Sunday, February 26, 2023

நாளைக் கணிக்க இயலாது


பல்லவி

 

தி3ந்நு ஜனன் முஸுநா உராவ் தி3ந்நு ஜவள்நாஸ்தக்

மொந்நூ 4ஜனொ காரி (தி3ந்நு)

 

Pallavi

 

dhinnu janan musunaa uraav dhinnu javalnaasthak

monnu bhajano kaari (dhinnu)

 

பொருள்:

(போகும்) நாளைக் கணிக்க இயலாது மீத நாட்களை (வீணே) போகவிடாமல்

மனமே பஜனை செய்

 

அநுபல்லவி

 

தி3ந்நு ஸெரேத் எமொ ஸொண்ணா அவி தெ4ல் ஜேடை3

அந்நா:ல் ஹொயே ஸரீர் பொ4ந்நொ து4ளி ஜேடை3 (தி3ந்நு)

 

anupallavi

 

dhinnu serEth emo sonnaa avi dhel jEdai

annhaal hoyE sariir bonno dhuli jEdai (dhinnu)

 

பொருள்:

(நமது) நாட்கள் முடிந்துவிட்டால் எமன் விடமாட்டான்; வந்து பிடித்துச் செல்வான்

அன்னத்தால் ஆன உடல் (எனும்) பானை கவிழ்ந்து போகும் 

 

சரணு

 

ஹிந்தோ3தி காய் நிஜமு நிமிஸு பல்சொ நிமுஸ்

ரா:ஸ்தேதி காய் நிஜம் (ஹிந்தோ3தி)

ஹந்தெ3 பா4த் ஜெம்னாஸ்தக் தெந்து3ஸ்தென் ஜியெநிஹா

3ந்த3ம் கடை நா கோ3விந்தா3 மெநி 4ஜொ (தி3ந்நு)

 

charanu

 

hindhOthi kaai nijamu yE nimisu palcho nimus

rhaasthEthi kaay nijam (hindhOthi)

handhe bhaath jemnaasthak thenthusthen jiyenihaa

bhandam kadai naa gOvindaa meni bhajo (dhinnu)

 

பொருள்:

இன்று தான் என்ன உண்மையோ? இந்த நிமிடத்திற்கு மறு நிமிடம்

இருப்பது தான் என்ன உண்மை?

சமைத்த உணவை உண்ணாமல் அன்றே அவன் போகவில்லையா?

பந்தத்தை அறுப்பானே கோவிந்தன் என்று பாடுங்கள் (பஜனை செய்யுங்கள்)

 

படன கேர் தே3வ் நமமு 2ல்சொ ஸெய்ல்ஜே

மெனஸ்தக வாட் நீ: ஸெணமு நூ (படன கேர்)

வடபத்ரார்யுனு வசெ தா4னுகு யேட்

நடனகோ3பால நாயகின் ஸெரொ மிளே (தி3ந்நு)    

Friday, August 05, 2011

தொண்டு என்னும் கரும்பு



ஆழமான கருத்துகள் கொண்டு இனிமையான எளிதான பாடல் இது.

பல்லவி
க2ள்ளி க2வொ க2ள்ளி க2வொ--நிச்சு
கைங்கர்யம் மெனஸ்தான் கொப்பு3 க2ள்ளி க2வொ [க2]

எடுத்து உண்ணுங்கள் எடுத்து உண்ணுங்கள் - தினம்
தொண்டு என்னும் கரும்பு எடுத்து உண்ணுங்கள் (எ)

அநுபல்லவி
கரெ கர்முன் த4மய்
ஹரிக் பாய்ம்பொடி3 பொ3வொ துமி [க2]

செய்த வினைகள் ஓடும்
ஹரியை வணங்கி அழையுங்கள் - நீங்கள் (எ)

சரணு
தா3ஸ் ஹோனாஜியெத் மோஸ் அவயி ஹரி
தா3ஸ§நுக் தா3ஸ்ஹொயெத் ஹரி க்ருபகரயி
தொ3ங்க3ர் ராணும் ஹிங்க3ன் வேஸ் நீ:
தொ3ங்க3ர் அங்க்3ளிதெ4ரெ ரெங்கா3க் ஸெங்கு3 ஸவொ யேட்[க2]

தொண்டன் ஆகாவிட்டால் மோசம் வருமே - ஹரி
தொண்டருக்கு தொண்டன் ஆனால் ஹரி கருணை செய்வானே
காடு மலை ஏறத் தேவையில்லையே - மலை
விரல் தொட்ட ரெங்கனைத் துணை கொள்ளுங்கள் இங்கே (எ)

மத்திம் உஜி மத்திம் ஹொடி3 மத்திமூஸ்ஜாய் ஸெரிர்
ப4க்தி கிஸொதி கரொ
வடபத்ரஸாயி ஹொய்கிநு மொகொ
நடனக்ருஷ்ண தா3ஸ§ந் ஜொவளும் ஜெய் [க2]

மண்ணில் பிறந்து மண்ணில் வளர்ந்து மண்ணிலே போகும் உடல்
பக்தி எப்படியாவது செய்யுங்கள்
வடபத்ரசாயி ஆகி என்னை
நடனகிருஷ்ண தாசர்கள் உடன் கொண்டு சென்று (எ)

இந்தப் பாடலை டி.எம். சந்திரசேகர் குரலில் இங்கே கேட்கலாம்.

Sunday, April 10, 2011

சாத்வீக உணவும், உணர்ச்சியூட்டும் உணவும்


ஸ்ரீமந் நடன கோபால சுவாமிகள் - உற்சவர், அவரது திருநட்சத்திர நாளில் அருள்பாலித்த காட்சி



ஊஞ்சல் சேவை நிகழ்த்தும் பெருமாளும் தாயாரும்

கண்ணன் பாடல்கள் தொகுப்பில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு கண்ணன் பாடல்கள் தொகுப்பில் பாப்பா இராமாயணம் என்ற பெயரில், சிறார்களும் அதிவிரைவாக பாட ஏதுவாகவும் ’ராம்’ ’ராம்’ என ஒவ்வொரு வரியிலும் முடியும் படியும் லலிதா அவர்கள் எழுதியதை படிக்கும் சமயம், ஸ்ரீமந் நடன கோபல சுவாமிகளின் ஒரு தமிழ் நாமாவளியை பின்னூட்டமாக இட்டேன்,

"ஸ்ரீ ராமனை துதிசெய் மனமே
ஸ்ரீ வாமனை கதியென்றிரு தினமே
எமனை அடிக்கும் வில்குணமே
காமனை ஜெயிக்கும்சொல் மனமே"

மேலும் அவர் பாடிய ஒரு சௌராஷ்டிர மொழி நாமாவளியை இங்கே உங்களுக்காக தமிழ் உரையுடன்.

தமிழ் எழுத்து:

கந்தொ3 லொஸன் முளொ ஹந்த3னூஸ் ஹோனா
ஹந்தொ3 கஸ்தந்து3 கோ3விந்தா3க் ஆனந்த3ம் ஹோய்
ஹிந்த3ரெ:ய் ஸொட்3டு3வோ மந்த3ம் கொ3ரு தூ3த்
நந்த3கோ3பாலுக் பொந்தை3 கா3யி தூ3த்
தெந்து3ஸ் மெள்ளொ ஸங்கே3னா கஞ்ஜி
பொ4ப்ளொ ஸெவ்காஜா:ட் ஹோனாமெநி


சௌராஷ்ட்ர எழுத்து:

ꢒꢥ꣄ꢣꣁ ꢭꣁꢱꢥ꣄ ꢪꢸꢳꣁ ꢲꢥ꣄ꢣꢥꢹꢱ꣄ ꢲꣂꢥꢵ |
ꢲꢥ꣄ꢣꣁ ꢒꢱ꣄ꢡꢥ꣄ꢣꢸ ꢔꣁꢮꢶꢥ꣄ꢣꢵꢒ꣄ ꢃꢥꢥ꣄ꢣꢪ꣄ ꢲꣂꢫ꣄|
ꢲꢶꢥ꣄ꢣꢬꢴꢾꢫ꣄ ꢱꣁꢞ꣄ꢞꢸꢮꣁ ꢪꢥ꣄ꢣꢪ꣄ ꢔꣁꢬꢸ ꢣꢹꢡ꣄ |
ꢥꢥ꣄ꢣꢔꣂꢦꢵꢭꢸꢒ꣄ ꢦꣁꢥ꣄ꢣꢫ꣄ ꢔꢵꢫꢶ ꢣꢹꢡ꣄ |
ꢡꢾꢥ꣄ꢣꢸꢱ꣄ ꢪꢾꢳ꣄ꢳꣁ ꢱꢖ꣄ꢔꢿꢥꢵ ꢒꢛ꣄ꢙꢶ |
ꢩ꣄ꢦ꣄ꢳꣁ ꢱꢾꢮ꣄ꢒꢵꢚꢵꢜ꣄ ꢲꣂꢥꢵꢪꢾꢥꢶ |

ஆங்கில எழுத்து:

kando losan muLo HandanUs HOnA |

Hando kastandu govindAk Anandam HOy|
Hindarhey soDDuvo mandam goru dUt |
nandagOpAluk ponday gAyi dUt |
tendus meLLo saGgEnA kaJji |
bhpLo sevkAjhAT HOnAmeni |

சாத்வீக மனதை கெடுத்து, உயிரில் எப்போதும் உணர்ச்சி பெறுக்கெடுத்து ஓடச் செய்யும் காய்கறி வகையான வெங்காயம், பூண்டு, முள்ளங்கி சேர்க்கக் (சமைக்க) கூடாது, உயிர் சத்து நிறைந்த பச்சரிசி சமைக்க வேண்டும் கோவிந்தன் மகிழ்வான், மந்த புத்தியை தரும் எருமை பாலை உணவில் சேர்ப்பதை இன்றிலிருந்து விட்டு விடுங்கள், நந்தரின் மகனான அந்த கோபாலன், உயிர் மீது மிக்க பற்று பசு தரும் பாலையே விரும்பினார், நீங்களும் அதையே விரும்புங்கள், மக்களால் விரும்பப்படுவீர்.

வீட்டிற்க்கு முறுங்கை மரம் நல்லதல்ல, ஊசியிலை மரவகையான முறுங்கை மரத்திலிருந்து வெளிப்படும் வரும் காற்று மனித உடலுக்கு நல்லதல்ல, அதனால் அவ்வகை மரம் வீட்டிற்க்கு ஆகாது என்கிறார்,

படங்கள் : ஓ.எஸ்.எஸ். ஐயா அவர்களின் படத்தொகுப்பு
பாடல் : ஸ்ரீ மந் நடனகோபால நாயகி சுவாமிகளின் நாமாவளி தொகுப்பு (சௌராஷ்ட்ரம்).



ஸௌராஷ்டிரா மொழியில் பின்னூட்டம் இடுவதற்கு, லக்ஷ்மனாசார்யா எனும் ஸௌராஷ்டிரா:ஆங்கில (Sourashtra:English Trans-Literature Software) மொழி மாறிலியை இங்கிருந்து (http://www.sourashtra.info/daar.htm) தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தவும்

Sunday, March 06, 2011

Nayaki Eluchi Iyakkam - 2010

Sunday, January 17, 2010

ஹரி கைங்கரியம் செய்யுங்கள் பிறவி வராது பின்னர்...


