Thursday, October 19, 2006

ராதா4 தொகனவெ நாயகி ஸ்வாமின்

ராதா4 தொகனவெ நாயகி ஸ்வாமின்
எழுத்தாளர்: T.S. சரோஜா சுந்தர்ராஜன், கோவை
தூ மது2ராபுரிமு ரி:யெஸ்கி பா3
கோ3குலும் மொய்ரெ ஒயஸு ஜியெஸ்கி பா3
தூ மது3ராக் ஜெயெ பா4டாம் ஜூலோ ப4ந்தி3
அம்ரெ ஸ்ருங்கா3ர் கே2ளும் ஸௌரஸேனிம் க3வ்லி
ப்ரக்ருதிம் பஸுபக்ஷிம் அகாஸ் நெத்3தி3ம்
கீஷ்டு தொய்ரெ அங்க3லெக்ஷண் ஸீலி ஸீலி
வராம் பொ4ரி ரி:யெதொய்ரெ பொ3ங்க்3ஸூ ஜகில்லி
விரக்3டாப் ஸஹன்கெர்லி ஜுலிஸ்கி பா3
தூமது2ரா புரிமு ரி:யஸ்கி பா3
தூமது2ரா புரிமு ரி:யஸ்கி பா3

'ராதா4' நமம் க4லிகின் ஹவ்ட்4யாகி பா3
ப்ரேம் தா3ராகன் தொய்ரெஹோர் கெ3ளீஸ்கி பா3
ஞாந்தே3ன் தொய்ர் ப்ரேவுக் ஜல்னாஸ்தகு
ஞானினும் மேட் ஞானி 'மீஸ் மெனி' மெல்லீஸ்கிபா3
பரமாத்மா தொரெ ஸெரொ ஐக்யம் ஹொனிக்
ஜீவாத்மாமீ க2டெ ஜெலுமுன் ஸங்குஸ்கி பா3

ராதா4 க்ருஷ்ணாக் ஜெய் ஜெய்
ராதா4 க்ருஷ்ணாக் ஜெய் ஜெய்

ஸௌரஸேனி கவிபுருஷ் ஸூர்தா3ஸ் ஹொய்லி
ஸஸர்லாக்2 கவிடான் ராதா4 க்ருஷ்ண ஸ்ருங்கா3ர் லீலான்
3விக3விகின் ஸொம்பு ஹொயெஸ் அந்தர் த்3ருஷ்டிமூ
த்3ருஷ்டுகீன் ஸுர்தாஸுக் லாஜ்நீ: மெந்யாஸி
ஸௌரஸேனி பா4ஷாக் இன்பு பொங்க்3ஸூர் கெர்த்யேஸி
கோ3வர்தன் கிரி த4வ்ராம் அஷ்டசாபுன் ஸெரொ
3விநசிது4ங்கி வைப4வ் ஜிவ்னம் ஜிவேஸி

ஜெய் கோ3வர்தன்கி3ரி ஸ்ரிநாதுக் ஜெய்
ஜெய் கோ3வர்தன்கி3ரி ஸ்ரிநாதுக் ஜெய்

ஸௌரஸேனி சிகுர் பா3ஷா மராட்டி பெ3ய்கன்
மீரா நமம் க4ல்லி க்ருஷ்ணபத்னி மெல்லிஸ்
தொரெ ப4ஜன் க4வ்லேத் வராபோக் ஜியெ ஜீவ்
தமிழ் பா4ஷா ஆண்டா4ள் கொய்லி பாஸுரம் க3விஸி
பு2லெ பூ2லூனும் தொரெஸ்மிதமுக ஸிங்கா3ர் ஸீலி
பூ2லுமாலெ கெ3ளாம் கல்லி தொக34ல்திஸி
ராதா4ஸொகன் கோ3பிகானுக் செர்ச்சிலிஸ்கிபா

