லவி
நொக்கொ அம்பொ3 மொகொ3 ஹொராடு3
அம்பொ3 அம்பொ3


அநுபல்லவி
தொகொ பு4க்கொ தைனாஸ்தக் மீ பா4த்
4ல்லேத் ர்ஹியெஸ்தெ நஜ்ஜாய் [நொ]


சரணு
தோண்போ4ர் அம்பொ3 மென் பொவரேஸ்
அம்பொ3 அம்பொ3 (தோண்)
ஏ தோணூஸ் தொகொ3 தூ3ஷண கரை
தூ ஸங்கு3னொகொ மொகொ [நொ]


நொக்கொ அம்பொ3 மொகொ3 ஹொராடு3
அம்பொ3 அம்பொ3

அம்மா! அம்மா! வேண்டாம் அம்மா எனக்கு திருமணம்

தொகொ பு4க்கொ தைனாஸ்தக் மீ பா4த்
4ல்லேத் ர்ஹியெஸ்தெ நஜ்ஜாய் [நொ]

திருமணம் செய்து இன்னொருத்தியிடம் என் உணவிற்க்காக நானே தவமிருக்க வேண்டியிருக்கும் அப்போது உன் பசி பற்றி நினைவில் இருக்காது, ஆகவே இப்போது உன்னை பட்டினி போடாமல் நான் உணவூட்டி வருவது கெட்டு விடும். எனவே, அம்மா எனக்கு திருமணம் என்ற பந்தம் வேண்டாம்.


தோண்போ4ர் அம்பொ3 மென் பொவரேஸ்
அம்பொ3 அம்பொ3 (தோண்)
ஏ தோணூஸ் தொகொ3 தூ3ஷண கரை
தூ ஸங்கு3னொகொ மொகொ [நொ]

அம்மா! அம்மா! அந்த கோகுல கண்ணன் தன் தாய் யசோதையை “அம்மா” என்று அழைத்தானே அதே போல் நானும் உன்னை வாய் நிறைய “அம்மா” என்றழைக்கிறேன். இதேவாய் உன்னை நிந்திக்கும்படியாகிவிடும். என்னை திருமணத்திற்க்கு வற்புறுத்தாதே அம்மா.


அடுத்த சரணங்கள் அடுத்த பதிவில்.

***

அன்னையை நிந்தித்தப் பாவமும் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவமும் எந்த விதப் பரிகாரமும் இல்லாத பாவங்கள் என்று படித்தது இந்த முதல் சரணத்தைப் படிக்கும் போது நினைவிற்கு வருகிறது.