க2டெ3 ஸரீர் கா2ல் பொடி3 ஜாநாமுல்லோ - ஹரி
கைங்கர்யம் கரொ ஜெலும் அவ்நா ப2ல்லோ (க2டெ3)


கொண்ட உடல் கீழே விழுந்து போகும் முன்னர் - ஹரி
கைங்கரியம் செய்யுங்கள் பிறவி வராது பின்னர் (கொண்ட)


க2டி3 ஸொடெ3 ஸரீர் ஜுக்கு லெ:க்க நீ: முல்லோ - அமி
கரெ கருமுந் அஸ்கி திரிஜாய் ஜல்வோ (க2டெ3)

கொண்டு விட்ட உடல் நிறைய கணக்கில்லை முன்னர் - நாம்
செய்த கருமங்கள் எல்லாம் தீர்ந்து போகும் அறிவீர் (கொண்ட)

தெ4ரந் நிக்ளேத் ஹிப்பி3 ரா:நா த4மய் மொந்நு - யெக
தெ4ரந் முஸைகி தே3வுக் ப4ஜொ குண்ணு
சரம ஸ்லோக் அர்த்துந் அய்கி ஸெய்ல்வோ ஸெய்ல்வோ ஸங்கு
சக்ரபாணி விநா க3தி நீ:யேட் ஜல்வோ (க2டெ3)

பிடிக்கக் கிளம்பினால் நிற்காது ஓடும் மனம் - இதை
பிடிக்க முடியுமோ தெய்வத்தை வணங்குதல் குணம்
சரம ஸ்லோக பொருள் கேட்டு பாருங்கள் பாருங்கள் சங்கு
சக்ரபாணியை விட்டால் கதி இல்லை இங்கு அறியுங்கள் (கொண்ட)

இஸோஸ் ஏ மெநிகு ஜெலும் அவ்லேத் ரா:ய்கி - ஏ
ஹரிக் ப4ஜந நீ:ஜியேத் பாப் திரைகி
பிஸொ தெ4ரி ஹிண்டு3நகன் நமமூஸ் வாடு - சொக்கட்
பிஸொ தெ4ரி க3வ்னாஜியேத் நீ: க3தி யேடு (க2டெ3)

இப்படியே இந்த மனிதப் பிறவி வந்து கொண்டே இருக்குமோ - இந்த
ஹரி பஜனை இல்லையேல் பாவம் தீருமோ
பித்துப் பிடித்து அலையாதீர் நாமமே வழி - நல்ல
பித்துப் பிடித்து பாடாவிட்டால் இல்லை இங்கே கதி (கொண்ட)

வடபத்ரார்யுநு மொகொ வாட் தி3யாஸி - ஸ்ரீ
வைகுண்டுக் நிக்ளி ஜவேந் வாட் ஹொயெஸி
நடனகோ3பாலூஸ் தே3வ் நஜ்ஜவுங்கநு - க3வி
நடனம் கர்னாஸ்தக கோ பொ3வுங்கநு (க2டெ3)

வடபத்ரார்யர் எனக்கு வழி கொடுத்தார் - ஸ்ரீ
வைகுண்டம் கிளம்பி போகும் வழி கிடைத்தது
நடனகோபாலனே தெய்வம் கெட்டுப் போகாதீர் - பாடி
நடனம் செய்யாமல் சும்மா அழைக்காதீர் (கொண்ட)

பாடல் : ஸ்ரீ நடனகோபால நாயகி ஸ்வாமிகள்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
இராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி

Monday, June 15, 2009

திருமங்கை மார்பன் திருமலைகள் ஏழுடையோன்




இராமானுசன் திருவடிகளே தஞ்சம் என்றும் ஆழ்வார் ஆசாரியார் திருவடிகளே தஞ்சம் என்றும் ஆண்டாள் திருவடிகளே தஞ்சம் என்றும் இறைவனைச் சரணடைவது போலவே இறையடியார்களையும் சரணடைவது முன்னோர் காட்டிய வழி. அந்த அடியவர்கள் காட்டிய வழி திருமகளான அன்னையை முன்னிட்டு எம்பெருமானைச் சரணடைவது. 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்று தொடங்கியே 'உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே' என்றார் நம்மாழ்வார். அதே போல் நாயகி சுவாமிகளும் இந்தப் பாடலில் 'திருமங்கை மார்பன்' என்று தொடங்கி 'நீலமேகன் தஞ்சம்' என்றும் 'கோவலன் தாள் தஞ்சம்' என்று தஞ்சமடைந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ அவனைத் தஞ்சம் அடைவதை விட அவனடியார்களைத் தஞ்சம் அடைவதே சரி என்று எண்ணி 'நாத்தழும்பேறத் துதிக்கும் நல்லவர் தாள் தஞ்சம்' என்று அடியார்களைத் தஞ்சமடைந்து இந்தப் பாடலை நிறைவு செய்கிறார்.

திருமங்கை மார்பன் திருமலைகள் ஏழுடையோன்
திருவரங்கத் தலமுடையோன் திருப்பதிகள் உடையோன் (திரு)


அருளே உருவான திருமங்கை யான மகாலட்சுமி தாயார் வாழும் மார்பை உடையவன் அவன். அவ்வருளின் வெளிப்பாடாக தன் திருவடிகளைத் தஞ்சமடைவதே உயிர் உய்ய வழி என்று காட்டிக் கொண்டு பொறுமையாக நிற்கிறான் திருமலைகள் ஏழும் உடையவனான திருவேங்கடத்தான். மலையேறி வந்து அவனைச் சரணடைய இயலாதவர்களுக்கு காவிரி கொள்ளிடம் என்னும் இரு ஆறுகளின் இடைக்குறையில் திருவரங்கத்தலமுடையோனாக நிலை கொண்டுள்ளான். இங்கெல்லாமும் சென்று அவனைத் தஞ்சமடைய முடியாதவர்களுக்கு தன் திருமேனியைப் பல திருப்பதிகளிலும் நிலை நிறுத்தியிருக்கிறான். அவனது அருளினையும் நீர்மையினையும் என்ன சொல்ல?

திருமங்கை மார்பன் என்றதால் அவனது பர உருவம் சொன்னார். திருப்பதிகளைக் குறித்ததனால் அவனது அருச்சை என்னும் சிலையுருவைச் சொன்னார்.


திருவவதாரம் ஈரைந்தும் செகதலத்தில் செய்தோன்
திருப்பாற்கடலைக் கடைந்து அமுத மழை பெய்தோன் (திரு)


யானையை யானைய்க் கொண்டு பிடிப்பது போல உலக உயிர்களை அவ்வுயிர்களின் தோற்றமே கொண்டு தான் நல்வழிப்படுத்த வேண்டும் என்று அவனது அருளின் திறத்தால் ஈரைந்து = பத்து திருவவதாரங்கள் இந்த பூமியில் செய்தான். இதனால் இறைவனின் விபவ உருவம் சொன்னார்.

திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது ஆமையாகவும் மோகினியாகவும் உருக்கொண்டு அமுத மழையைப் பெய்தான். இறைவனின் வியூஹ உருவத்தைத் திருப்பாற்கடலைச் சொன்னதன் மூலம் சொன்னார்.

திருக்கைகளாலே சிவன் தன் வில் இரண்டாய் உடைத்தோன்
திருமகளாகிய சீதாதேவியின் கை பிடித்தோன் (திரு)


இராமனாக அவதரித்த போது தன்னுடைய திருக்கைகளால் சிவதனுசினை இரண்டாக உடைத்து திருமகளே ஆன சீதாதேவியின் திருக்கைகளைப் பிடித்தவன்.

கோவர்த்தனம் ஏந்திய கையன் கோபால துய்யன்
ஆபத்து தீர்த்தருளிய நம் ஆயர் குலத்து ஐயன் (திரு)


கடும் மழை பெய்த போது 'குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்'. கோவர்த்தனம் ஏந்திய கைகளை உடையவன். பசுக்களைக் காப்பவன் - கோபாலன். தூயவன். ஆயர்குலத்திற்கு நேர்ந்த ஆபத்துகளை தீர்த்து அருளிய நம் ஆயர் குலத்துத் தலைவன்.

அங்கத்துடனே சகல ஆக்கைகள் உண்டாக்கும்
பங்கயத்து அயன் பணியும் பரமன் என்னைப் பார்க்கும் (திரு)


கைகால்கள் என்னும் எல்லா அங்கங்களுடன் உலகில் எல்லா உடல்களையும் உருவாக்கும் தாமரையில் வாழும் பிரம்மன் பணிகின்ற பரமன். என் மேல் கருணையுடன் பார்ப்பவன்.


சேலையை நீக்கி என்னைச் சேரும் சீலனைப் பாராய்
ஆலைக் கரும்பு அது போல நான் ஆனேன் அல்லல் தீராய் (திரு)


இது வரையில் தானான நிலையிலேயே பாடி வருகிறார் போலும் என்ற எண்ணம் தோன்றும் வகையில் பாடி வந்த நாயகி சுவாமிகள் இந்தத் தொடுப்பில் தான் நாயகியாகவே பாடி வருவதை மிக அழகாகக் காட்டிவிட்டார்.

எனக்கும் அவனுக்கும் இடையில் இருக்கும் தடைகளை எல்லாம் (என் முயற்சியில்லாமல்) அவனாகவே நீக்கி என்னைச் சேர்ந்திடும் சீலன் அவன். இப்போது அவனைப் பிரிந்து பிழியப் பட்ட கரும்புச்சக்கையைப் போல ஆனேன் என் அல்லலைத் தீராய்.

அவரவர்கள் எண்ணம் போல் அநுக்கிரகங்கள் செய்யும்
சிவனுடைய செங்கையின் சிரமம் அதைக் கொய்யும் (திரு)


நான்குவிதமானவர்கள் என்னை வணங்குகிறார்கள்; அவர்கள் வேண்டியதை அவர்களுக்கு அருளுகிறேன் என்றான் கண்ணன். அதனைச் சொல்கிறார் இங்கே. அவரவர்கள் வேண்டியபடி அவர்களுக்கு அனுக்கிரகங்களைச் செய்பவன். பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் பிரம்மஹத்தி நீங்கி அவர் திருக்கரங்களில் ஒட்டியிருந்த காபாலம் விலகும்படி அருளியவன்.

துக்கங்களுக்கு இருப்பிடமாய்த் துலங்குதே என் நெஞ்சம்
நிற்க வைக்கக் கூடவில்லை நீலமேகன் தஞ்சம் (திரு)


உலகத்தில் இருக்கும் துக்கங்களுக்கெல்லாம் ஒரே இருப்பிடம் போல் ஆகிவிட்டது என் உள்ளம். ஒரு நிலையில் நிறுத்த முடியவில்லை நெஞ்சத்தை. நீலமேகனே நீயே கதி.

நீவாத தீபமென முன்னின்றதே என் நெஞ்சம்
கோவர்த்தனக் குடை பிடித்த கோவலன் தாள் தஞ்சம் (திரு)


தூண்டிவிடாத விளக்கினைப் போல் ஒளிமங்கிக் கிடக்கிறதே என் நெஞ்சம். ஆயர்கள் துன்பம் தீர்க்கக் கோவர்த்தனக் குடை பிடித்த கோவலனே. நீயே தஞ்சம்.

ஆற்றங்கரைத் தீபமென அலைகுதே என் நெஞ்சம்
நாத்தழும்பேறத் துதிக்கும் நல்லவர் தாள் தஞ்சம் (திரு)


ஆற்றங்கரைக் காற்றில் அலைபாயும் விளக்குச்சுடரைப் போல் அலைகிறது என் நெஞ்சம். நாத்தழும்பேற அவன் திருப்பெயர்களைச் சொல்லித் துதிக்கும் நல்லவர்களின் திருவடிகளே தஞ்சம்.

இந்தப் பாடலை திரு. தொ.மீ. சௌந்தரராஜன் பாடி இங்கே கேட்கலாம்.

நாயகி சுவாமிகள் திருவடிகளே தஞ்சம்.

Thursday, June 04, 2009

அன்னம் புசி என்று உரையாதே அகன்று போடி


கோபியர்களும் ஆழ்வார்களும் கண்ணனின் பிரிவால் வாடி வாடிப் பாடிய பாடல்களை நாம் படித்திருக்கிறோம். 'ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி' என்று புலம்புவான் பாரதியும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்த நாயகி சுவாமிகளும் அதே போன்ற உணர்வு கொண்டு அவன் பிரிவால் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். நடனகோபால நாயகி என்ற அவருடைய திருநாமத்திற்கு ஏற்றதொரு பாடல் இது. இந்தப் பாடலின் சில சரணங்களைத் திரு. தொ.மீ. சௌந்தரராஜன் (டி.எம்.எஸ்) அவர்களின் இனிய குரலில் இங்கே கேட்கலாம்.

அன்னம் புசி என்று உரையாதே அகன்று போடி
அன்னம் விஷமாய் இருக்கிறது அறிந்து கொள்ளாய் நாடி (அன்னம்)


உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று இருக்கும் ஆழ்வார்களில் ஒருவராகக் கருதக் கூடிய நாயகி சுவாமிகளுக்கு கண்ணனின் பிரிவால் அன்னம் விஷமாக இருப்பது இயற்கையே. பாவம் தோழிகளாகச் சுற்றியிருக்கும் மற்ற உயிர்களான நமக்குத் தான் அது தெரியவில்லை. அன்னம் புசி என்று வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம்.

புன்னை மரத்தடியில் பெண்கள் புலம்பச் செய்த சோரன்
என்னை மறந்தானோ இப்போது இக்குல உபகாரன் (அன்னம்)


புன்னை மரத்தடியில் மற்ற பெண்களைப் புலம்ப வைத்து அவர்களுக்கு அருள் செய்த அந்தச் சோரன் இன்று எனக்கருள் செய்யாமல் மறந்தானோ? அங்கே செய்த அதே லீலை இங்கும் செய்து எனக்கு அருள மாட்டானோ? அப்படி அவன் அருளினால் எனது ஏழ்படிகாலும் வீடு பெற்று உய்வோமே! என் குல உபகாரன் என்னை மறந்தானோ? - என்கிறார்.

ஆள் செய்யாமலே நாள் இங்கே அகன்று போகுதேடி
வாழ்விப்பான் என்றே இருந்தேன் மாயம் செய்தானேடி (அன்னம்)


அவனுக்கு ஆட்செய்யாமலேயே, தொண்டு செய்யாமலேயே நாட்கள் இங்கே நகர்ந்து போய்கொண்டிருக்கிறதே; அவனுக்கே ஆட்செய்தல் என்ற வாழ்வினைத் தந்து வாழ்விப்பான் என்றே ஒன்றும் செய்யாமல் காத்திருந்தேனே; மாயம் செய்துவிட்டானே - என்கிறார்.