மார்க3சீர்ஷொ ம:டொ3 போர் புந்நிம் திந்நுமெநொ
மார்க3சீர்ஷொ ம:டொ3 போர் புந்நிம் திந்நுமெநொ

ஸௌரஸேனி சிகுர்பா4ஷொ ஸௌராஷ்ட்ர கவிகன்
நடன கோ3பால் தொரெ நாயகி3 ஹொய்யேஸ்
ராதா4ஜெலும் ரீ:லி கெரெ மொய்ர்ப4க்தி ஸ்ங்கி3ல்லி
தொர் ந்யாவ் மொர்ந்யாவ் ரஜமன்னார்ஜோள் ஸங்கி3தேஸ்
ராதா4ஜெலும்மு ரி:யெ ஹங்க்ருதி ஜெயெஹால்
ராஜமன்னார் தொக கெ4டி3பொ3வி மொய்ர்ஸெரொ செர்சிதேஸ்
த்4யானும்பிஸி 'ஹரி அவ்டி3யோ' மெல்லெத்கன்
ப்ராண்ஸொட3ன் வேள் கெ3ருட்3 வாஹனோ:ர் பொ3ல்ஜியேஸ்

ஸன்மார்கு3ம் பா4ஷாப4க்திர் ப4ஜன் கெரேதி
வடபத்ர ஸாயி ஜொவள் வடஸே வடஸே

Wednesday, October 18, 2006

ஸ்ரீ இராமனை ...

ஒரு சொல்லை ஓரிரு முறை சொன்னால் அது மறந்து விடுகிறது. ஆனால், அதுவே பல முறை நூறு முறை சொல்லப்படும் போது, அதுவே குணமாக மாறிவிடுகிறது. மாறியகுணம் உங்கள் வாழ்வை மாற்றுகிறது. மாறிய வாழ்வு, உங்கள் சுற்று புறத்தை மாற்றுகிறது. எல்லாவற்றிர்க்கும் ஆரம்பம் நம்மிடம் தான் ஆகவே தான் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் தங்களது மாணவ வம்சாவழிக்கு தரும் ஒரு பெரிய நீதியாக இந்நாமாவளி சொல்லப்படுகிறது.

ஸ்ரீ இராமனை துதிசெய் மனமே
ஸ்ரீ வாமனை கதியென்றிரு தினமே
எமனை அடிக்கும் வில்குணமே
காமனை ஜெயிக்கும்சொல் மனமே


உன்னை காக்க அந்த நாராயணனின் அவதாரமான இராமனே வரவேண்டும் ஆகவே அவனை துதிசெய்.
உன்னை காக்க அந்த நாராயணனின் அவதாரமான வாமனனே வரவேண்டும் அவனை கதி என்று இரு.
ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்த இராமனது அறம் (குணம்) தான் எமனையும் காமனையும் வெற்றி கொள்ளும் அறம் ஆகவே அவனை சொல் (வணங்கு), அவனது புகழ் பாடுவாய்.

Monday, August 21, 2006

கருடாருட வாகனத்தில் அந்த அரங்கனை...

கருடாருட வாகனத்தில் அந்த அரங்கனை கண்டால் அடுத்த வினாடியே அவன் வைகுண்ட வாசம் பெருகிறான், அப்பேற்பட்ட பேற்றை பெற என்ன வழி என கேட்ப்பவர்களுக்கு சுவாமிகள் தரும் ஒரு அறிவுரையாக, இப்பாடலை பாடியுள்ளார்.

இப்பாடல் தமது சங்கீத குரலில் திரு. ராமரத்தினம் அவர்கள் பாடியுள்ளார்.



இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி
பொ3வொ
ஆரபி4 ராகு
ஆதி3 தாளு
பல்லவி
இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி பொ3வொ
பிஸொ திரிஜாய் பாப் ஜாயி (இஸொ)


அநுபல்லவி
நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)


சரணு
மகெ3 வரமுனு தே3ய் மாத4வா ஹரி மெனொ
கொகொ3 பு4க்கொ ஸுக்கரி:யாஸ்
சொக்கட்க3தி தே3 ஹரி சூகுன் அண்சிலெமெனொ
தெ3க்கெதா4நுக் ஹிண்டெ3த் தே3வ் க்ருப கோனக்கரய் (இஸொ)

அக்கரகன் ஸெரிர் ஹிப்பி3ரா:னா து4ளிஜாய் ஸ்ரீ
ஜானகி ரமணா மெனொ
ஜானா பாப் அஸ்கி ஜாய் ஜல்வொ ஸ்ரீ ஹரி பத3ம்
தே3னாவ்மெனி பொ3வ்னாஜியேத் தே3வ் க்ருப கோனக்கரய்(இஸொ)

வட அப்ப3யி ஸ்ரீ வைகுண்டும் மெனி அம்ர
வடபத்ரார்யுநு வசிரி:யாஸ் ஸ்ரீ
நடனகோ3பால ஸ்ரீ நரஹரிமெனி நசொ
தி4டவ்கன் கெ3ருடோ4ர் அவி தே3வ் க்ருப கரய் கரய் (இஸொ)


இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி பொ3வொ
பிஸொ திரிஜாய் பாப் ஜாயி (இஸொ)

நித்தமும் சர்வகாலமும் கேஸவா என அழையுங்கள்
பித்தம் தெளியுமே பாவம் தொலையுமே

அநுபல்லவி
நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)

ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்


சரணு

மகெ3 வரமுனு தே3ய் மாத4வா ஹரி மெனொ
கொகொ3 பு4க்கொ ஸுக்கரி:யாஸ்
சொக்கட்க3தி தே3 ஹரி சூகுன் அண்சிலெமெனொ
தெ3க்கெதா4நுக் ஹிண்டெ3த் தே3வ் க்ருப கோனக்கரய் (இஸொ)

கேட்ட வரமளிப்பான் கேஸவா என்று சொல்லுங்கள்
ஏன் பட்டினி கிடக்கிறீர்கள்
நல்ல கதி தந்திடுவென ஹரி குற்றங்களை பொருத்திட சொல்லுங்கள்
கண்டபடி அலைந்தால் கண்ணன் எப்படி கருணை புரிவான்

அக்கரகன் ஸெரிர் ஹிப்பி3ரா:னா து4ளிஜாய் ஸ்ரீ
ஜானகி ரமணா மெனொ
ஜானா பாப் அஸ்கி ஜாய் ஜல்வொ ஸ்ரீ ஹரி பத3ம்
தே3னாவ்மெனி பொ3வ்னாஜியேத் தே3வ் க்ருப கோனக்கரய்(இஸொ)

நிலைபெயாராது இவ்வுடல் நிற்க்காது உருண்டோடும் ஸ்ரீ
ஜானகி ரமணா என சொல்லுங்கள்
தொலையாத பாபமும் தொலைந்தோடும் ஹரியின் பாதார விந்தத்தை
தரசொல்லி அழைக்காமலிருந்தால் அவனெப்படி கருணை புரிவான்

வட அப்ப3யி ஸ்ரீ வைகுண்டும் மெனி அம்ர
வடபத்ரார்யுநு வசிரி:யாஸ் ஸ்ரீ
நடனகோ3பால ஸ்ரீ நரஹரிமெனி நசொ
தி4டவ்கன் கெ3ருடோ4ர் அவி தே3வ் க்ருப கரய் கரய் (இஸொ)

வைகுண்டத்தில் நமக்கும் இடம் கிடைக்கும் என நம்
வடபத்திரர் சொல்லியுள்ளார் ஸ்ரீ
நடன கோபலனே, நரஹரியே என பாடி ஆடுங்கள்
கட்டாயமாக கருடாருட வாகனத்தில் வந்து காட்சி தந்து கருணை புரிவான்

