Saturday, July 28, 2007

குருவை அடைந்தவருக்கும், வணங்காதவர்க்கும்

நாளை குரு பூர்ணிமா. நாளை குருக்களுக்கு வந்தனம் செய்யும் நாள். நம்மை தந்தைக்கு அடுத்த இடத்திலிருந்து காக்கும், கற்பிக்கும் அத்தகைய குருக்களுக்கு நம்மால் முன்னோர்(பித்ரு)கடன் செய்ய முடியாமல் இருக்கும் குறையை போக்க, அவர்களை வணங்க ஒரு நாள். குருபூர்ணிமா.

குருப்ரம்மா குருர் விஷ்ணு, குருர் தேவோ மஹேஸ்வர:
குருசாக்ஷாத் பர ப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ:


அனைத்து வேதத்திற்க்கும் குரு, அந்த வேதக்கடவுள் பிரமன், தேனுக்கெல்லாம் தேவன் ஸ்ரீமந் நாராயாணன், குருவிர்கெல்லாம் குரு, அந்த மாஹாதேவன் ஈசன், இத்தகைய மும்மூர்த்திகளுக்கு இணையானவர் நமக்கு வழிகாட்டும் குரு. அப்பேற்பட்ட குருவை எப்படி வணங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு இதே குரு பூர்ணிமா அன்று ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் ஒரு பாடலை இட்டேன். இப்பதிவில் அத்தகய குருவை அடைந்தவருக்கும், குருவை வணங்காதவர்க்கும் என்ன கதி என்று சொல்லும் பாடல்.

கு3ரு தே3வுநுக் சல்னாஸ்தெநூஸ்...
ம:லார் ராகு

ஆதி3 தாளு கேட்க


பல்லவி

கு3ரு தே3வுநுக் சல்னாஸ்தெநூஸ் லோகுர் ராண்
பு4ருமு ஜ:டா3ன்ஹொய் ரீ:ரியாஸ்தெ [கு3]


அநுபல்லவி

கு3ரு தே3வுநுக் சொக்கட் சல்லியாஸ்தெனுஸ் உஜி
தெ4ருமுநும் துரி ரீ:ரியாஸ்தெ [கு3]


சரணு

மொ:ட்டாநுக்தெ3க்கி பாய்ம்பொண்ணாஸ்தெனுஸ் உஜி
ஹுட்டொ பா4துந் ஜெம்லேத் ரீ:ரியாஸ்தெ
மொ:ட்டாநு மொந்நுதா4நுக் சல்லியாஸ்தெனுஸ்
மொ:ட்டொ மொ:ட்டொ ஜெமன்க4ல்லி ரீ:ரியாஸ்தெ [கு3]



பீ4க்மைலி அவஸ்தெங்கொ தா4க்க4லி தொ3வ்டி3யாஸ் தெனுஸ்
பீ4குன்மை கை2லேத் ரீ:ரியாஸ்தெ
பீ4க்மைனாருக் அஸ்கி பூ4குன் திர்ச்சியாஸ்தெனுஸ்
பி3ரஹ்ம குலம்மு உஜி ரீ:ரியாஸ்தெ [கு3]


சிடி3பிள்டானுக் பாயின்மொடி3 தகியாஸ்தெனுஸ்
குடா3 குடி3 ஹொய் உஜி ரீ:ரியாஸ்தெ
பு3டி3 ஜியாஸ்தெங்கொ க2டி3ஸொடி3 யாஸ்தெனுஸ்
கொ4டா3ன் ஹைஸ்துஸெர கு3ருஹொய் அவி ரீ:ரியாஸ்தெ [கு3]



சொக்கட்வாட் விக்குமெநி ஜு:க்கு ஸிக்காஸ்தெனுஸ்
து3க்கர் ஹொய்கின் உஜி ரீ:ரியாஸ்தெ
சொக்கட்வாட் சொக்க3தி தே3ய்மெந் சல்லியாஸ்தெனுஸ்
சொக்கட் க3தி பொந்தி3 ரீ:ரியாஸ்தெ [கு3]