தாக நீரேனும் கொள் எனச் சாற்றுகிறாய் இங்கே
தாகம் அடங்குமோ தாமோதரனைக் காணாது இங்கே (அன்னம்)

அடடா. தாமோதரனைக் காணாது தாகம் அடங்குமோ இங்கே என்கிறாரே. என்ன ஒரு உணர்வு! தமரேஸ் தின்னு தமரேஸி; தாக் நீஸ்தெநு மோஸ் ஜாரியாசி; தாமோதரா தாமோதரா தொர தய கோன் கலம் அவய் தாமோதரா - ஓடுகின்றதே நாள் ஓடுகின்றதே; பயம் இல்லாதவர்கள் மோசம் போகின்றார்களே; தாமோதரா தாமோதரா உன் தயை எந்த காலம் வரும் தாமோதரா - என்று உருகியராயிற்றே.

சொல்லாதே அடைக்காய் அமுதால் சுகம் என்னேடி
எல்லாருக்கும் தெரியுமே என் இதயம் ஈதன்றோடி (அன்னம்)

உண்ணும் சோறு, பருகும் நீர் இவையெல்லாம் கண்ணன் என்று மேலே சொன்னார். அவை மட்டும் இல்லை தின்னும் வெற்றிலையும் கண்ணனே என்கிறார் இங்கே. தின்னும் வெற்றிலையாய், போகமாய், அவனே இருக்கும் போது வெறும் அடைக்காய் அமுதம் என்ன சுகம் தரும்? என் இதயம் தான் என்ன என்று உங்கள் எல்லோருக்குமே தெரியுமேடி என்கிறார்.

கண்ணேறு படும்படி எங்கெங்கே செல்கின்றானோ
நண்ணப் போய் அழைத்து வாடி நான் காணாது உய்வேனோ (அன்னம்)

நம்மாழ்வார் போல் பாடிக் கொண்டிருந்தவருக்கு கூடல் அழகன் நினைவு வந்துவிட்டது போலும். கூடல் மா நகரில் தானே விட்டுசித்தருக்கு எதிரே பெருமாள் வந்த போது அவனுக்குக் கண்ணேறு பட்டுவிடுமோ என்று பல்லாண்டு பாடினார். இங்கே என்னைத் தவிக்க விட்டுவிட்டு கண்ணேறு படும்படி இப்படி எத்தனை பேர் முன் போய் நிற்கின்றானோ? போய் அவனை அழைத்து வாடி என்கிறார்.

திடுக்குத் திடுக்கென என் நெஞ்சம் திகில் அடைகுது இங்கே
அடுக்கு முறி வெண்ணெய் கண்ணனுக்கு அமுது செய்வது எங்கே (அன்னம்)

கண்ணேறு படும்படி எங்கெல்லாம் சுற்றுகின்றானோ என்று எண்ணும் போதே எனக்கு திடுக் திடுக்கென்று நெஞ்சம் திகில் அடைகின்றதே. அவன் அப்படி கண்ணேறுபட்டு நோய் வாய்ப்பட்டால் அடுக்கு முறி வெண்ணெயை அவன் உண்ண முடியாதே என்று தவிக்கிறார். வெண்ணெய் நிறைய உண்டதற்கு மருந்தாக மண்ணை உண்டாயோ என்றார் நம்மாழ்வார். கண்ணேறு பட்டால் அந்த வெண்ணெயும் அமுது செய்ய இயலாதே என்கிறார் இவ்வாழ்வார்.

தயிர் கடையும் வேளை வந்து தழுவி விளையாடும்
மயிலிறகுக் கொண்டையன் மனம் என்று நம் பால் நாடும் (அன்னம்)

ஆழ்வார்களாய் பாடிக் கொண்டிருந்தவர் இங்கே கோபியரில் ஒருத்தி ஆனார் போலும். தயிர் கடையும் வேளையில் வந்து பின்னே தழுவிக் கொள்வானே. அந்த மயிலிறகுக் கொண்டையன் மனம் என்று நம் பால் விரும்பும்; ஆ ஆ என்று ஆராய்ந்து அருளும் என்று வியக்கிறார்.

மழை இல்லாப் பயிர் அது போல நான் மயங்குவேனோ வாடி
களை எடுக்காத பயிர்கள் தலையெடுக்குமோடி (அன்னம்)

வானம் பார்த்த பூமியில் வாழும் பயிர்கள் போல் வேறொன்றும் கதியாக எண்ணாமல் அவன் அருளே முதற்பொருளாய் கொண்டு வாழும் நாயகி சுவாமிகள் மழையில்லாமல் வாடும் பயிர் போல் அவன் அருள் இல்லாமல் வாடுவதைச் சொல்கிறார். முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் முதற்பொருள் ஆகவில்லையே என்று இருப்பார்கள் நடுவில் முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் போன்ற தன் முயற்சியால் அவனை அடைய இயலும் என்று அவ்வழிகளில் முயல்வார்களும் இருந்தால் அவர்களால் இவர்களும் மயங்குவார்களே. களை எடுக்காத பயிர்கள் தலையெடுக்குமோ? ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்று ஒரு நிபந்தனை இட்டிருக்கிறானே. அதன் படியல்லவோ நடக்க வேண்டும். என் முயற்சியால் அவன் அருளைப் பெற்றுவிடுவேன் என்ற எண்ணம் களையாக இருக்கிறதே; அதனை அவன் அருளால் நீக்க மாட்டானோ? அவன் அருள் என்னும் மழையை நோக்கும் பயிரான நான் தழைக்க மாட்டேனோ - என்கிறார்.

செழித்திருந்தேனே கண்ணனைச் சேவிக்கும் போதெல்லாம்
குழைத்துக் கிடக்கின்றன பார் குழக்கன்றுகள் எல்லாம் (அன்னம்)

அவனுக்கே தொண்டு செய்து கிடந்த போதெல்லாம் பசுங்கன்றில் ஒன்றான நான் செழித்துக் கிடந்தேனே. இப்போது அவன் அருள் அகன்று போக நானும் என்னை ஒத்த பசுங்கன்றுகளும் குழைத்துக் கிடக்கின்றன பார். கோபாலன் தீண்டினால் அல்லவா அக்குழக்கன்றுகள் மீண்டும் செழிக்கும் - என்கிறார்.

நடனகோபால நாயகி சுவாமிகள் திருவடிகளே அடைக்கலம்.

Saturday, August 30, 2008

ஹரி என சொல்லுங்கள்

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. என்றார் வள்ளுவர்

அத்தகைய அருளை பெறுவதற்க்கும், பெற்றதை காப்பதற்க்கும் என செய்வது என்று தன் சீடர்கள் கேட்க, ஹரி நாமம் கேட்பதே, சொல்வதே பேரின்பம் என்று இருக்கும் நாயகி சுவாமிகள் என்ன சொல்வார், சீடர்களுக்கும், வழிபோக்கர்களுக்கு, அருகில் நிற்க்கும் பெரியோர்களையும், அங்கும் இங்கும் திரியும் மக்களுக்கும் சொல்லும் பாங்காக அமைந்துள்ளது இப்பாடல்.

இதை தன்னுடைய துள்ளல் இசையில் டி.என்.சந்திரசேகர் அவர்கள் பாடியுள்ளார்.

ஹரி மெனொபா3 ஹரி மெனொரே
ஹரி மெனெத் பாப்தா4ம் தெ4ரி த4மய்ரே (ஹரி)

ஜியெதி3ந்நு ஜான்த3க் ரி:யெதி3ந்நு அத்தோதி (ஹரி)

தா3துன் அஸ்கி லல்னாஸ்திக்காம்
தா3ர் தொ3ங்கர் கெல்லி த3டுநாஸ்திக்காம்
பீ4த் தெ4ல்லிகின் சல்னாஸ்திக்காம்
தளம் நீஸ்தக் தொ3வ்ரொஹொய் நசுனாஸ்திக்காம்(ஹரி)

தூ4ம்லயெ ஸரீர் து4ள்னாஸ்திக்காம்
பு3த்தி3 பெ4ண்டு ஹொய் த4மிஜானாஸ்திக்காம்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி பிஸுனாஸ்திக்காம்
ஜொமைன் த3ணி ஹிங்கு3னாஸ்திக்காம் (ஹரி)



ஹரி மெனொபா3 - ஹரியென சொல்லுங்கள்
ஹரி மெனொரே - ஹரியென்பீரே
ஹரி மெனெத் - ஹரியெனச் சொன்னால்
பாப்தா4ம் தெ4ரி த4மய்ரே - பாபம் பின்னாங்கால் பிடரியில் பட ஓடுமே

ஜியெதி3ந்நு - சென்ற நாட்கள்
ஜான்த3க் - போகட்டும்
ரி:யெதி3ந்நு - இருக்கும் இந்த நாளில்
அத்தோதி - இப்போதாவது (சொல்லுங்கள்)

தா3துன் அஸ்கி - பற்க்கள எல்லா
லல்னாஸ்திக்காம் - உதிர்வதற்க்குள்
தா3ர் தொ3ங்கர் - வாயிலை மலையாக
கெல்லி த3டுநாஸ்திக்காம் - கொண்டு கடப்பதற்க்குள்
பீ4த் தெ4ல்லிகின் - சுவரை பிடித்து
சல்னாஸ்திக்காம் - நடப்பதற்க்குள்
தளம் நீஸ்தக் - ஆதாரம் இல்லாமல்
தொ3வ்ரொஹொய் - வயோதிகமைடந்து
நசுனாஸ்திக்காம் - ஆடுவதற்க்குள்

தூ4ம்லயெ ஸரீர் - புகைப்பட்ட உடலது
து4ள்னாஸ்திக்காம் - புறப்படுவதற்க்குள்
பு3த்தி3 பெ4ண்டு - அறிவு ஆடாய்
ஹொய் த4மிஜானாஸ்திக்காம் - மாறி ஓடுவதற்க்குள்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி - நதியை கடந்து அக்கரை சென்று
பிஸுனாஸ்திக்காம் - அமர்வதக்குள்
ஜொமைன் - வீட்டு மாப்பிள்ளைகள்
3ணி ஹிங்கு3னாஸ்திக்காம் - தோளில் ஏறுவதற்க்குள்

இறப்பதற்க்கு முன்னர் சொல்லிவிடு என்பதை எவ்வளவு நாசுக்காக இறப்பு என்ற சொல்லே வராமல் பாடி முடித்த ஐயனது கவி நிபுணத்துவம் சொல்லி மாளாது.

ஹரி மெனொபா3 ஹரி மெனொரே
ஹரி மெனெத் பாப்தா4ம் தெ4ரி த4மய்ரே (ஹரி)

ஹரியென்பீரே, ஹரியென்பீரே
ஹரியென பாபாம் பயந்தோடுமே (ஹரி)

ஜியெதி3ந்நு ஜான்த3க் ரி:யெதி3ந்நு அத்தோதி (ஹரி)

சென்ற நாட்கள் செல்லட்டும், இருக்கும் இப்போழுதாவது (ஹரி)

தா3துன் அஸ்கி லல்னாஸ்திக்காம்
தா3ர் தொ3ங்கர் கெல்லி த3டுநாஸ்திக்காம்
பீ4த் தெ4ல்லிகின் சல்னாஸ்திக்காம்
தளம் நீஸ்தக் தொ3வ்ரொஹொய் நசுனாஸ்திக்காம்(ஹரி)

பற்களனைத்தும் விழுவதற்க்குள்
வாயிலை மலையாக கடப்பதற்க்குள்
சுவரை பிடித்து நடப்பதற்க்குள்
ஆதாரம் இல்லாமல் கிழவனாய் ஆடுவதற்க்குள் (ஹரி)


தூ4ம்லயெ ஸரீர் து4ள்னாஸ்திக்காம்
பு3த்தி3 பெ4ண்டு ஹொய் த4மிஜானாஸ்திக்காம்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி பிஸுனாஸ்திக்காம்
ஜொமைன் த3ணி ஹிங்கு3னாஸ்திக்காம் (ஹரி)

புகைபட்ட உடலதம் விழுவதற்க்குள்
புத்தி பேதலித்து ஓடுவதற்க்குள்
ஆற்றை கடந்து சென்று அமர்வதற்க்குள்
மாப்பிள்ளை தோளில் ஏறுவதற்க்குள் (ஹரி).

Thursday, August 28, 2008

இராமனா கிருஷ்ணனா யார் கருணை வேண்டும்?



நீரில் மூழ்கும் போது நீச்சல் தெரியாதவன் எப்படித் தவிப்பானோ அப்படிப்பட்ட தவிப்பு இருந்தால் இறையை உடனே உணரலாம் என்று அறிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குறைவற்ற அன்பு மட்டுமே துணையாகக் கொண்டு நீரில் மூழ்கி மூச்சுத் திணறும் ஒரு மீனவ பக்தனுக்காக அன்னை காட்சி கொடுப்பதை மிக நன்றாக 'ஆதிபராசக்தி' திரைப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தவிப்பு கொள்வதை 'ஆர்த்தி' என்று சொல்வது வழக்கம். இனி மேலும் தாங்காது; நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன; ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கழிகிறது; உன் கருணைக்காக வேண்டி நிற்கிறேன்; வருவாய் வருவாய் வருவாய் என்று ஏங்கி அழைக்கும் ஆர்த்திப் பிரபந்தமாக இருக்கும் நாயகி சுவாமிகளின் பாடல்கள் பலவற்றில் ஒன்றை இங்கே தருகிறேன்.

