Friday, August 05, 2011

தொண்டு என்னும் கரும்பு



ஆழமான கருத்துகள் கொண்டு இனிமையான எளிதான பாடல் இது.

பல்லவி
க2ள்ளி க2வொ க2ள்ளி க2வொ--நிச்சு
கைங்கர்யம் மெனஸ்தான் கொப்பு3 க2ள்ளி க2வொ [க2]

எடுத்து உண்ணுங்கள் எடுத்து உண்ணுங்கள் - தினம்
தொண்டு என்னும் கரும்பு எடுத்து உண்ணுங்கள் (எ)

அநுபல்லவி
கரெ கர்முன் த4மய்
ஹரிக் பாய்ம்பொடி3 பொ3வொ துமி [க2]

செய்த வினைகள் ஓடும்
ஹரியை வணங்கி அழையுங்கள் - நீங்கள் (எ)

சரணு
தா3ஸ் ஹோனாஜியெத் மோஸ் அவயி ஹரி
தா3ஸ§நுக் தா3ஸ்ஹொயெத் ஹரி க்ருபகரயி
தொ3ங்க3ர் ராணும் ஹிங்க3ன் வேஸ் நீ:
தொ3ங்க3ர் அங்க்3ளிதெ4ரெ ரெங்கா3க் ஸெங்கு3 ஸவொ யேட்[க2]

தொண்டன் ஆகாவிட்டால் மோசம் வருமே - ஹரி
தொண்டருக்கு தொண்டன் ஆனால் ஹரி கருணை செய்வானே
காடு மலை ஏறத் தேவையில்லையே - மலை
விரல் தொட்ட ரெங்கனைத் துணை கொள்ளுங்கள் இங்கே (எ)

மத்திம் உஜி மத்திம் ஹொடி3 மத்திமூஸ்ஜாய் ஸெரிர்
ப4க்தி கிஸொதி கரொ
வடபத்ரஸாயி ஹொய்கிநு மொகொ
நடனக்ருஷ்ண தா3ஸ§ந் ஜொவளும் ஜெய் [க2]

மண்ணில் பிறந்து மண்ணில் வளர்ந்து மண்ணிலே போகும் உடல்
பக்தி எப்படியாவது செய்யுங்கள்
வடபத்ரசாயி ஆகி என்னை
நடனகிருஷ்ண தாசர்கள் உடன் கொண்டு சென்று (எ)

இந்தப் பாடலை டி.எம். சந்திரசேகர் குரலில் இங்கே கேட்கலாம்.

Sunday, April 10, 2011

சாத்வீக உணவும், உணர்ச்சியூட்டும் உணவும்


ஸ்ரீமந் நடன கோபால சுவாமிகள் - உற்சவர், அவரது திருநட்சத்திர நாளில் அருள்பாலித்த காட்சி



ஊஞ்சல் சேவை நிகழ்த்தும் பெருமாளும் தாயாரும்

கண்ணன் பாடல்கள் தொகுப்பில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு கண்ணன் பாடல்கள் தொகுப்பில் பாப்பா இராமாயணம் என்ற பெயரில், சிறார்களும் அதிவிரைவாக பாட ஏதுவாகவும் ’ராம்’ ’ராம்’ என ஒவ்வொரு வரியிலும் முடியும் படியும் லலிதா அவர்கள் எழுதியதை படிக்கும் சமயம், ஸ்ரீமந் நடன கோபல சுவாமிகளின் ஒரு தமிழ் நாமாவளியை பின்னூட்டமாக இட்டேன்,

"ஸ்ரீ ராமனை துதிசெய் மனமே
ஸ்ரீ வாமனை கதியென்றிரு தினமே
எமனை அடிக்கும் வில்குணமே
காமனை ஜெயிக்கும்சொல் மனமே"

மேலும் அவர் பாடிய ஒரு சௌராஷ்டிர மொழி நாமாவளியை இங்கே உங்களுக்காக தமிழ் உரையுடன்.

