Showing posts with label சிவமுருகன். Show all posts
Showing posts with label சிவமுருகன். Show all posts

Saturday, August 30, 2008

ஹரி என சொல்லுங்கள்

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. என்றார் வள்ளுவர்

அத்தகைய அருளை பெறுவதற்க்கும், பெற்றதை காப்பதற்க்கும் என செய்வது என்று தன் சீடர்கள் கேட்க, ஹரி நாமம் கேட்பதே, சொல்வதே பேரின்பம் என்று இருக்கும் நாயகி சுவாமிகள் என்ன சொல்வார், சீடர்களுக்கும், வழிபோக்கர்களுக்கு, அருகில் நிற்க்கும் பெரியோர்களையும், அங்கும் இங்கும் திரியும் மக்களுக்கும் சொல்லும் பாங்காக அமைந்துள்ளது இப்பாடல்.

இதை தன்னுடைய துள்ளல் இசையில் டி.என்.சந்திரசேகர் அவர்கள் பாடியுள்ளார்.

ஹரி மெனொபா3 ஹரி மெனொரே
ஹரி மெனெத் பாப்தா4ம் தெ4ரி த4மய்ரே (ஹரி)

ஜியெதி3ந்நு ஜான்த3க் ரி:யெதி3ந்நு அத்தோதி (ஹரி)

தா3துன் அஸ்கி லல்னாஸ்திக்காம்
தா3ர் தொ3ங்கர் கெல்லி த3டுநாஸ்திக்காம்
பீ4த் தெ4ல்லிகின் சல்னாஸ்திக்காம்
தளம் நீஸ்தக் தொ3வ்ரொஹொய் நசுனாஸ்திக்காம்(ஹரி)

தூ4ம்லயெ ஸரீர் து4ள்னாஸ்திக்காம்
பு3த்தி3 பெ4ண்டு ஹொய் த4மிஜானாஸ்திக்காம்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி பிஸுனாஸ்திக்காம்
ஜொமைன் த3ணி ஹிங்கு3னாஸ்திக்காம் (ஹரி)



ஹரி மெனொபா3 - ஹரியென சொல்லுங்கள்
ஹரி மெனொரே - ஹரியென்பீரே
ஹரி மெனெத் - ஹரியெனச் சொன்னால்
பாப்தா4ம் தெ4ரி த4மய்ரே - பாபம் பின்னாங்கால் பிடரியில் பட ஓடுமே

ஜியெதி3ந்நு - சென்ற நாட்கள்
ஜான்த3க் - போகட்டும்
ரி:யெதி3ந்நு - இருக்கும் இந்த நாளில்
அத்தோதி - இப்போதாவது (சொல்லுங்கள்)

தா3துன் அஸ்கி - பற்க்கள எல்லா
லல்னாஸ்திக்காம் - உதிர்வதற்க்குள்
தா3ர் தொ3ங்கர் - வாயிலை மலையாக
கெல்லி த3டுநாஸ்திக்காம் - கொண்டு கடப்பதற்க்குள்
பீ4த் தெ4ல்லிகின் - சுவரை பிடித்து
சல்னாஸ்திக்காம் - நடப்பதற்க்குள்
தளம் நீஸ்தக் - ஆதாரம் இல்லாமல்
தொ3வ்ரொஹொய் - வயோதிகமைடந்து
நசுனாஸ்திக்காம் - ஆடுவதற்க்குள்

தூ4ம்லயெ ஸரீர் - புகைப்பட்ட உடலது
து4ள்னாஸ்திக்காம் - புறப்படுவதற்க்குள்
பு3த்தி3 பெ4ண்டு - அறிவு ஆடாய்
ஹொய் த4மிஜானாஸ்திக்காம் - மாறி ஓடுவதற்க்குள்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி - நதியை கடந்து அக்கரை சென்று
பிஸுனாஸ்திக்காம் - அமர்வதக்குள்
ஜொமைன் - வீட்டு மாப்பிள்ளைகள்
3ணி ஹிங்கு3னாஸ்திக்காம் - தோளில் ஏறுவதற்க்குள்

இறப்பதற்க்கு முன்னர் சொல்லிவிடு என்பதை எவ்வளவு நாசுக்காக இறப்பு என்ற சொல்லே வராமல் பாடி முடித்த ஐயனது கவி நிபுணத்துவம் சொல்லி மாளாது.

ஹரி மெனொபா3 ஹரி மெனொரே
ஹரி மெனெத் பாப்தா4ம் தெ4ரி த4மய்ரே (ஹரி)

ஹரியென்பீரே, ஹரியென்பீரே
ஹரியென பாபாம் பயந்தோடுமே (ஹரி)

ஜியெதி3ந்நு ஜான்த3க் ரி:யெதி3ந்நு அத்தோதி (ஹரி)

சென்ற நாட்கள் செல்லட்டும், இருக்கும் இப்போழுதாவது (ஹரி)

தா3துன் அஸ்கி லல்னாஸ்திக்காம்
தா3ர் தொ3ங்கர் கெல்லி த3டுநாஸ்திக்காம்
பீ4த் தெ4ல்லிகின் சல்னாஸ்திக்காம்
தளம் நீஸ்தக் தொ3வ்ரொஹொய் நசுனாஸ்திக்காம்(ஹரி)

பற்களனைத்தும் விழுவதற்க்குள்
வாயிலை மலையாக கடப்பதற்க்குள்
சுவரை பிடித்து நடப்பதற்க்குள்
ஆதாரம் இல்லாமல் கிழவனாய் ஆடுவதற்க்குள் (ஹரி)


தூ4ம்லயெ ஸரீர் து4ள்னாஸ்திக்காம்
பு3த்தி3 பெ4ண்டு ஹொய் த4மிஜானாஸ்திக்காம்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி பிஸுனாஸ்திக்காம்
ஜொமைன் த3ணி ஹிங்கு3னாஸ்திக்காம் (ஹரி)

புகைபட்ட உடலதம் விழுவதற்க்குள்
புத்தி பேதலித்து ஓடுவதற்க்குள்
ஆற்றை கடந்து சென்று அமர்வதற்க்குள்
மாப்பிள்ளை தோளில் ஏறுவதற்க்குள் (ஹரி).