பல்லவி
நித்தமும் சர்வகாலமும் கேஸவா என அழையுங்கள்
பித்தம் தெளியுமே பாவம் தொலையுமே. (நித்தம்)

அநுபல்லவி

ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்(நித்தம்)

சரணு

கேட்ட வரமளிப்பான் கேஸவா என்று சொல்லுங்கள்
ஏன் பட்டினி கிடக்கிறீர்கள்
நல்ல கதி தந்திடுவென ஹரி குற்றங்களை பொருத்திட சொல்லுங்கள்
கண்டபடி அலைந்தால் கண்ணன் எப்படி கருணை புரிவான்(நித்தம்)

நிலைபெயாராது இவ்வுடல் நிற்க்காது உருண்டோடும் ஸ்ரீ
ஜானகி ரமணா என சொல்லுங்கள்
தொலையாத பாபமும் தொலைந்தோடும் ஹரியின் பாதார விந்தத்தை
தரசொல்லி அழைக்காமலிருந்தால் அவனெப்படி கருணை புரிவான்(நித்தம்)

வைகுண்டத்தில் நமக்கும் இடம் கிடைக்கும் என நம்
வடபத்திரர் சொல்லியுள்ளார் ஸ்ரீ
நடன கோபலனே, நரஹரியே என பாடி ஆடுங்கள்
கட்டாயமாக கருடாருட வாகனத்தில் வந்து காட்சி தந்து கருணை புரிவான் (நித்தம்).

Thursday, August 17, 2006

நாராயணன் திருநாமம் மிகப்பெரிய விருந்து


ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளை, பலர் உற்றார் உறவினர்களுக்கு ஆசி கூறவும் அதனையே ஒரு சாக்காக நல்ல சாப்பாடு சாப்பிடவும் வைப்பது என்று தமது விருந்து வைபவங்களில் பலர் அழைப்பதுண்டு. சாதாரணமாக எவ்வித பிரமச்சாரிகளும் இது போன்ற வைபவங்களை தவிர்ப்பர், அப்போது ஏற்படும் ஒரு தர்மசங்கடமான நிலையை சமாளிக்க தமது சீடர்களுக்கும் இப்பாடலை பாடி அறிவுரை சொல்லியும், தம் பிரமச்சாரிய தர்மத்தை காக்கும் படியும் சொல்வார்.

இப்பாடலில் வரும் ஒருரிரு வரிகளை பாடும் சமயத்தில், அவரது பக்தி ரசம், பக்தி சாப்பாடு ஆவதை காணலாம். ஹரி நாமம் ஒரு இனிய பழம் என்றவர், இனிய மிட்டாய் என்றவர், இப்பாடலில் அந்த ஆழிமழைகண்ணனின் திருநாமம் ஒரு பெரிய விருந்து உணவு என்றும், இனிய பழங்களில் கூட்டு என்றும், இனிய இனிப்புகளின் ஒரு கூட்டுப்படைப்பு என்றும், தமக்கு வீடு, பணம், நகை போல் உள்ளது என்றும், உண்டபின் எடுத்துகொள்ளப்படும் பூ, சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது என்றெல்லாம் பாடினாலும் நரகத்தை தவிர்க்கும் மார்கத்தையும், தமது குருநாதரை வணங்குவதையும் தவறவிடுவதில்லை சுவாமிகள். இப்பாடல் சுவாமிகளின் எல்லா பாடல்களின் ஒரு தொகுப்பு பாடலாக காணப்படுகிறது.

இப்பாடலை திரு டி.எம்.எஸ். அவர்களும், திரு. டி.எம். சந்திரசேகர் அவர்களும் பாடியுள்ளனர்.