பொ4ரிரி:யெ ஸ்ரீ ஹரிக் கொரி ப4ஜுனாஸ்தெனுஸ்
பி2ரிபி2ரி ஜெலும் க23ரி:யாஸ்தெ
ஹரிதா3ஸுநு ஜொவள் செரிக2ளியாஸ்தெனுஸ்
பி2ரிஜெலுமுக் அவ்நாஜெய் ரீ:ரியாஸ்தெ [கு3]


கெடொஹிங்கு3னார் அஸ்கி வடபத்ரார்யுநு வாட்செரி
கேஸவாக் க3வ்லேத் ரீ:ரியாஸ்தெ
நடனகோ3பாலுக் நொம்முனாஸ்தெனுஸ் நிக்ளி
நரகும் ஜெய் செரரி:யாஸ்தெ [கு3]

பொருள்
பல்லவி

கு3ரு தே3வுநுக் சல்னாஸ்தெநூஸ் லோகுர் ராண்
பு4ருமு ஜ:டா3ன்ஹொய் ரீ:ரியாஸ்தெ [கு3]

குருவின் வழியில் நடக்காதார் உலகில் காடாய்
எதிர்காலத்தில் மரமாய் இருந்து வருவர்.

அநுபல்லவி

கு3ரு தே3வுநுக் சொக்கட் சல்லியாஸ்தெனுஸ் உஜி
தெ4ருமுநும் துரி ரீ:ரியாஸ்தெ [கு3]
குருவின் வழியை பற்றி சென்றவர் (உலகில்)பிறந்து
தானம் செய்து வருவர்.

சரணு

மொ:ட்டாநுக்தெ3க்கி பாய்ம்பொண்ணாஸ்தெனுஸ் உஜி
ஹுட்டொ பா4துந் ஜெம்லேத் ரீ:ரியாஸ்தெ
மொ:ட்டாநு மொந்நுதா4நுக் சல்லியாஸ்தெனுஸ்
மொ:ட்டொ மொ:ட்டொ ஜெமன்க4ல்லி ரீ:ரியாஸ்தெ [கு3]

பெரியவர்களை மதிக்காமல் வணங்காமல் இருந்தவர் பிறந்து
எச்சில் இலையில் உண்டு வாழ்வர்
பெரியவர்களை மதித்து அவர் மனம் போல் இருந்தவர்
பெரிய விருந்தளித்து வாழ்வர்

பீ4க்மைலி அவஸ்தெங்கொ தா4க்க4லி தொ3வ்டி3யாஸ் தெனுஸ்
பீ4குன்மை கை2லேத் ரீ:ரியாஸ்தெ
பீ4க்மைனாருக் அஸ்கி பூ4குன் திர்ச்சியாஸ்தெனுஸ்
பி3ரஹ்ம குலம்மு உஜி ரீ:ரியாஸ்தெ [கு3]


தர்மம் வேண்டி வந்தவரை பயமுருத்தி விரட்டியவர்
தர்மம் வேண்டி வாழும் நிலையடைவார் (அப்படியல்லாமல்)
தர்மம் வேண்டி வந்தவரின் குறிபறிந்து பசி போக்கியவர்
தர்ம குலமாம் பிரம்ம குலத்தில் பிறப்பர்

சிடி3பிள்டானுக் பாயின்மொடி3 தகியாஸ்தெனுஸ்
குடா3 குடி3 ஹொய் உஜி ரீ:ரியாஸ்தெ
பு3டி3 ஜியாஸ்தெங்கொ க2டி3ஸொடி3 யாஸ்தெனுஸ்
கொ4டா3ன் ஹைஸ்துஸெர கு3ருஹொய் அவி ரீ:ரியாஸ்தெ [கு3]