இந்தப் பாடலை டி.எம்.எஸ். பாடி இங்கே கேட்கலாம். இந்த இடுகையில் சௌராஷ்ட்ரப் பாடலின் வரிகளையும் அதனைத் தொடர்ந்து அடியேன் செய்த தமிழாக்கத்தையும் தருகிறேன். ஒரே மெட்டில் இரண்டு மொழிப் பாடல்களையும் பாடலாம் என்று நினைக்கிறேன். யாரேனும் அதே மெட்டில் தமிழ்ப்பாடலைப் பாடித் தந்தால் அதனை இங்கே சேர்த்துவிடுகிறேன்.



ராமா க்ருப ஸாரே ராக் ஸோட் ரே ஸ்ரீ
ராமா க்ருப ஸாரே (ராமா)

இராமா கருணை செய்வாய் சினம் விடடா ஸ்ரீ
இராமா கருணை செய்வாய் (இராமா)

ராமா க்ருப ஸாரே ப்ரேம ஹோர் அவிகிநு
தே தொர் பதாலுநு தூஸ் மொக் கதி ஸ்ரீ (ராமா)

இராமா கருணை செய் அன்புடன் வந்திங்கு
தா உன் பாதங்கள் நீயே கதி எனக்கு ஸ்ரீ (இராமா)

திந்நூ ஜேடரேஸி தேவு கோ
திந்நூ ஜேடரேஸி
திந்நூ கோ ஜேடரேஸ் மொந்நு தொவி மொர
மொந்நும் அவி மொந்நு துவெ மொதி காரி ஸ்ரீ (ராமா)

நாட்கள் போகின்றன தேவா வீணே
நாட்கள் போகின்றன
நாட்கள் வீணாகின்றன மனம் வைத்து எனது
மனத்தில் வந்து மனம் வெண் முத்தாய் செய் ஸ்ரீ (இராமா)

காய் கரு மீ யேடு ஏ கர்முனுக்
காய் கரு மீ யேடு
காய் கரு மீ யேடு மாய் பாப் மொக் கோநுரே
ஸாய் தூத் லொநி சொரே ரெங்க ஸாயி க்ருப ஸாரே (ராமா)

என்ன செய்வேன் நான் இங்கே இந்த வினைகளை
என்ன செய்வேன் நான் இங்கே
என்ன செய்வேன் நான் இங்கே அன்னை தந்தை எனக்காரடா
ஆடைப் பால் வெண்ணெய் தின்ற ரெங்கசாயி கருணை செய்வாய் (இராமா)


கெடோ செர்சிலேரே க்ருஷ்ணா க்ருஷ்ணா செனம்
கெடோ செர்சிலேரே க்ருஷ்ணா
கெடோ செர்சிலே நமம் படன கர்யாஸ்தெங்கோ
வடபத்ரஸாயி ஹொய் அவெ நடனகோபாலா (ராமா)

கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா விரைவாய்
கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா
கரை சேர்த்துக் கொள் நாமம் பாடிக் கொண்டிருப்பவர்களை
வடபத்ரசாயி ஆகி வந்த நடனகோபாலா (இராமா)



ஆழ்வார்கள் கண்ணன் செய்ததை இராமன் செய்ததென்றும் நரசிம்மனைப் பாடும் போது நடுவில் இராமனையும் கண்ணனையும் பாடியும் அவதாரங்களில் முன் பின்னாக நிகழ்ச்சிகளைக் கொண்டு சென்று உருகுவார்கள். ஆழத் தொடங்கி உருகிவிட்டால் இப்படித் தான் நிகழும் போலிருக்கிறது. பத்தொன்பதான் நூற்றாண்டின் சௌராஷ்ட்ர ஆழ்வாருக்கும் அப்படியே நடக்கிறது.

சினத்தை விடடா இராமா என்று கெஞ்சித் தொடங்கியவர் உன் பாதங்களே கதி என்று சரணம் அடைந்து, 'உன் அருளாலே உன் தாள் வணங்கி' என்று அருளாளர்கள் சொன்னது போல் நீயே மனம் வைத்து என் மனத்தில் வந்திருந்து என் மனத்தைத் தூய்மை செய் என்று பாடுகிறார். நடுவில் கரும வினைகளைப் பற்றி நொந்து கொண்டு என் தாயும் தந்தையுமான ரங்கசாயி நீயே கருணை செய் என்று இராமனிடமிருந்து அந்த இராமன் வணங்கிய அரங்கனிடம் தாவிவிடுகிறார்.

திருவரங்கனைப் பாடியவுடன் கண்ணனின் உருவாக நிற்கும் அழகிய மணவாளன் திருவுருவம் நினைவில் ஆடியது போலும். அதனால் திருவரங்கனைப் பாடும் போதே வெண்ணெய் களவு செய்து உண்ட வாயனையும் பாடிவிடுகிறார். அப்போது தானே இறுதியில் கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா என்று உருகி அழைக்க முடியும்.

இராமனாய், அரங்கனாய், கண்ணனாய் வந்தவனே தன் குருவான வடபத்ரஸாயி ஜீயராகவும் வந்தார் என்று குருவின் கருணையே தலையாயது என்று நிறைவு செய்தார். நாயகி சுவாமிகளுக்கு வடபத்ரார்யராக வந்து அருள் செய்த நடனகோபாலா! நீயே எங்களுக்கும் கருணை செய்ய வேண்டும்!

Thursday, March 20, 2008

கண்ணன் கைத்தலம்பார் கனாகண்ட...

வைணவ மரபில் அப்பனாம் பெருமாளின் திருவருளைப் பெறுவதற்கு முதலில் தேவையானது அன்னையாம் திருமகளின் திருவருள். அப்பனின் கருணையே அம்மையாக வடிவ்ம் கொண்டிருக்கிறது. உலக மக்களுக்கு எல்லாம் தந்தையாக இருக்கும் பெருமானே பக்கம் சாரா பெருமகனாகவும் இருப்பதால் நாம் செய்த நல்லது கெட்டது பார்த்து தான் அவன் தீர்ப்பு அமையும். அவன் உகக்கும்படியாக (மகிழும்படியாக) நாம் செய்தது மிகவும் குறைவே என்று நமக்கு நன்கு தெரியும். அதனால் தாயாரின் திருவடியை முதலில் பற்றிவிட்டால் நாம் தந்தையாரின் திருவடியைப் பற்றும் போது நம் தாய் நமக்காக பெருமாளிடம் பரிந்துரைப்பாள். அப்படி பெருமாளின் ஒரு பக்கத்தில் (பாரிசத்தில்) அமர்ந்து திருவானவள் பரிந்துரைப்பதால் தான் அந்த நற்செயலுக்கு ஸ்ரீபாரிசு ..> சிபாரிசு என்று பெயர் வந்ததாகப் பெரியோர்கள் சொல்லுவார்கள்.

இந்த மரபினை ஒட்டியே திருப்பாவை பாடிய கோதை நாச்சியாரும் முதலில் நப்பின்னை பிராட்டியைச் சரண் புகுந்து அவள் துணையுடன் கண்ணனைச் சரணடைகிறாள். நப்பின்னையை ஒத்த இன்னொரு பிராட்டி தானே கோதையும். அப்படியிருக்க அவரும் நப்பின்னையைச் சரணடைய வேண்டுமோ என்றால் நமக்கு அந்த நல்வழியைக் காட்டியருளத் தானே அவதரித்தாள் கோதை? அந்த அவதார நோக்கத்தின் படி அந்த நல்வழியைத் தானே பின்பற்றி நமக்கு நல்ல ஆசிரியையாக அமைகிறாள்.

இப்படி இருக்க நாம் சரணடைவது யாரை? திருமகளையா? நப்பின்னை பிராட்டியையா? அவர்களைச் சரணடைந்தாலும் பெருமாளின் திருவருள் பெறத் துணையாவார்கள் தான். ஆனால் தாயாகவும் ஆசிரியையாகவும் இருக்கும் ஆண்டாளைச் சரணடைந்தால்? இன்னும் அது பெருமாளுக்கு உகப்பான செய்கையாக இருக்குமே?

அப்படி கண்ணன் கைத்தலம் பற்றும் கனாவினைக் கண்ட சூடிக் கொடுத்தச் சுடர்கொடியின் திருவடியைப் பற்றும் வாய்ப்பு எப்போது கிட்டும் என்று இந்தப் பாடலின் மூலம் வியக்கிறார் நாயகி சுவாமிகள்.

இதோ முழுப்பாடலும். பாடலின் வரிகளுக்கான பொருளை அடுத்த இடுகைகளில் காணலாம்.

கண்ணன் கைத்தலம் பார் கனா கண்ட நாச்சியார்
கருணைக்கு ஆவது எப்போது?
புண்ணியஸ்தலமாம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
போய் சேருவது எப்போது?

ஆயர் மகன் மேல் ஆசை கொண்டாள் அடிக்கு
அன்பு செய்வது நாம் எப்போது?
வேயர் புகழ் வில்லிபுத்தூருக்கு ஏக நாம்
விருப்பம் வைத்திடுவது எப்போது?

அச்சுதன் அனந்தன் மேல் ஆசை வைத்தாள் மலர்
அடி சிரம் அணிவது எப்போது?
முச்சகம் போற்றும் வில்லிபுத்தூருக்கு
முடிவில் செல்வது நாம் எப்போது?

துளசி வனம் தனில் உலக மகிழ் ஆண்டாளுக்கு
தொண்டு செய்திடுவது எப்போது?
குளம் மூன்றும் ஒன்றாய் வில்லிபுத்தூருக்கு ஏக
உளம் மகிழ்ந்திடுவது எப்போது?

அன்ன நடை எங்கள் ஆண்டாள் திருவடிக்கீழ்
அமர்ந்திடுவது எப்போது?
அன்னவயல் ஸ்ரீ புதுவைக்கு ஏக நாம்
ஆசை வைத்திடுவது எப்போது?

திருவாடிப்பூரத்தில் அவதரித்தாள் சே
வடிக்கீழ் புகுவது எப்போது?
திருப்பாவை அருளும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
செல்வது இனி நாம் எப்போது?

குயிலைக் கூவாய் என்னும் குயில் மொழியாள் அடிக்
கீழ் குடி ஆவது எப்போது?
குயிலினங்கள் ஆர் ஸ்ரீவில்லிபுத்தூர் தனில்
குடியேறி வாழ்வது எப்போது?

பெண்மணியாம் கோதை ஆண்டாள் திருப்பாதம்
பேணிப் பணிவது எப்போது?
கண்குளிர அப்பனை வில்லிபுத்தூர் தனில்
கண்டு களிப்பது எப்போது?

இண்டர் நடைக்குணம் கொண்டாடும் ஆண்டாள்
இணையடி பணிவது எப்போது?
அண்டர் முனிவர்கள் தொண்டர் ஏத்தும் புத்தூர்
கண்டு களிப்பது எப்போது?

திருவரங்கேசனை மருவி வாழ் ஆண்டாள் தன்
திருவடை அடைவது எப்போது?
இருநிலம் புகழ் வில்லிபுத்தூருக்கே போவேன் என்று
இயம்பி நடப்பது எப்போது?

நடனகோபாலனை நாடும் கோதைத் திரு
அடி நாடி வாழ்வது எப்போது?
வடபத்ரஸாயி அருளும் வில்லிபுத்தூர்
மருவி வாழ்ந்திடுவது எப்போது?

Wednesday, March 19, 2008

எப்போது எங்கு...

கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர் ஜியேத்
எதுகுலகாம்போ3தி ராகு
ஆதி3 தாளு


பல்லவி
கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர் ஜியேத்
கோன் ஜெலுமவைகி கோநொக்கி த்யே கொங்க்ஹால்தி ஜநன் ஹோய்கி (கோன்)

அநுபல்லவி
மான்ஹோர் ஐகுநாஸ்தக் கான்தீ3 ஐகோ ஐகோ
த்4யாந் கரோ ஹரி முக்தி தே3நவயி ஸெத்ல (கோன்)


சரணு
ஸுநொ மஞ்ஜ்ரி கூ4ஸொ:ய் உஜெதி3ந்நு பு4ந்நஹா
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா பொந்தெ3
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா
ஹந நவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
மொந் ஹரிஹோர் தொ2வொ முக்திதே3யி ஸெத்ல (கோன்)

கள கொ3ரொ ரூப்ஹொய் உஜெதி3ந்நு பு2ந்நஹா
கரெ கருமுன் பு2ந்நஹா பு2ள்ளோ
கரெ கருமுன் பு2ந்நஹா
கெ3ளரவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
ஸிள ஹரிக் த4யாந்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

ஸீன்ஸெர ஜென்முந் க2டெ3 தி3ந்நுந் பு2ந்நஹா
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா யே ஸெய்லுவோ
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா
பான்ப23ஸ்தெ யெமாக்காய்கரன் ஹோய் தும்ரால்
ஸீன் திர்ஜாய் த்4யான்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

மொ:டொதெநொ யெநொ மெநேத் ஸொட்டி3 ஜேடை3ஹா யெமுட்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3யெமுட3வேத்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3
வடபத்ரார்யுநு க்ருபஹால் மொ:டொ மந்தூர் அப்3பே3ஸ் மொகொ
நடனகோ3பாலூஸ் தே3வ் நஜ்ஜாநகோநைகொ (கோன்)

பல்லவி
கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர் ஜியேத்
கோன் ஜெலுமவைகி கோநொக்கி த்யே கொங்க்ஹால்தி ஜநன் ஹோய்கி (கோன்)

எப்போது எங்கு விழுந்து போகுமோ இவ்வுயிர் போனால்
எந்த ஜென்மம் வருமோ என்னவோ, இதை யாரால் அறியசெய்ய முடியுமோ

அநுபல்லவி
மான்ஹோர் ஐகுநாஸ்தக் கான்தீ3 ஐகோ ஐகோ
த்4யாந் கரோ ஹரி முக்தி தே3நவயி ஸெத்ல (கோன்)


கழுத்து மீது என்றில்லாமல் காது கொடுத்து கேட்ப்பீர்
தியானித்தால் ஹரி முக்தி தர சத்திய (எப்போது)

சரணு
ஸுநொ மஞ்ஜ்ரி கூ4ஸொ:ய் உஜெதி3ந்நு பு4ந்நஹா
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா பொந்தெ3
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா
ஹந நவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
மொந் ஹரிஹோர் தொ2வொ முக்திதே3யி ஸெத்ல (கோன்)


நாய், பூனை, பெருச்சாளியாய் பிறந்தது நாட்கள் போதாதா
சுகம், துக்கம் போதாதா அடைந்த
சுகம், துக்கம் போதாதா
அடிக்க வரும் எமனை என்ன செய்ய இயலும் உம்மால்,
ஹரிமீது மனம் வைக்க, முக்தியளிப்பான் சத்திய (எப்போது)

கள கொ3ரொ ரூப்ஹொய் உஜெதி3ந்நு பு2ந்நஹா
கரெ கருமுன் பு2ந்நஹா பு2ள்ளோ
கரெ கருமுன் பு2ந்நஹா
கெ3ளரவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
ஸிள ஹரிக் த4யாந்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

கருப்பு வெள்ளை ரூபத்துடன பிறந்த நாட்கள் போதாதோ
செய்த கர்மங்கள் போதாதோ பின்னால்
செய்த கர்மங்கள் போதாதோ
யமன் கழுத்தை நெறிக்க வரும் போது என்ன செய்ய இயலும் உம்மால்
(பாற்கடலில்) குளிர்ச்சியாய் இருக்கும் ஹரியை தியானித்தால் முக்தியளிப்பான் சத்திய (எப்போது)


ஸீன்ஸெர ஜென்முந் க2டெ3 தி3ந்நுந் பு2ந்நஹா
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா யே ஸெய்லுவோ
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா
பான்ப23ஸ்தெ யெமாக்காய்கரன் ஹோய் தும்ரால்
ஸீன் திர்ஜாய் த்4யான்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

இளைப்புகளை தரும் ஜென்மங்களை எடுத்த நாட்கள் போதாதோ
சாணத்தில் புழுவாய் இருந்தனையே பாருங்கள்
சாணத்தில் புழுவாய் இருந்தனையே
ஜாதகத்தை கிழிக்கும் எமன் முன் என்ன செய்யமுடியும் உம்மால்
இளைப்புகளை தீர்க்க தியானிப்பீர் முக்தியளிப்பான் சத்திய (எப்போது)

மொ:டொதெநொ யெநொ மெநேத் ஸொட்டி3 ஜேடை3ஹா யெமுட்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3யெமுட3வேத்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3
வடபத்ரார்யுநு க்ருபஹால் மொ:டொ மந்தூர் அப்3பே3ஸ் மொகொ
நடனகோ3பாலூஸ் தே3வ் நஜ்ஜாநகோநைகொ (கோன்)

அவன், இவன் பெரியவன் எனச் சொன்னார் விடமாட்டான் எமன்
உடையாமல் போகுமோ இப்பானை எமன் வந்தால்
உடையாமல் போகுமோ இப்பானை
வடபத்ரர் கிருபையினால் பெரியமந்திரம் எனக்கிட்டியது
நடனகோபாலனே கடவுள் கெட்டு விடாதீர் கேளும் (எப்போது)

Saturday, July 28, 2007

குருவை அடைந்தவருக்கும், வணங்காதவர்க்கும்

நாளை குரு பூர்ணிமா. நாளை குருக்களுக்கு வந்தனம் செய்யும் நாள். நம்மை தந்தைக்கு அடுத்த இடத்திலிருந்து காக்கும், கற்பிக்கும் அத்தகைய குருக்களுக்கு நம்மால் முன்னோர்(பித்ரு)கடன் செய்ய முடியாமல் இருக்கும் குறையை போக்க, அவர்களை வணங்க ஒரு நாள். குருபூர்ணிமா.

குருப்ரம்மா குருர் விஷ்ணு, குருர் தேவோ மஹேஸ்வர:
குருசாக்ஷாத் பர ப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ:


அனைத்து வேதத்திற்க்கும் குரு, அந்த வேதக்கடவுள் பிரமன், தேனுக்கெல்லாம் தேவன் ஸ்ரீமந் நாராயாணன், குருவிர்கெல்லாம் குரு, அந்த மாஹாதேவன் ஈசன், இத்தகைய மும்மூர்த்திகளுக்கு இணையானவர் நமக்கு வழிகாட்டும் குரு. அப்பேற்பட்ட குருவை எப்படி வணங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு இதே குரு பூர்ணிமா அன்று ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் ஒரு பாடலை இட்டேன். இப்பதிவில் அத்தகய குருவை அடைந்தவருக்கும், குருவை வணங்காதவர்க்கும் என்ன கதி என்று சொல்லும் பாடல்.

கு3ரு தே3வுநுக் சல்னாஸ்தெநூஸ்...
ம:லார் ராகு

ஆதி3 தாளு கேட்க


பல்லவி

கு3ரு தே3வுநுக் சல்னாஸ்தெநூஸ் லோகுர் ராண்
பு4ருமு ஜ:டா3ன்ஹொய் ரீ:ரியாஸ்தெ [கு3]


அநுபல்லவி

கு3ரு தே3வுநுக் சொக்கட் சல்லியாஸ்தெனுஸ் உஜி
தெ4ருமுநும் துரி ரீ:ரியாஸ்தெ [கு3]


சரணு

மொ:ட்டாநுக்தெ3க்கி பாய்ம்பொண்ணாஸ்தெனுஸ் உஜி
ஹுட்டொ பா4துந் ஜெம்லேத் ரீ:ரியாஸ்தெ
மொ:ட்டாநு மொந்நுதா4நுக் சல்லியாஸ்தெனுஸ்
மொ:ட்டொ மொ:ட்டொ ஜெமன்க4ல்லி ரீ:ரியாஸ்தெ [கு3]



பீ4க்மைலி அவஸ்தெங்கொ தா4க்க4லி தொ3வ்டி3யாஸ் தெனுஸ்
பீ4குன்மை கை2லேத் ரீ:ரியாஸ்தெ
பீ4க்மைனாருக் அஸ்கி பூ4குன் திர்ச்சியாஸ்தெனுஸ்
பி3ரஹ்ம குலம்மு உஜி ரீ:ரியாஸ்தெ [கு3]


சிடி3பிள்டானுக் பாயின்மொடி3 தகியாஸ்தெனுஸ்
குடா3 குடி3 ஹொய் உஜி ரீ:ரியாஸ்தெ
பு3டி3 ஜியாஸ்தெங்கொ க2டி3ஸொடி3 யாஸ்தெனுஸ்
கொ4டா3ன் ஹைஸ்துஸெர கு3ருஹொய் அவி ரீ:ரியாஸ்தெ [கு3]



சொக்கட்வாட் விக்குமெநி ஜு:க்கு ஸிக்காஸ்தெனுஸ்
து3க்கர் ஹொய்கின் உஜி ரீ:ரியாஸ்தெ
சொக்கட்வாட் சொக்க3தி தே3ய்மெந் சல்லியாஸ்தெனுஸ்
சொக்கட் க3தி பொந்தி3 ரீ:ரியாஸ்தெ [கு3]



பொ4ரிரி:யெ ஸ்ரீ ஹரிக் கொரி ப4ஜுனாஸ்தெனுஸ்
பி2ரிபி2ரி ஜெலும் க23ரி:யாஸ்தெ
ஹரிதா3ஸுநு ஜொவள் செரிக2ளியாஸ்தெனுஸ்
பி2ரிஜெலுமுக் அவ்நாஜெய் ரீ:ரியாஸ்தெ [கு3]


கெடொஹிங்கு3னார் அஸ்கி வடபத்ரார்யுநு வாட்செரி
கேஸவாக் க3வ்லேத் ரீ:ரியாஸ்தெ
நடனகோ3பாலுக் நொம்முனாஸ்தெனுஸ் நிக்ளி
நரகும் ஜெய் செரரி:யாஸ்தெ [கு3]

பொருள்
பல்லவி

கு3ரு தே3வுநுக் சல்னாஸ்தெநூஸ் லோகுர் ராண்
பு4ருமு ஜ:டா3ன்ஹொய் ரீ:ரியாஸ்தெ [கு3]

குருவின் வழியில் நடக்காதார் உலகில் காடாய்
எதிர்காலத்தில் மரமாய் இருந்து வருவர்.

அநுபல்லவி

கு3ரு தே3வுநுக் சொக்கட் சல்லியாஸ்தெனுஸ் உஜி
தெ4ருமுநும் துரி ரீ:ரியாஸ்தெ [கு3]
குருவின் வழியை பற்றி சென்றவர் (உலகில்)பிறந்து
தானம் செய்து வருவர்.

சரணு

மொ:ட்டாநுக்தெ3க்கி பாய்ம்பொண்ணாஸ்தெனுஸ் உஜி
ஹுட்டொ பா4துந் ஜெம்லேத் ரீ:ரியாஸ்தெ
மொ:ட்டாநு மொந்நுதா4நுக் சல்லியாஸ்தெனுஸ்
மொ:ட்டொ மொ:ட்டொ ஜெமன்க4ல்லி ரீ:ரியாஸ்தெ [கு3]

பெரியவர்களை மதிக்காமல் வணங்காமல் இருந்தவர் பிறந்து
எச்சில் இலையில் உண்டு வாழ்வர்
பெரியவர்களை மதித்து அவர் மனம் போல் இருந்தவர்
பெரிய விருந்தளித்து வாழ்வர்

பீ4க்மைலி அவஸ்தெங்கொ தா4க்க4லி தொ3வ்டி3யாஸ் தெனுஸ்
பீ4குன்மை கை2லேத் ரீ:ரியாஸ்தெ
பீ4க்மைனாருக் அஸ்கி பூ4குன் திர்ச்சியாஸ்தெனுஸ்
பி3ரஹ்ம குலம்மு உஜி ரீ:ரியாஸ்தெ [கு3]


தர்மம் வேண்டி வந்தவரை பயமுருத்தி விரட்டியவர்
தர்மம் வேண்டி வாழும் நிலையடைவார் (அப்படியல்லாமல்)
தர்மம் வேண்டி வந்தவரின் குறிபறிந்து பசி போக்கியவர்
தர்ம குலமாம் பிரம்ம குலத்தில் பிறப்பர்

சிடி3பிள்டானுக் பாயின்மொடி3 தகியாஸ்தெனுஸ்
குடா3 குடி3 ஹொய் உஜி ரீ:ரியாஸ்தெ
பு3டி3 ஜியாஸ்தெங்கொ க2டி3ஸொடி3 யாஸ்தெனுஸ்
கொ4டா3ன் ஹைஸ்துஸெர கு3ருஹொய் அவி ரீ:ரியாஸ்தெ [கு3]


காக்கை குருவிகளின் காலொடித்து வாழ்ந்தவர்
சேவல் கோழியாய் பிறப்பர்
மூழ்கியவர்களை கரையேற்றியவர்
யானை குதிரையோடு குருவாய் வந்து பிறப்பர்

சொக்கட்வாட் விக்குமெநி ஜு:க்கு ஸிக்காஸ்தெனுஸ்
து3க்கர் ஹொய்கின் உஜி ரீ:ரியாஸ்தெ
சொக்கட்வாட் சொக்க3தி தே3ய்மெந் சல்லியாஸ்தெனுஸ்
சொக்கட் க3தி பொந்தி3 ரீ:ரியாஸ்தெ [கு3]

நல்வழியை விஷவழி என்று அதிமேதாவியாய் இருந்தவர்
உலகில் பன்றியாய் பிறந்து வாழ்வர்
நல்வழியே நற்கதி தரும் என்று பற்றி நடப்பவர்
நற்கதி பெற்று இருப்பர்

பொ4ரிரி:யெ ஸ்ரீ ஹரிக் கொரி ப4ஜுனாஸ்தெனுஸ்
பி2ரிபி2ரி ஜெலும் க23ரி:யாஸ்தெ
ஹரிதா3ஸுநு ஜொவள் செரிக2ளியாஸ்தெனுஸ்
பி2ரிஜெலுமுக் அவ்நாஜெய் ரீ:ரியாஸ்தெ [கு3]


எங்கும் நிறைந்த அந்த ஹரியை வணங்காதார்
மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வாழ்வர்
ஹரியின் அடியாரோடு பாடி ஆடியவர்
மீண்டும் பிறவாத வரம் பெற்றார்

கெடொஹிங்கு3னார் அஸ்கி வடபத்ரார்யுநு வாட்செரி
கேஸவாக் க3வ்லேத் ரீ:ரியாஸ்தெ
நடனகோ3பாலுக் நொம்முனாஸ்தெனுஸ் நிக்ளி
நரகும் ஜெய் செரரி:யாஸ்தெ [கு3]


கரையேராதார் எல்லாம் (என் குருவான) வடபத்திரரின் வழிபற்றி
கேஸவனை பாடி இருப்பர
நடன கோபாலனை நம்பாதார் - பின்னாளில்
நரகத்தை அடைந்து இருப்பர்.