தமிழ் எழுத்து:

கந்தொ3 லொஸன் முளொ ஹந்த3னூஸ் ஹோனா
ஹந்தொ3 கஸ்தந்து3 கோ3விந்தா3க் ஆனந்த3ம் ஹோய்
ஹிந்த3ரெ:ய் ஸொட்3டு3வோ மந்த3ம் கொ3ரு தூ3த்
நந்த3கோ3பாலுக் பொந்தை3 கா3யி தூ3த்
தெந்து3ஸ் மெள்ளொ ஸங்கே3னா கஞ்ஜி
பொ4ப்ளொ ஸெவ்காஜா:ட் ஹோனாமெநி


சௌராஷ்ட்ர எழுத்து:

ꢒꢥ꣄ꢣꣁ ꢭꣁꢱꢥ꣄ ꢪꢸꢳꣁ ꢲꢥ꣄ꢣꢥꢹꢱ꣄ ꢲꣂꢥꢵ |
ꢲꢥ꣄ꢣꣁ ꢒꢱ꣄ꢡꢥ꣄ꢣꢸ ꢔꣁꢮꢶꢥ꣄ꢣꢵꢒ꣄ ꢃꢥꢥ꣄ꢣꢪ꣄ ꢲꣂꢫ꣄|
ꢲꢶꢥ꣄ꢣꢬꢴꢾꢫ꣄ ꢱꣁꢞ꣄ꢞꢸꢮꣁ ꢪꢥ꣄ꢣꢪ꣄ ꢔꣁꢬꢸ ꢣꢹꢡ꣄ |
ꢥꢥ꣄ꢣꢔꣂꢦꢵꢭꢸꢒ꣄ ꢦꣁꢥ꣄ꢣꢫ꣄ ꢔꢵꢫꢶ ꢣꢹꢡ꣄ |
ꢡꢾꢥ꣄ꢣꢸꢱ꣄ ꢪꢾꢳ꣄ꢳꣁ ꢱꢖ꣄ꢔꢿꢥꢵ ꢒꢛ꣄ꢙꢶ |
ꢩ꣄ꢦ꣄ꢳꣁ ꢱꢾꢮ꣄ꢒꢵꢚꢵꢜ꣄ ꢲꣂꢥꢵꢪꢾꢥꢶ |

ஆங்கில எழுத்து:

kando losan muLo HandanUs HOnA |

Hando kastandu govindAk Anandam HOy|
Hindarhey soDDuvo mandam goru dUt |
nandagOpAluk ponday gAyi dUt |
tendus meLLo saGgEnA kaJji |
bhpLo sevkAjhAT HOnAmeni |

சாத்வீக மனதை கெடுத்து, உயிரில் எப்போதும் உணர்ச்சி பெறுக்கெடுத்து ஓடச் செய்யும் காய்கறி வகையான வெங்காயம், பூண்டு, முள்ளங்கி சேர்க்கக் (சமைக்க) கூடாது, உயிர் சத்து நிறைந்த பச்சரிசி சமைக்க வேண்டும் கோவிந்தன் மகிழ்வான், மந்த புத்தியை தரும் எருமை பாலை உணவில் சேர்ப்பதை இன்றிலிருந்து விட்டு விடுங்கள், நந்தரின் மகனான அந்த கோபாலன், உயிர் மீது மிக்க பற்று பசு தரும் பாலையே விரும்பினார், நீங்களும் அதையே விரும்புங்கள், மக்களால் விரும்பப்படுவீர்.

வீட்டிற்க்கு முறுங்கை மரம் நல்லதல்ல, ஊசியிலை மரவகையான முறுங்கை மரத்திலிருந்து வெளிப்படும் வரும் காற்று மனித உடலுக்கு நல்லதல்ல, அதனால் அவ்வகை மரம் வீட்டிற்க்கு ஆகாது என்கிறார்,

படங்கள் : ஓ.எஸ்.எஸ். ஐயா அவர்களின் படத்தொகுப்பு
பாடல் : ஸ்ரீ மந் நடனகோபால நாயகி சுவாமிகளின் நாமாவளி தொகுப்பு (சௌராஷ்ட்ரம்).



ஸௌராஷ்டிரா மொழியில் பின்னூட்டம் இடுவதற்கு, லக்ஷ்மனாசார்யா எனும் ஸௌராஷ்டிரா:ஆங்கில (Sourashtra:English Trans-Literature Software) மொழி மாறிலியை இங்கிருந்து (http://www.sourashtra.info/daar.htm) தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தவும்

Sunday, March 06, 2011

Nayaki Eluchi Iyakkam - 2010