காக்கை குருவிகளின் காலொடித்து வாழ்ந்தவர்
சேவல் கோழியாய் பிறப்பர்
மூழ்கியவர்களை கரையேற்றியவர்
யானை குதிரையோடு குருவாய் வந்து பிறப்பர்

சொக்கட்வாட் விக்குமெநி ஜு:க்கு ஸிக்காஸ்தெனுஸ்
து3க்கர் ஹொய்கின் உஜி ரீ:ரியாஸ்தெ
சொக்கட்வாட் சொக்க3தி தே3ய்மெந் சல்லியாஸ்தெனுஸ்
சொக்கட் க3தி பொந்தி3 ரீ:ரியாஸ்தெ [கு3]

நல்வழியை விஷவழி என்று அதிமேதாவியாய் இருந்தவர்
உலகில் பன்றியாய் பிறந்து வாழ்வர்
நல்வழியே நற்கதி தரும் என்று பற்றி நடப்பவர்
நற்கதி பெற்று இருப்பர்

பொ4ரிரி:யெ ஸ்ரீ ஹரிக் கொரி ப4ஜுனாஸ்தெனுஸ்
பி2ரிபி2ரி ஜெலும் க23ரி:யாஸ்தெ
ஹரிதா3ஸுநு ஜொவள் செரிக2ளியாஸ்தெனுஸ்
பி2ரிஜெலுமுக் அவ்நாஜெய் ரீ:ரியாஸ்தெ [கு3]


எங்கும் நிறைந்த அந்த ஹரியை வணங்காதார்
மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வாழ்வர்
ஹரியின் அடியாரோடு பாடி ஆடியவர்
மீண்டும் பிறவாத வரம் பெற்றார்

கெடொஹிங்கு3னார் அஸ்கி வடபத்ரார்யுநு வாட்செரி
கேஸவாக் க3வ்லேத் ரீ:ரியாஸ்தெ
நடனகோ3பாலுக் நொம்முனாஸ்தெனுஸ் நிக்ளி
நரகும் ஜெய் செரரி:யாஸ்தெ [கு3]


கரையேராதார் எல்லாம் (என் குருவான) வடபத்திரரின் வழிபற்றி
கேஸவனை பாடி இருப்பர
நடன கோபாலனை நம்பாதார் - பின்னாளில்
நரகத்தை அடைந்து இருப்பர்.

Friday, May 04, 2007

மோஹனரெங்கா ஹரி மோஹனரெங்கா ...


மோஹனரெங்கா3 ஹரி மோஹனரெங்கா3 மொக

மாஞ்சி ராகு
ஆதி3 தாளு


கண்ணினு

மோஹனரெங்கா3 ஹரி மோஹனரெங்கா3 மொக
மோக்ஷு தெ3வேன் மொந்நு தே2வி மோஹனரெங்கா3 [மோ]

கஸ்தூரி ரெங்கா3 ஹரி கஸ்தூரி ரெங்கா3 மொர
கர்முனு கடிஹேடி3 ஹரி கஸ்தூரி ரெங்கா3 [மோ]

காவேரி ரெங்கா3 ஹரி காவேரி ரெங்கா3 தீ3
பாஞ்சவ்தார் க2டெ3 உப4ய காவேரி ரெங்கா3 [மோ]

க்ருப ஸா ரெங்கா3 ஹரி க்ருப ஸா ரெங்கா3
தொர பதா3ல்விந து3ஸர்நீ: க்ருப ஸா ரெங்கா3 [மோ]

நமம் தே3 ரெங்கா3 ஹரி நமம் தே3 ரெங்கா3 ஸ்ரீ
நடனகோ3பால ஹரி நமம் தே3 ரெங்கா [மோ]


அழகரின் மோகினி அவதாரத்தை கண்டாவுடன் இப்பாடல் தானாக என் மனதில் குடி கொண்டது அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பாடலின் விளக்கம் அடுத்து வரும் நாட்களில்...