Friday, May 04, 2007

மோஹனரெங்கா ஹரி மோஹனரெங்கா ...


மோஹனரெங்கா3 ஹரி மோஹனரெங்கா3 மொக

மாஞ்சி ராகு
ஆதி3 தாளு


கண்ணினு

மோஹனரெங்கா3 ஹரி மோஹனரெங்கா3 மொக
மோக்ஷு தெ3வேன் மொந்நு தே2வி மோஹனரெங்கா3 [மோ]

கஸ்தூரி ரெங்கா3 ஹரி கஸ்தூரி ரெங்கா3 மொர
கர்முனு கடிஹேடி3 ஹரி கஸ்தூரி ரெங்கா3 [மோ]

காவேரி ரெங்கா3 ஹரி காவேரி ரெங்கா3 தீ3
பாஞ்சவ்தார் க2டெ3 உப4ய காவேரி ரெங்கா3 [மோ]

க்ருப ஸா ரெங்கா3 ஹரி க்ருப ஸா ரெங்கா3
தொர பதா3ல்விந து3ஸர்நீ: க்ருப ஸா ரெங்கா3 [மோ]

நமம் தே3 ரெங்கா3 ஹரி நமம் தே3 ரெங்கா3 ஸ்ரீ
நடனகோ3பால ஹரி நமம் தே3 ரெங்கா [மோ]


அழகரின் மோகினி அவதாரத்தை கண்டாவுடன் இப்பாடல் தானாக என் மனதில் குடி கொண்டது அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பாடலின் விளக்கம் அடுத்து வரும் நாட்களில்...

Monday, April 16, 2007

ஹரி இருக்க என்ன பயம்?

நண்பர் சிவமுருகன் நாயகி சுவாமிகளின் அருமையான பாடல் ஒன்றை எடுத்து இட்டுள்ளார். அந்தப் பாடல் மிக ஆழமான பொருள் செறிவு உள்ள பாடல். பலமுறை முதல் நான்கு ஐந்து வரிகள் பாடும் போதே அதன் பொருட் செறிவில் ஆழ்ந்து மயங்கிவிடுவதுண்டு நான்.

நம்மைப் பார்த்துக் கொள்ள ஹரி இருக்கிறான் என்று சொல்லும் போது யார் எந்தப் பக்கம் சென்றாலென்ன யார் எப்படி ஆனாலென்ன என்று தொடங்குவார். இது மற்றவரை மதிக்க வேண்டாம் என்று சொல்வது போல் முதலில் தோன்றும். ஆனால் அவர் சொல்வது வேறு. மற்றவரை மதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நம்மைக் காப்பவர்கள் என்று சில பேரை நாம் நினைக்கிறோமே - வைத்த நிதி (வங்கிக் கணக்கு), கணவன்/மனைவி, மக்கள், குலம், கல்வி என்று; அவர்கள் நம்மைக் காக்க வேண்டிய அவசியம் இல்லை; அவர்கள் நம்மைக் காக்காமல் எப்படிச் சென்றாலும் பரவாயில்லை கோவிந்தம் நம்மைக் காக்க காத்திருக்கும் போது - இந்தக் கருத்தைத் தான் முதல் மூன்று வரிகளில் சொல்கிறார்.

கோன் கொங்குட் ஜியெத் காய் - யார் எந்தப் பக்கம் சென்றால் என்ன?
கோன் கிஸொ ஹொயத் காய் - யார் என்ன ஆனால் என்ன?
அம்கோ ஸான் ஹரி ர:த தாக் காய் - நமக்கு நம்மைப் பார்த்துக் கொள்ள ஹரி இருக்கும் போது என்ன பயம்?

அடுத்த வரிகளில் இருந்து முன்னர் சொன்னதை விரித்துச் சொல்லத் தொடங்குகிறார்.

முல்லோ பான் லிக்கெ தாநுக் ரா:ய் ரா:ய் - முன்னர் தலையில் எழுதிய எழுத்துப்படி எல்லாம் இருக்கும்
புள்ளோ கரெ போளுந் கா ஸொடி ஜாய் ஜாய் - முன்பு செய்த செயல்களுக்கு ஏற்ப விட்டுப் போவது போகும் போகும்
லேத் அநெ திந்நு ஸெரெத் ஸெரிர் பொடி ஜாய் ஜாய் - கொண்டு வந்த நாட்கள் முடிந்தால் உடல் விழுந்து போகும் போகும்
ர:தோஸி நமம் கான் தீ ஐகுலுவோ - இருக்கும் போதே நாமங்களைக் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ளுங்கள்
ஹரி ஸாய் ஸாய் - ஹரி கருணைக் கண் பார்ப்பான்
பஜன யேட் கோந் கரெத் திந்நு ஹோய் ஹோய் - எந்த நாளில் பஜனை செய்கிறோமோ அந்த நாள் நன்னாள் ஆகும்
தேவ் அவி பதால் தேர் மெனி தேய் தேய் - தேவன் வந்து தாள்களை இந்தா என்று கொடுப்பான் கொடுப்பான்
தெக்டா மொந்நு பனி கர்லி - கல் மனத்தை நீர் ஆக்கி (பக்தியால் கரைய வைத்து)
சொக்கட் குண்ணு ஸெந்தோ - நல்ல குணங்களுடன்
ஹரி தியான் திந்நு கோ ஜவல்நாஸ்தக் கரொ - நாட்களை வீணாகப் போக்காமல் ஹரி தியானம் செய்யுங்கள்
புரோ ஜன்மு - பிறப்பெடுப்பது அயர்சியைத் தருவது.

ஒவ்வொரு வரியாக ஆழ்ந்து நோக்கி வந்தால் எத்தனை எத்தனை ஆழ்பொருள் கிடைக்கின்றன என்று பார்க்க முடியும்.

Tuesday, April 10, 2007

எது எப்படி இருந்தாலென்ன?

இன்றாவது ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் ஒரு பாடலை பதிக்க வேண்டும் என்று நினைத்தேன். அவருடைய பல பாடல்கள் எளிய கருத்துக்களுடன், மிக மிக உயரிய சிந்தனைகளை கொண்டுதுமாக இருக்கும். அப்பேற்பட்ட சிந்தனைகளை தூண்டும் ஒரு பாடல் இப்பதிவில்.


கோன் கொங்கு3ட் ஜியெத்காய்
கோன்கிஸொ ஹொயெத்காய் அம்கொ
ஸான்ஹரிர:த தா4க்காய் முல்லோ
பான்லிக்கெ தா4நுக் ரா:ய் ரா:ய்
பு2ள்ளொகரெ போ2ளுந்கா ஸொடி3 ஜாய் ஜாய்
லேத் அநெ தி3ந்நு ஸெரேத்
ஸெரிர் பொடி3 ஜாய் ஜாய்
ர:தொஸி நமம் காந்தீ3 ஐகுலுவொ ஹரி ஸாய் ஸாய்
4ஜநயேட் கோந்கரெதிந்நு ஹோய் ஹோய்
தே3வவி பதா3ல் தே4ர் மெநி தே3ய் தே3ய்
தெ3க்டா மொந்நு பநிகர்லி சொக்கட்
கு3ண்ணு ஸெந்தோ ஹரித்4யாந் தி3ந்நு கோ3
ஜவள்நாஸ்தக் கரோ பு2ரோ ஜெந்மு [கோ]


கோன் கொங்கு3ட் ஜியெத்காய் - யாரெவ்விதம் போனாலென்ன?
கோன்கிஸொ ஹொயெத்காய் - யாரெப்படி ஆனாலென்ன? நல்லவர்களோ ! கெட்டவர்களோ ! உங்களை சுற்றி இருந்தாலென்ன?
அம்கொ ஸான்ஹரிர:த தா4க்காய் - நம்மை காண (காக்க) ஹரிஇருக்க பயமேன்
முல்லோ பான்லிக்கெ தா4நுக் ரா:ய் ரா:ய் - முன்பே எழுதப்பட்ட விதிப்படி தான் இருக்கும்
பு2ள்ளொகரெ போ2ளுந்கா ஸொடி3 ஜாய் ஜாய் - முன் செய்த வினைகள் உங்களை விட்டு விலகும்
லேத் அநெ தி3ந்நு ஸெரேத் - கொண்டு வந்த நாட்கள் கரைந்தால்
ஸெரிர் பொடி3 ஜாய் ஜாய் - உடல் உருண்டோடிடும்
ர:தொஸி நமம் காந்தீ3 ஐகுலுவொ ஹரி ஸாய் ஸாய் - (இவுடல்) இருக்கும் போதே இரு காது கொடுத்து கேளுங்கள்
4ஜநயேட் கோந்கரெதிந்நு ஹோய் ஹோய் - பகவானை யார் துதித்தாலும் அந்த நாளே
தே3வவி பதா3ல் தே4ர் மெநி தே3ய் தே3ய் - அவன் வந்து தேவர்களும் முனிவர்களும் பெற துடித்த தன் மலர்தாளை தருவான்.
தெ3க்டா மொந்நு பநிகர்லி - கல்லான உங்கள் மனதை (அவன் நினைவென்னும்) நீரூற்றீ மெருகேற்றி
சொக்கட் கு3ண்ணு ஸெந்தோ ஹரி த்4யாந் - நல்ல குணங்களை பற்றி,ஹரியை தியானித்து
தி3ந்நு கோ3 ஜவள்நாஸ்தக் கரோ பு2ரோ ஜெந்மு - (கடந்து விட்ட நாட்களை நினைக்காமல்)இருக்கும் நாட்களை கடத்தாமல், ஹரியின் தியானம் செய்து, மறுபிறப்பை தவிர்ப்பீர்.

Tuesday, January 02, 2007

கண்ணன் எப்போது வருவானடி??



இன்று மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள். மாதங்களின் நான் மார்கழி என்றான் கண்ணன் கீதையில். ஒவ்வொரு மாதத்திலும் மதிநிறைந்த நன்னாள் (பௌர்ணமி) எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அதைக் கொண்டு தான் மாதங்களின் பெயர்களை வைத்திருக்கிறார்கள். மார்கழியில் மதி நிறைந்த நன்னாள் மிருகசீருஷ நட்சத்திரத்தில் வருகிறது. அதனால் வடமொழியில் மார்கழிக்கு மார்க்கஸீருஷம் என்று பெயர். கண்ணனும் கீதையில் 'மாஸானாம் மார்க்கஸீர்சோஹம்' என்கிறான்.

இந்த நன்னாளில் தான் மதுரையின் ஜோதி எனப் போற்றப்படும் ஆண்டாளின் அவதாரம் நவ யுக ஆழ்வார் நடனகோபால நாயகி சுவாமிகள் அவதரித்தார். இந்த நன்னாளில் சுவாமியின் பாடல் ஒன்றை பதிக்க வேண்டும் என்று சிவமுருகன் விரும்பி மின்னஞ்சல் அனுப்பினார். கரும்பு தின்னக் கசக்குமா? உடனே பாடலைப் பதிக்கிறேன்.


