Tuesday, November 22, 2005

59: எல்லா கஷ்டமும் தீர வழி?

நாம் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம். அதன் பலனாய் இன்பமும் துன்பமும் அனுபவிக்கிறோம். எல்லையில்லா இன்பம் அனுபவிக்க ஏதாவது வழி இருக்கிறதா? இருக்கிறது என்கிறார் நாயகி சுவாமிகள்.

கைங்கர்யம் கிங்கர்யம் காம்ஸாஜா மெனஸ்தெனஸ்கி
கருமு ராணுமு ஸம்டி கெஷ்டம் பொந்திலேது ரா:ன்
கைங்கர்யமூஸ் கத்கொ கருமு ராணு கடிலிஜாய் அத்தொ.

கைங்கர்ய கிங்கர்யம் காம் ஸாஜா மெனஸ்தெனஸ்கி - சேவையாவது கீவையாவது; உன் வேலையைப் பார் என்பவர்கள் எல்லாம்

கருமு ராணுமு ஸம்டி கெஷ்டம் பொந்திலேது ரா:ன் - நல்வினைத் தீவினைப் பயன்கள் என்னும் கருமக் காட்டிலே மாட்டிக்கொண்டு கஷ்டம் அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.

கைங்கர்யமூஸ் கத்கொ கருமு ராணு கடிலிஜாய் அத்தொ - மக்களுக்குச் செய்யும் சேவையே அரிவாள்; கருமக் காட்டை வெட்டிக்கொண்டு போகும் இப்போதே.


மக்கள் தொண்டே மகேசன் தொண்டு - ஆதலினால் தொண்டு செய்வீர் உலகத்தீரே; அக்தன்றோ இவ்வுலகில் தலைமை இன்பம்.

Friday, November 11, 2005

51: நீயே கதி!!!!

ச்ரீமந் நாராயணா ஆவிரே - துஸர்
திக்குநீ: தூஸ் கதிரே
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

srIma-n nArAyaNA AvirE - dhuSar
dhikku-nI: thUS gathirE
(srIma-n nArAyaNA AvirE)

ச்ரீமந் நாராயணா ஆவிரே - 'அகலகில்லேன் இறையும் என்று' எங்கும் எப்போதும் என்றும் உன்னைப் பிரியாமல் இருக்கும் அன்னை லக்ஷ்மியுடன் எம் தந்தையான நாராயணா நீ வரவேண்டும்

துஸர் திக்குநீ: - எனக்கு வேறு கதி இல்லை

தூஸ் கதிரே - நீயே கதி

ச்ரீமந் நாராயணா ஆவிரே - ச்ரீயுடன் கூடிய நாராயணா வரவேண்டும்!

துக்குநு தேய் பாபுநு ஜு:க்கு கரிலேத்மீ
துக்கு பொந்திலேத் ரி:யேஸி - தூ
மொக் கொப்பாக் க்ருப கரஸ்தெ
விக்கு பாபுநவி மொக் கய்லேத் ரி:யேஸி
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

dhukku-nu dhEy paapu-nu ju:kku karilEthmI
dhukku ponthilEth ri:yESi - thU
mok kopbaak krupa karaSthe
vikku paapu-navi mok kaylEth ri:yESi
(srIma-n nArAyaNA AvirE)

துக்குநு தேய் பாபுநு ஜு:க்கு கரிலேத் மீ - துக்கங்களைத் தரும் பாபங்களை நிறைய செய்து கொண்டே நான்

துக்கு பொந்திலேத் ரி:யேஸி - துக்கங்களை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன்

தூ மொக் கொப்பாக் க்ருப கரஸ்தெ - நீ என்மேல் எப்போது உன் கருணையைக் காட்டப் போகிறாய்

விக்கு பாபுநவி மொக் கய்லேத் ரி:யேஸி - விஷம் போன்ற இந்த பாவங்கள் என்னை தின்று கொண்டு இருக்கின்றன

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மியுடன் கூடிய நாராயணா நீ வரவேண்டும்!

ராமா க்ருஷ்ணா ஹரி கோவிந்தா தூயிஸொ
ராக்கல்லேத் மீ காய்கரு - பரந்
தாமா ஸஹஸ்ர நாமா க்ருப ஸியெத்
அவிதொர் பதாலு தெரு
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

rAmA krushNA -hari gOvinthA thUyiSo
rAkkallEth mI kaaykaru - paranth
dhaamaa Sa-haSra nAmA krupa Siyeth
avithor pathaalu deru
(srIma-n nArAyaNA AvirE)

ராமா க்ருஷ்ணா ஹரி கோவிந்தா தூயிஸொ ராக்கல்லேத் மீ காய்கரு - ராமா! கிருஷ்ணா! ஹரி! கோவிந்தா! நீ இப்படி நான் செய்த பாவங்களைப் பார்த்து என் மேல் கோபம் கொண்டால் நான் என்ன செய்வேன்

பரந்தாமா -மிக உயர்ந்த, எங்கு சென்ற பிறகு மீண்டும் பிறப்பு இறப்பு இல்லையோ, அந்த மிக உயர்ந்த இடத்தை உடையவனே

ஸஹஸ்ர நாமா - ஆயிரக்கணக்கான பெயர்களை உடையவனே

க்ருப ஸியெத் அவிதொர் பதாலு தெரு - உன் கருணை இருந்தால் தானே நான் உன் கால்களை வந்து பிடிக்கமுடியும். உன் கருணை வேண்டும்.