Monday, April 16, 2007

ஹரி இருக்க என்ன பயம்?

நண்பர் சிவமுருகன் நாயகி சுவாமிகளின் அருமையான பாடல் ஒன்றை எடுத்து இட்டுள்ளார். அந்தப் பாடல் மிக ஆழமான பொருள் செறிவு உள்ள பாடல். பலமுறை முதல் நான்கு ஐந்து வரிகள் பாடும் போதே அதன் பொருட் செறிவில் ஆழ்ந்து மயங்கிவிடுவதுண்டு நான்.

நம்மைப் பார்த்துக் கொள்ள ஹரி இருக்கிறான் என்று சொல்லும் போது யார் எந்தப் பக்கம் சென்றாலென்ன யார் எப்படி ஆனாலென்ன என்று தொடங்குவார். இது மற்றவரை மதிக்க வேண்டாம் என்று சொல்வது போல் முதலில் தோன்றும். ஆனால் அவர் சொல்வது வேறு. மற்றவரை மதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நம்மைக் காப்பவர்கள் என்று சில பேரை நாம் நினைக்கிறோமே - வைத்த நிதி (வங்கிக் கணக்கு), கணவன்/மனைவி, மக்கள், குலம், கல்வி என்று; அவர்கள் நம்மைக் காக்க வேண்டிய அவசியம் இல்லை; அவர்கள் நம்மைக் காக்காமல் எப்படிச் சென்றாலும் பரவாயில்லை கோவிந்தம் நம்மைக் காக்க காத்திருக்கும் போது - இந்தக் கருத்தைத் தான் முதல் மூன்று வரிகளில் சொல்கிறார்.

கோன் கொங்குட் ஜியெத் காய் - யார் எந்தப் பக்கம் சென்றால் என்ன?
கோன் கிஸொ ஹொயத் காய் - யார் என்ன ஆனால் என்ன?
அம்கோ ஸான் ஹரி ர:த தாக் காய் - நமக்கு நம்மைப் பார்த்துக் கொள்ள ஹரி இருக்கும் போது என்ன பயம்?

அடுத்த வரிகளில் இருந்து முன்னர் சொன்னதை விரித்துச் சொல்லத் தொடங்குகிறார்.

முல்லோ பான் லிக்கெ தாநுக் ரா:ய் ரா:ய் - முன்னர் தலையில் எழுதிய எழுத்துப்படி எல்லாம் இருக்கும்
புள்ளோ கரெ போளுந் கா ஸொடி ஜாய் ஜாய் - முன்பு செய்த செயல்களுக்கு ஏற்ப விட்டுப் போவது போகும் போகும்
லேத் அநெ திந்நு ஸெரெத் ஸெரிர் பொடி ஜாய் ஜாய் - கொண்டு வந்த நாட்கள் முடிந்தால் உடல் விழுந்து போகும் போகும்
ர:தோஸி நமம் கான் தீ ஐகுலுவோ - இருக்கும் போதே நாமங்களைக் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ளுங்கள்
ஹரி ஸாய் ஸாய் - ஹரி கருணைக் கண் பார்ப்பான்
பஜன யேட் கோந் கரெத் திந்நு ஹோய் ஹோய் - எந்த நாளில் பஜனை செய்கிறோமோ அந்த நாள் நன்னாள் ஆகும்
தேவ் அவி பதால் தேர் மெனி தேய் தேய் - தேவன் வந்து தாள்களை இந்தா என்று கொடுப்பான் கொடுப்பான்
தெக்டா மொந்நு பனி கர்லி - கல் மனத்தை நீர் ஆக்கி (பக்தியால் கரைய வைத்து)
சொக்கட் குண்ணு ஸெந்தோ - நல்ல குணங்களுடன்
ஹரி தியான் திந்நு கோ ஜவல்நாஸ்தக் கரொ - நாட்களை வீணாகப் போக்காமல் ஹரி தியானம் செய்யுங்கள்
புரோ ஜன்மு - பிறப்பெடுப்பது அயர்சியைத் தருவது.