சுவாமிகள் நாயகி கோலத்தில்

கண்ணன் எப்போது வருவானடி கலந்து சுகம் பெறவே
நண்ணிய இத்துன்பவினை நாசமதாய் அறவே (கண்ணன்)

எண்ணம் அறிந்தது போலே இன்பம் ஈவானோடி? - ஆ
எண்ணம் இழுத்துக் கொண்டு நம்மோடிருப்பான் கூடி (கண்ணன்)

எண்ணம் இங்கெங்கே இருக்கு? இருடிகேசன் மேலே
எண்ணத் தரமோ அவன் தன் லீலைகள் நம்மாலே (கண்ணன்)

விண்ணவர்களுக்கு அமுதம் விரும்பித் தந்தானேடி
அண்ணலேடி நமக்கு இனிமேல் ஆரேடி போடி (கண்ணன்)

ஐயன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்
பொய்யல்ல மெய் ஈதறிவாய் போயழை நாம் உய்வம் (கண்ணன்)

ஏடி விட்டுப் போனான் இங்கே என் செய்வேன் சந்திர முகியே
போடி அவன் எங்கேயோ நீ போய் அழை என் சகியே (கண்ணன்)

வயிறெரியுது எங்ஙனம் போய் எவரிடத்தில் விழுவேன்
இயம்பிய வார்த்தைகளை நான் எங்ஙனம் சொல்லி அழுவேன் (கண்ணன்)

பொய் உரைப்பானோ உரையாய் பொன்னரங்கன் எம்பால்
பையரவின் மேல் நடித்த பாதனேடி அன்பால் (கண்ணன்)




நடித்த திருவடி பணிந்து நங்காய் அழை போடி
முடித்த முடி அவிழ்த்திட யாரால் முடியும் போடி (கண்ணன்)

கண்ணீர் ஆறாய் பெருக அவன் காணாது சென்றானே
பண்ணிய தவப்பயனோ பரதவிக்கின்றேனே (கண்ணன்)


இராகம்: புன்னாகவராளி
தாளம்: ரூபகம்
பாடலை டி.எம்.எஸ். பாடிக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

Thursday, October 19, 2006

ராதா4 தொகனவெ நாயகி ஸ்வாமின்

ராதா4 தொகனவெ நாயகி ஸ்வாமின்
எழுத்தாளர்: T.S. சரோஜா சுந்தர்ராஜன், கோவை
தூ மது2ராபுரிமு ரி:யெஸ்கி பா3
கோ3குலும் மொய்ரெ ஒயஸு ஜியெஸ்கி பா3
தூ மது3ராக் ஜெயெ பா4டாம் ஜூலோ ப4ந்தி3
அம்ரெ ஸ்ருங்கா3ர் கே2ளும் ஸௌரஸேனிம் க3வ்லி
ப்ரக்ருதிம் பஸுபக்ஷிம் அகாஸ் நெத்3தி3ம்
கீஷ்டு தொய்ரெ அங்க3லெக்ஷண் ஸீலி ஸீலி
வராம் பொ4ரி ரி:யெதொய்ரெ பொ3ங்க்3ஸூ ஜகில்லி
விரக்3டாப் ஸஹன்கெர்லி ஜுலிஸ்கி பா3
தூமது2ரா புரிமு ரி:யஸ்கி பா3
தூமது2ரா புரிமு ரி:யஸ்கி பா3

'ராதா4' நமம் க4லிகின் ஹவ்ட்4யாகி பா3
ப்ரேம் தா3ராகன் தொய்ரெஹோர் கெ3ளீஸ்கி பா3
ஞாந்தே3ன் தொய்ர் ப்ரேவுக் ஜல்னாஸ்தகு
ஞானினும் மேட் ஞானி 'மீஸ் மெனி' மெல்லீஸ்கிபா3
பரமாத்மா தொரெ ஸெரொ ஐக்யம் ஹொனிக்
ஜீவாத்மாமீ க2டெ ஜெலுமுன் ஸங்குஸ்கி பா3

ராதா4 க்ருஷ்ணாக் ஜெய் ஜெய்
ராதா4 க்ருஷ்ணாக் ஜெய் ஜெய்

ஸௌரஸேனி கவிபுருஷ் ஸூர்தா3ஸ் ஹொய்லி
ஸஸர்லாக்2 கவிடான் ராதா4 க்ருஷ்ண ஸ்ருங்கா3ர் லீலான்
3விக3விகின் ஸொம்பு ஹொயெஸ் அந்தர் த்3ருஷ்டிமூ
த்3ருஷ்டுகீன் ஸுர்தாஸுக் லாஜ்நீ: மெந்யாஸி
ஸௌரஸேனி பா4ஷாக் இன்பு பொங்க்3ஸூர் கெர்த்யேஸி
கோ3வர்தன் கிரி த4வ்ராம் அஷ்டசாபுன் ஸெரொ
3விநசிது4ங்கி வைப4வ் ஜிவ்னம் ஜிவேஸி

ஜெய் கோ3வர்தன்கி3ரி ஸ்ரிநாதுக் ஜெய்
ஜெய் கோ3வர்தன்கி3ரி ஸ்ரிநாதுக் ஜெய்

ஸௌரஸேனி சிகுர் பா3ஷா மராட்டி பெ3ய்கன்
மீரா நமம் க4ல்லி க்ருஷ்ணபத்னி மெல்லிஸ்
தொரெ ப4ஜன் க4வ்லேத் வராபோக் ஜியெ ஜீவ்
தமிழ் பா4ஷா ஆண்டா4ள் கொய்லி பாஸுரம் க3விஸி
பு2லெ பூ2லூனும் தொரெஸ்மிதமுக ஸிங்கா3ர் ஸீலி
பூ2லுமாலெ கெ3ளாம் கல்லி தொக34ல்திஸி
ராதா4ஸொகன் கோ3பிகானுக் செர்ச்சிலிஸ்கிபா

மார்க3சீர்ஷொ ம:டொ3 போர் புந்நிம் திந்நுமெநொ
மார்க3சீர்ஷொ ம:டொ3 போர் புந்நிம் திந்நுமெநொ

ஸௌரஸேனி சிகுர்பா4ஷொ ஸௌராஷ்ட்ர கவிகன்
நடன கோ3பால் தொரெ நாயகி3 ஹொய்யேஸ்
ராதா4ஜெலும் ரீ:லி கெரெ மொய்ர்ப4க்தி ஸ்ங்கி3ல்லி
தொர் ந்யாவ் மொர்ந்யாவ் ரஜமன்னார்ஜோள் ஸங்கி3தேஸ்
ராதா4ஜெலும்மு ரி:யெ ஹங்க்ருதி ஜெயெஹால்
ராஜமன்னார் தொக கெ4டி3பொ3வி மொய்ர்ஸெரொ செர்சிதேஸ்
த்4யானும்பிஸி 'ஹரி அவ்டி3யோ' மெல்லெத்கன்
ப்ராண்ஸொட3ன் வேள் கெ3ருட்3 வாஹனோ:ர் பொ3ல்ஜியேஸ்

ஸன்மார்கு3ம் பா4ஷாப4க்திர் ப4ஜன் கெரேதி
வடபத்ர ஸாயி ஜொவள் வடஸே வடஸே

Wednesday, October 18, 2006

ஸ்ரீ இராமனை ...

ஒரு சொல்லை ஓரிரு முறை சொன்னால் அது மறந்து விடுகிறது. ஆனால், அதுவே பல முறை நூறு முறை சொல்லப்படும் போது, அதுவே குணமாக மாறிவிடுகிறது. மாறியகுணம் உங்கள் வாழ்வை மாற்றுகிறது. மாறிய வாழ்வு, உங்கள் சுற்று புறத்தை மாற்றுகிறது. எல்லாவற்றிர்க்கும் ஆரம்பம் நம்மிடம் தான் ஆகவே தான் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் தங்களது மாணவ வம்சாவழிக்கு தரும் ஒரு பெரிய நீதியாக இந்நாமாவளி சொல்லப்படுகிறது.

ஸ்ரீ இராமனை துதிசெய் மனமே
ஸ்ரீ வாமனை கதியென்றிரு தினமே
எமனை அடிக்கும் வில்குணமே
காமனை ஜெயிக்கும்சொல் மனமே


உன்னை காக்க அந்த நாராயணனின் அவதாரமான இராமனே வரவேண்டும் ஆகவே அவனை துதிசெய்.
உன்னை காக்க அந்த நாராயணனின் அவதாரமான வாமனனே வரவேண்டும் அவனை கதி என்று இரு.
ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்த இராமனது அறம் (குணம்) தான் எமனையும் காமனையும் வெற்றி கொள்ளும் அறம் ஆகவே அவனை சொல் (வணங்கு), அவனது புகழ் பாடுவாய்.

Monday, August 21, 2006

கருடாருட வாகனத்தில் அந்த அரங்கனை...

கருடாருட வாகனத்தில் அந்த அரங்கனை கண்டால் அடுத்த வினாடியே அவன் வைகுண்ட வாசம் பெருகிறான், அப்பேற்பட்ட பேற்றை பெற என்ன வழி என கேட்ப்பவர்களுக்கு சுவாமிகள் தரும் ஒரு அறிவுரையாக, இப்பாடலை பாடியுள்ளார்.

இப்பாடல் தமது சங்கீத குரலில் திரு. ராமரத்தினம் அவர்கள் பாடியுள்ளார்.



இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி
பொ3வொ
ஆரபி4 ராகு
ஆதி3 தாளு
பல்லவி
இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி பொ3வொ
பிஸொ திரிஜாய் பாப் ஜாயி (இஸொ)


அநுபல்லவி
நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)


சரணு
மகெ3 வரமுனு தே3ய் மாத4வா ஹரி மெனொ
கொகொ3 பு4க்கொ ஸுக்கரி:யாஸ்
சொக்கட்க3தி தே3 ஹரி சூகுன் அண்சிலெமெனொ
தெ3க்கெதா4நுக் ஹிண்டெ3த் தே3வ் க்ருப கோனக்கரய் (இஸொ)

அக்கரகன் ஸெரிர் ஹிப்பி3ரா:னா து4ளிஜாய் ஸ்ரீ
ஜானகி ரமணா மெனொ
ஜானா பாப் அஸ்கி ஜாய் ஜல்வொ ஸ்ரீ ஹரி பத3ம்
தே3னாவ்மெனி பொ3வ்னாஜியேத் தே3வ் க்ருப கோனக்கரய்(இஸொ)

வட அப்ப3யி ஸ்ரீ வைகுண்டும் மெனி அம்ர
வடபத்ரார்யுநு வசிரி:யாஸ் ஸ்ரீ
நடனகோ3பால ஸ்ரீ நரஹரிமெனி நசொ
தி4டவ்கன் கெ3ருடோ4ர் அவி தே3வ் க்ருப கரய் கரய் (இஸொ)


இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி பொ3வொ
பிஸொ திரிஜாய் பாப் ஜாயி (இஸொ)

நித்தமும் சர்வகாலமும் கேஸவா என அழையுங்கள்
பித்தம் தெளியுமே பாவம் தொலையுமே

அநுபல்லவி
நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)

ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்


சரணு

மகெ3 வரமுனு தே3ய் மாத4வா ஹரி மெனொ
கொகொ3 பு4க்கொ ஸுக்கரி:யாஸ்
சொக்கட்க3தி தே3 ஹரி சூகுன் அண்சிலெமெனொ
தெ3க்கெதா4நுக் ஹிண்டெ3த் தே3வ் க்ருப கோனக்கரய் (இஸொ)

கேட்ட வரமளிப்பான் கேஸவா என்று சொல்லுங்கள்
ஏன் பட்டினி கிடக்கிறீர்கள்
நல்ல கதி தந்திடுவென ஹரி குற்றங்களை பொருத்திட சொல்லுங்கள்
கண்டபடி அலைந்தால் கண்ணன் எப்படி கருணை புரிவான்

அக்கரகன் ஸெரிர் ஹிப்பி3ரா:னா து4ளிஜாய் ஸ்ரீ
ஜானகி ரமணா மெனொ
ஜானா பாப் அஸ்கி ஜாய் ஜல்வொ ஸ்ரீ ஹரி பத3ம்
தே3னாவ்மெனி பொ3வ்னாஜியேத் தே3வ் க்ருப கோனக்கரய்(இஸொ)

நிலைபெயாராது இவ்வுடல் நிற்க்காது உருண்டோடும் ஸ்ரீ
ஜானகி ரமணா என சொல்லுங்கள்
தொலையாத பாபமும் தொலைந்தோடும் ஹரியின் பாதார விந்தத்தை
தரசொல்லி அழைக்காமலிருந்தால் அவனெப்படி கருணை புரிவான்

வட அப்ப3யி ஸ்ரீ வைகுண்டும் மெனி அம்ர
வடபத்ரார்யுநு வசிரி:யாஸ் ஸ்ரீ
நடனகோ3பால ஸ்ரீ நரஹரிமெனி நசொ
தி4டவ்கன் கெ3ருடோ4ர் அவி தே3வ் க்ருப கரய் கரய் (இஸொ)

வைகுண்டத்தில் நமக்கும் இடம் கிடைக்கும் என நம்
வடபத்திரர் சொல்லியுள்ளார் ஸ்ரீ
நடன கோபலனே, நரஹரியே என பாடி ஆடுங்கள்
கட்டாயமாக கருடாருட வாகனத்தில் வந்து காட்சி தந்து கருணை புரிவான்

பல்லவி
நித்தமும் சர்வகாலமும் கேஸவா என அழையுங்கள்
பித்தம் தெளியுமே பாவம் தொலையுமே. (நித்தம்)

அநுபல்லவி

ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்(நித்தம்)

சரணு

கேட்ட வரமளிப்பான் கேஸவா என்று சொல்லுங்கள்
ஏன் பட்டினி கிடக்கிறீர்கள்
நல்ல கதி தந்திடுவென ஹரி குற்றங்களை பொருத்திட சொல்லுங்கள்
கண்டபடி அலைந்தால் கண்ணன் எப்படி கருணை புரிவான்(நித்தம்)

நிலைபெயாராது இவ்வுடல் நிற்க்காது உருண்டோடும் ஸ்ரீ
ஜானகி ரமணா என சொல்லுங்கள்
தொலையாத பாபமும் தொலைந்தோடும் ஹரியின் பாதார விந்தத்தை
தரசொல்லி அழைக்காமலிருந்தால் அவனெப்படி கருணை புரிவான்(நித்தம்)

வைகுண்டத்தில் நமக்கும் இடம் கிடைக்கும் என நம்
வடபத்திரர் சொல்லியுள்ளார் ஸ்ரீ
நடன கோபலனே, நரஹரியே என பாடி ஆடுங்கள்
கட்டாயமாக கருடாருட வாகனத்தில் வந்து காட்சி தந்து கருணை புரிவான் (நித்தம்).