ச்ரீமந் நாராயணா ஆவிரே - செல்வத்திற்கு அதிபதியான ச்ரீயுடன் சேர்ந்து நாராயணா நீ வர வேண்டும்.

தெரன் முஸொனி மொந் தமரேஸ் மீ காய்கரு
தேவு ஸங்கேஸ்யே தொகொ - ஏ
மொரநுஜ்வாவுநுக் பீஜொ:ய் ரி:யெ மொந்நு
மோஸ்கரொரேஸ் மொகோ
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

deran muSoni mo-n dhamarES mI kaaykaru
dhEvu SangkESyE thoko - E
mora-nujvaavu-nuk bIjo:y ri:ye mo-n-nu
mOSkarorES mogO
(srIma-n nArAyaNA AvirE)

தெரன் முஸொனி மொந் - பிடிக்க முடியவில்லை இந்த மனத்தை

தமரேஸ் - அது ஓடிக்கொண்டே இருக்கிறது

மீ காய்கரு - நான் என்ன செய்வது?

தேவு ஸங்கேஸ்யே தொகொ - தெய்வமே உன்னிடம் தான் நான் சொல்லமுடியும்; அதனால் சொல்கிறேன்

ஏ மொரந் உஜ்வாவுநுக் பீஜ் ஹொ:ய் ரி:யெ மொந்நு - இந்த பிறப்பு இறப்பு என்ற சுழற்சிக்கு காரணமாய் (விதையாய்) இருக்கும் மனம்

மோஸ்கரொரேஸ் மொகோ - எனக்கு மோசம் செய்கிறதே!

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மி நாராயணா நீ வரவேண்டும்!

மோஸ்கரொரேஸ் மொகொ கெண்டுபந்திலி யே
மொந்நு ஹிப்பி ரா:ஸ்திஸொ காரி - தொகொ
தாஸ் ஹொயாஸ்தெங்கொ தாஸொ:ய்கிநு மீயேட்
தந்யுடு ஹோஸ்திஸொ காரி
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

mOSkarorES mogo keNtubanthili yE
mo-n-nu -hibbi raa:SthiSo kaari - thogo
dhaaS -hoyaaSthengko dhaaSo:yki-nu mIyEt
dha-nyudu -hOSthiSo kaari
(srIma-n nArAyaNA AvirE)

மோஸ்கரொரேஸ் மொகொ கெண்டுபந்திலி யே மொந்நு - கங்கணம் கட்டிக் கொண்டு இந்த மனம் எனக்கு மோசம் செய்கிறது

ஹிப்பி ரா:ஸ்திஸொ காரி - அது நிற்கும் படி செய்வாய்

தொகொ தாஸ் ஹொயாஸ்தெங்கொ - உனக்கு அடியார்கள் ஆனவர்களுக்கு

தாஸொ:ய்கிநு - அடியவன் ஆகி

மீயேட் தந்யுடு ஹோஸ்திஸொ காரி - நான் இங்கு நல்லவன் ஆகும்படி செய்வாய்

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மி நாராயணா நீ வருவாய்!

தாஸரதே ச்ரீ தாமோதரா அச்யுதா
தாக் ஜாஸ்திஸொ ஸாரே - யமொ
தாக் ஜாஸ்திஸொ ஸாரே ச்ரீ
கேஸவ நாராயணா நடனகோபாலா
க்ருப ஸாரே
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

dhaaSaradhE srI dhaamOdharaa asyuthaa
dhaak jaaSthiSo SaarE - yamo
dhaak jaaSthiSo SaarE srI
kESava nArAyaNA natanagOpaalaa
krupa SaarE
(srIma-n naaraayaNaa AvirE)

தாஸரதே - தசரதனின் மகனான ராமா

ச்ரீ தாமோதரா - யசோதை உன்னை உரலுடன் கட்டிப் போட்ட கயிற்றின் தடத்தை வயிற்றில் உடையவா; அடியவர்களுக்கு எளியவனே

அச்யுதா - அடியவர்களை எந்த நேரத்திலும் கைவிடாதவனே

தாக் ஜாஸ்திஸொ ஸாரே - என் பயம் போகும்படி என் மேல் கருணை செய்

யமொதாக் ஜாஸ்திஸொ ஸாரே - எம பயம் போகும்படி என் மேல் கருணை செய்

ச்ரீ கேஸவ - அழகான சுருண்ட முடிகளை உடையவனே; 'க' எனும் ப்ரம்மாவுக்கும், 'ஈச' என்னும் ருத்ரனுக்கும் முதலானவனே

நாராயணா - உலகனைத்துக்கும் உறைவிடமானவனே; உலகனைத்தையும் உறைவிடமாய்க் கொண்டவனே

நடனகோபாலா - நடனமாடிக்கொண்டே பசுக்களை மேய்ப்பவனே; உலகையும் உயிர்களையும் காப்பதை விளையாட்டாய் செய்பவனே

க்ருப ஸாரே - கருணை புரிவாய்!

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மி நாராயனா நீ வருவாய்!