ஒவ்வொரு வரியாக ஆழ்ந்து நோக்கி வந்தால் எத்தனை எத்தனை ஆழ்பொருள் கிடைக்கின்றன என்று பார்க்க முடியும்.

Tuesday, April 10, 2007

எது எப்படி இருந்தாலென்ன?

இன்றாவது ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் ஒரு பாடலை பதிக்க வேண்டும் என்று நினைத்தேன். அவருடைய பல பாடல்கள் எளிய கருத்துக்களுடன், மிக மிக உயரிய சிந்தனைகளை கொண்டுதுமாக இருக்கும். அப்பேற்பட்ட சிந்தனைகளை தூண்டும் ஒரு பாடல் இப்பதிவில்.


கோன் கொங்கு3ட் ஜியெத்காய்
கோன்கிஸொ ஹொயெத்காய் அம்கொ
ஸான்ஹரிர:த தா4க்காய் முல்லோ
பான்லிக்கெ தா4நுக் ரா:ய் ரா:ய்
பு2ள்ளொகரெ போ2ளுந்கா ஸொடி3 ஜாய் ஜாய்
லேத் அநெ தி3ந்நு ஸெரேத்
ஸெரிர் பொடி3 ஜாய் ஜாய்
ர:தொஸி நமம் காந்தீ3 ஐகுலுவொ ஹரி ஸாய் ஸாய்
4ஜநயேட் கோந்கரெதிந்நு ஹோய் ஹோய்
தே3வவி பதா3ல் தே4ர் மெநி தே3ய் தே3ய்
தெ3க்டா மொந்நு பநிகர்லி சொக்கட்
கு3ண்ணு ஸெந்தோ ஹரித்4யாந் தி3ந்நு கோ3
ஜவள்நாஸ்தக் கரோ பு2ரோ ஜெந்மு [கோ]


கோன் கொங்கு3ட் ஜியெத்காய் - யாரெவ்விதம் போனாலென்ன?
கோன்கிஸொ ஹொயெத்காய் - யாரெப்படி ஆனாலென்ன? நல்லவர்களோ ! கெட்டவர்களோ ! உங்களை சுற்றி இருந்தாலென்ன?
அம்கொ ஸான்ஹரிர:த தா4க்காய் - நம்மை காண (காக்க) ஹரிஇருக்க பயமேன்
முல்லோ பான்லிக்கெ தா4நுக் ரா:ய் ரா:ய் - முன்பே எழுதப்பட்ட விதிப்படி தான் இருக்கும்
பு2ள்ளொகரெ போ2ளுந்கா ஸொடி3 ஜாய் ஜாய் - முன் செய்த வினைகள் உங்களை விட்டு விலகும்
லேத் அநெ தி3ந்நு ஸெரேத் - கொண்டு வந்த நாட்கள் கரைந்தால்
ஸெரிர் பொடி3 ஜாய் ஜாய் - உடல் உருண்டோடிடும்
ர:தொஸி நமம் காந்தீ3 ஐகுலுவொ ஹரி ஸாய் ஸாய் - (இவுடல்) இருக்கும் போதே இரு காது கொடுத்து கேளுங்கள்
4ஜநயேட் கோந்கரெதிந்நு ஹோய் ஹோய் - பகவானை யார் துதித்தாலும் அந்த நாளே
தே3வவி பதா3ல் தே4ர் மெநி தே3ய் தே3ய் - அவன் வந்து தேவர்களும் முனிவர்களும் பெற துடித்த தன் மலர்தாளை தருவான்.
தெ3க்டா மொந்நு பநிகர்லி - கல்லான உங்கள் மனதை (அவன் நினைவென்னும்) நீரூற்றீ மெருகேற்றி
சொக்கட் கு3ண்ணு ஸெந்தோ ஹரி த்4யாந் - நல்ல குணங்களை பற்றி,ஹரியை தியானித்து
தி3ந்நு கோ3 ஜவள்நாஸ்தக் கரோ பு2ரோ ஜெந்மு - (கடந்து விட்ட நாட்களை நினைக்காமல்)இருக்கும் நாட்களை கடத்தாமல், ஹரியின் தியானம் செய்து, மறுபிறப்பை தவிர்ப்பீர்.