Thursday, August 17, 2006

நாராயணன் திருநாமம் மிகப்பெரிய விருந்து


ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளை, பலர் உற்றார் உறவினர்களுக்கு ஆசி கூறவும் அதனையே ஒரு சாக்காக நல்ல சாப்பாடு சாப்பிடவும் வைப்பது என்று தமது விருந்து வைபவங்களில் பலர் அழைப்பதுண்டு. சாதாரணமாக எவ்வித பிரமச்சாரிகளும் இது போன்ற வைபவங்களை தவிர்ப்பர், அப்போது ஏற்படும் ஒரு தர்மசங்கடமான நிலையை சமாளிக்க தமது சீடர்களுக்கும் இப்பாடலை பாடி அறிவுரை சொல்லியும், தம் பிரமச்சாரிய தர்மத்தை காக்கும் படியும் சொல்வார்.

இப்பாடலில் வரும் ஒருரிரு வரிகளை பாடும் சமயத்தில், அவரது பக்தி ரசம், பக்தி சாப்பாடு ஆவதை காணலாம். ஹரி நாமம் ஒரு இனிய பழம் என்றவர், இனிய மிட்டாய் என்றவர், இப்பாடலில் அந்த ஆழிமழைகண்ணனின் திருநாமம் ஒரு பெரிய விருந்து உணவு என்றும், இனிய பழங்களில் கூட்டு என்றும், இனிய இனிப்புகளின் ஒரு கூட்டுப்படைப்பு என்றும், தமக்கு வீடு, பணம், நகை போல் உள்ளது என்றும், உண்டபின் எடுத்துகொள்ளப்படும் பூ, சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது என்றெல்லாம் பாடினாலும் நரகத்தை தவிர்க்கும் மார்கத்தையும், தமது குருநாதரை வணங்குவதையும் தவறவிடுவதில்லை சுவாமிகள். இப்பாடல் சுவாமிகளின் எல்லா பாடல்களின் ஒரு தொகுப்பு பாடலாக காணப்படுகிறது.

இப்பாடலை திரு டி.எம்.எஸ். அவர்களும், திரு. டி.எம். சந்திரசேகர் அவர்களும் பாடியுள்ளனர்.

தா3ள் தூப்ஸெரொ பா4த் ஜெமெஸொகன் ஸே ஸ்ரீ
தா3மோதர நமமு புஜா
போ2ள் கராஸ்தெங்கோ ஸப்பை3 யே நமமு

பாப்ஜாய் யே ஐகோ பஸெம்ஸொகன் ஸே ஸ்ரீ
கோ3பால ஹரி நமமு
பாபிநுகப்பை3கி யே நமமு

கெளொ நரெள் ஸெக்கர்குஸ்ரி க2யெஸொகன் ஸே ஸ்ரீ
கேஸவ ஹரி நமமு
கிர்தாப் தே3ரேஸ் யே நமமு

கு3ள்ளெ பொள்ளாநஸ்கி மிவ்ளெ கு3ள்ளெஸொகன் ஸே ஸ்ரீ
கோ3விந்த3 ஹரி நமமு
து3ர்கு3ண்ணுனு மரிதகய் யே நமமு

ஸெக்கர் தூ3துமிவ்ளி ஸோகுக்க2ள்யெ ஸொகன் ஸே ஸ்ரீ
ஸங்கு சக்ரதா4ரி நமமு
ஸிள்ளொ கா3ம்தே3ய் யே நமமு

சொக்கட்மி:டாய் ஜுக்கு ஜுக்கு க2யெஸொகன் ஸே ஸ்ரீ
சொவ்த் லோக் பொ4ரெ ஹரி நமமு
சூக் ஸாநா யே நமமு

கே4ர:ந்நவ் ஸொம்மு ஹொய்ரி:யெஸ் மொகொ
கெ3ருடோ4ரவய் ஹரி நமமு
கே4ர் அவைகி ஸெரொ அவை யே நமமு

பூ2ல் ஸிர்க்கண் பான:ப்பள் ஸொகன் ஸே லொ:வ்வத3மர்
பூ2ல் பதா3ல் ஹரி நமமு
ஜெலுமவ்நா பொஸயி யே நமமு

நரகுஜானார:வாய் யே ஜநி க3வேத் ஸ்ரீ
நடனகோ3பால நமமு
விர்ஜாநெத்தி3க் பொ3ல்ஸொடை3 யே நமமு

வடபத்ரார்யுநு மொகொ க்ருப கராஸ்
வைகுண்டு வாடு நமமு
வாட்சலேத் ஸுக2ம் தே3ய் யே நமமு


தா3ள் தூப்ஸெரொ பா4த் ஜெமெஸொகன் ஸே ஸ்ரீ
தா3மோதர நமமு புஜா
போ2ள் கராஸ்தெங்கோ ஸப்பை3 யே நமமு


பருப்பு நெய் கலந்து உண்டது போல் உள்ளது
ஸ்ரீ தாமோதரனின் திருநாமம் – பூஜை
செய்து வாழ்பவர்க்கே கிடைக்கும் இத்திருநாமம்

பாப்ஜாய் யே ஐகோ பஸெம்ஸொகன் ஸே ஸ்ரீ
கோ3பால ஹரி நமமு
பாபிநுகப்பை3கி யே நமமு


பாவம் தொலையும் கேளுங்கள் பாயசம் போலிருக்கே ஸ்ரீ
கோபாலன் ஹரி இத்திருநாமம்
பாபிகளுக்கிடைக்குமோ இத்திருநாமம்

கெளொ நரெள் ஸெக்கர்குஸ்ரி க2யெஸொகன் ஸே ஸ்ரீ
கேஸவ ஹரி நமமு
கிர்தாப் தே3ரேஸ் யே நமமு


வாழைப்பழம் தேங்காய் கலந்து உண்டது போலிருக்கே ஸ்ரீ
கேஸவ ஹரியின் நாமம்
கருணை தருகிறதே இத்திருநாமம்

கு3ள்ளெ பொள்ளாநஸ்கி மிவ்ளெ கு3ள்ளெஸொகன் ஸே ஸ்ரீ
கோ3விந்த3 ஹரி நமமு
து3ர்கு3ண்ணுனு மரிதகய் யே நமமு


இனிய பழங்களை ஒன்றான இனிமையை கொண்டுள்ளது ஸ்ரீ
கோவிந்த ஹரியின் நாமம்
கெட்ட குணங்களை கொன்று போடிடும் இத்திருநாமம்

ஸெக்கர் தூ3துமிவ்ளி ஸோகுக்க2ள்யெ ஸொகன் ஸே ஸ்ரீ
ஸங்கு சக்ரதா4ரி நமமு
ஸிள்ளொ கா3ம்தே3ய் யே நமமு


சக்கரை பால் கலந்து தாகத்தைத் தணித்தது போல் உள்ளது ஸ்ரீ
சங்கு சக்ரதாரியின் நாமம்
குளுமையான ஊரைத் தரும் இத்திருநாமம்

சொக்கட்மி:டாய் ஜுக்கு ஜுக்கு க2யெஸொகன் ஸே ஸ்ரீ
சொவ்த் லோக் பொ4ரெ ஹரி நமமு
சூக் ஸாநா யே நமமு

நல்ல மிட்டாய்களை அதிநிறைய உண்டது போல் உள்ளது ஸ்ரீ
பதினான்கு உலகில் நிரம்பிய ஹரியின் நாமம்
குற்றம் பொருக்குமே இத்திருநாமம்

கே4ர:ந்நவ் ஸொம்மு ஹொய்ரி:யெஸ் மொகொ
கெ3ருடோ4ரவய் ஹரி நமமு
கே4ர் அவைகி ஸெரொ அவை யே நமமு


வீடு, பணம், நகை ஆகவுள்ளது எனக்கு
கருடவாகனன் ஹரியின் நாமம்
வீடுபேறு கிடைக்க செய்யும் இத்திருநாமம்

பூ2ல் ஸிர்க்கண் பான:ப்பள் ஸொகன் ஸே லொ:வ்வத3மர்
பூ2ல் பதா3ல் ஹரி நமமு
ஜெலுமவ்நா பொஸயி யே நமமு

மலர், சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது செந்தாமரை
மலர் தாளினை கொண்ட ஹரியின் நாமம்
ஜென்மம் எடுப்பதை துடைத்து போடும் இத்திருநாமம்


நரகுஜானார:வாய் யே ஜநி க3வேத் ஸ்ரீ
நடனகோ3பால நமமு
விர்ஜாநெத்தி3க் பொ3ல்ஸொடை3 யே நமமு


நரகத்தை தவிற்கலாம், அறிந்து பாடினால் ஸ்ரீ
நடன கோபாலனின் நாமம்
விர்ஜை நதிக்கு கொண்டு போய்விடும் இத்திருநாமம்

வடபத்ரார்யுநு மொகொ க்ருப கராஸ்
வைகுண்டு வாடு நமமு
வாட்சலேத் ஸுக2ம் தே3ய் யே நமமு


வடபத்திரர் எனக்கு கருணை புரிந்துள்ளார்
வைகுண்ட வழி இத்திருநாமம்
வழியில் இன்பங்களை பல தந்துள்ளன இத்திருநாமம்.


பருப்பு நெய் கலந்து உண்டது போல் உள்ளது ஸ்ரீ
தாமோதரனின் திருநாமம் – பூஜை
செய்து வாழ்பவர்க்கே கிடைக்கும் இத்திருநாமம்

பாவம் தொலையும் கேளுங்கள் பாயசம் போலிருக்கே ஸ்ரீ
கோபாலன் ஹரி இத்திருநாமம்
பாபிகளுக்கிடைக்குமோ இத்திருநாமம்

வாழைப்பழம் தேங்காய் கலந்து உண்டது போலிருக்கே ஸ்ரீ
கேஸவ ஹரியின் நாமம்
கருணை தருகிறதே இத்திருநாமம்

இனிய பழங்களை ஒன்றான இனிமையை கொண்டுள்ளது ஸ்ரீ
கோவிந்த ஹரியின் நாமம்
கெட்ட குணங்களை கொன்று போடிடும் இத்திருநாமம்

சக்கரை பால் கலந்து தாகத்தைத் தணித்தது போல் உள்ளது ஸ்ரீ
சங்கு சக்ரதாரியின் நாமம்
குளுமையான ஊரைத் தரும் இத்திருநாமம்

நல்ல மிட்டாய்களை அதிநிறைய உண்டது போல் உள்ளது ஸ்ரீ
பதினான்கு உலகில் நிரம்பிய ஹரியின் நாமம்
குற்றம் பொருக்குமே இத்திருநாமம்

வீடு, பணம், நகை ஆகவுள்ளது எனக்கு
கருடவாகனன் ஹரியின் நாமம்
வீடுபேறு கிடைக்க செய்யும் இத்திருநாமம்

மலர், சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது செந்தாமரை
மலர் தாள் ஹரியின் நாமம்
ஜென்மம் எடுப்பதை துடைத்திடும் இத்திருநாமம்

நரகத்தை தவிற்கலாம், அறிந்து பாடினால் ஸ்ரீ
நடன கோபாலனின் நாமம்
விர்ஜை நதிக்கு கொண்டு போய்விடும் இத்திருநாமம்

வடபத்திரர் எனக்கு கருணை புரிந்துள்ளார்
வைகுண்ட வழி இந்நாமம்
வழியில் இன்பங்களை பல தந்துதிருக்குமே இத்திருநாமம்.

இப்பதிவு "மதுரையின் ஜோதி" பதிவின் ஐம்பதாவது பதிவு, என்னுடைய இருநூற்றி ஐம்பாதவது பதிவுமாகும்.