Tuesday, January 02, 2007

கண்ணன் எப்போது வருவானடி??



இன்று மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள். மாதங்களின் நான் மார்கழி என்றான் கண்ணன் கீதையில். ஒவ்வொரு மாதத்திலும் மதிநிறைந்த நன்னாள் (பௌர்ணமி) எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அதைக் கொண்டு தான் மாதங்களின் பெயர்களை வைத்திருக்கிறார்கள். மார்கழியில் மதி நிறைந்த நன்னாள் மிருகசீருஷ நட்சத்திரத்தில் வருகிறது. அதனால் வடமொழியில் மார்கழிக்கு மார்க்கஸீருஷம் என்று பெயர். கண்ணனும் கீதையில் 'மாஸானாம் மார்க்கஸீர்சோஹம்' என்கிறான்.

இந்த நன்னாளில் தான் மதுரையின் ஜோதி எனப் போற்றப்படும் ஆண்டாளின் அவதாரம் நவ யுக ஆழ்வார் நடனகோபால நாயகி சுவாமிகள் அவதரித்தார். இந்த நன்னாளில் சுவாமியின் பாடல் ஒன்றை பதிக்க வேண்டும் என்று சிவமுருகன் விரும்பி மின்னஞ்சல் அனுப்பினார். கரும்பு தின்னக் கசக்குமா? உடனே பாடலைப் பதிக்கிறேன்.


சுவாமிகள் நாயகி கோலத்தில்

கண்ணன் எப்போது வருவானடி கலந்து சுகம் பெறவே
நண்ணிய இத்துன்பவினை நாசமதாய் அறவே (கண்ணன்)

எண்ணம் அறிந்தது போலே இன்பம் ஈவானோடி? - ஆ
எண்ணம் இழுத்துக் கொண்டு நம்மோடிருப்பான் கூடி (கண்ணன்)

எண்ணம் இங்கெங்கே இருக்கு? இருடிகேசன் மேலே
எண்ணத் தரமோ அவன் தன் லீலைகள் நம்மாலே (கண்ணன்)

விண்ணவர்களுக்கு அமுதம் விரும்பித் தந்தானேடி
அண்ணலேடி நமக்கு இனிமேல் ஆரேடி போடி (கண்ணன்)

ஐயன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்
பொய்யல்ல மெய் ஈதறிவாய் போயழை நாம் உய்வம் (கண்ணன்)

ஏடி விட்டுப் போனான் இங்கே என் செய்வேன் சந்திர முகியே
போடி அவன் எங்கேயோ நீ போய் அழை என் சகியே (கண்ணன்)

வயிறெரியுது எங்ஙனம் போய் எவரிடத்தில் விழுவேன்
இயம்பிய வார்த்தைகளை நான் எங்ஙனம் சொல்லி அழுவேன் (கண்ணன்)

பொய் உரைப்பானோ உரையாய் பொன்னரங்கன் எம்பால்
பையரவின் மேல் நடித்த பாதனேடி அன்பால் (கண்ணன்)




நடித்த திருவடி பணிந்து நங்காய் அழை போடி
முடித்த முடி அவிழ்த்திட யாரால் முடியும் போடி (கண்ணன்)

கண்ணீர் ஆறாய் பெருக அவன் காணாது சென்றானே
பண்ணிய தவப்பயனோ பரதவிக்கின்றேனே (கண்ணன்)


இராகம்: புன்னாகவராளி
தாளம்: ரூபகம்
பாடலை டி.எம்.எஸ். பாடிக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.