தா3ள் தூப்ஸெரொ பா4த் ஜெமெஸொகன் ஸே ஸ்ரீ
தா3மோதர நமமு புஜா
போ2ள் கராஸ்தெங்கோ ஸப்பை3 யே நமமு

பாப்ஜாய் யே ஐகோ பஸெம்ஸொகன் ஸே ஸ்ரீ
கோ3பால ஹரி நமமு
பாபிநுகப்பை3கி யே நமமு

கெளொ நரெள் ஸெக்கர்குஸ்ரி க2யெஸொகன் ஸே ஸ்ரீ
கேஸவ ஹரி நமமு
கிர்தாப் தே3ரேஸ் யே நமமு

கு3ள்ளெ பொள்ளாநஸ்கி மிவ்ளெ கு3ள்ளெஸொகன் ஸே ஸ்ரீ
கோ3விந்த3 ஹரி நமமு
து3ர்கு3ண்ணுனு மரிதகய் யே நமமு

ஸெக்கர் தூ3துமிவ்ளி ஸோகுக்க2ள்யெ ஸொகன் ஸே ஸ்ரீ
ஸங்கு சக்ரதா4ரி நமமு
ஸிள்ளொ கா3ம்தே3ய் யே நமமு

சொக்கட்மி:டாய் ஜுக்கு ஜுக்கு க2யெஸொகன் ஸே ஸ்ரீ
சொவ்த் லோக் பொ4ரெ ஹரி நமமு
சூக் ஸாநா யே நமமு

கே4ர:ந்நவ் ஸொம்மு ஹொய்ரி:யெஸ் மொகொ
கெ3ருடோ4ரவய் ஹரி நமமு
கே4ர் அவைகி ஸெரொ அவை யே நமமு

பூ2ல் ஸிர்க்கண் பான:ப்பள் ஸொகன் ஸே லொ:வ்வத3மர்
பூ2ல் பதா3ல் ஹரி நமமு
ஜெலுமவ்நா பொஸயி யே நமமு

நரகுஜானார:வாய் யே ஜநி க3வேத் ஸ்ரீ
நடனகோ3பால நமமு
விர்ஜாநெத்தி3க் பொ3ல்ஸொடை3 யே நமமு

வடபத்ரார்யுநு மொகொ க்ருப கராஸ்
வைகுண்டு வாடு நமமு
வாட்சலேத் ஸுக2ம் தே3ய் யே நமமு


தா3ள் தூப்ஸெரொ பா4த் ஜெமெஸொகன் ஸே ஸ்ரீ
தா3மோதர நமமு புஜா
போ2ள் கராஸ்தெங்கோ ஸப்பை3 யே நமமு


பருப்பு நெய் கலந்து உண்டது போல் உள்ளது
ஸ்ரீ தாமோதரனின் திருநாமம் – பூஜை
செய்து வாழ்பவர்க்கே கிடைக்கும் இத்திருநாமம்

பாப்ஜாய் யே ஐகோ பஸெம்ஸொகன் ஸே ஸ்ரீ
கோ3பால ஹரி நமமு
பாபிநுகப்பை3கி யே நமமு


பாவம் தொலையும் கேளுங்கள் பாயசம் போலிருக்கே ஸ்ரீ
கோபாலன் ஹரி இத்திருநாமம்
பாபிகளுக்கிடைக்குமோ இத்திருநாமம்

கெளொ நரெள் ஸெக்கர்குஸ்ரி க2யெஸொகன் ஸே ஸ்ரீ
கேஸவ ஹரி நமமு
கிர்தாப் தே3ரேஸ் யே நமமு


வாழைப்பழம் தேங்காய் கலந்து உண்டது போலிருக்கே ஸ்ரீ
கேஸவ ஹரியின் நாமம்
கருணை தருகிறதே இத்திருநாமம்

கு3ள்ளெ பொள்ளாநஸ்கி மிவ்ளெ கு3ள்ளெஸொகன் ஸே ஸ்ரீ
கோ3விந்த3 ஹரி நமமு
து3ர்கு3ண்ணுனு மரிதகய் யே நமமு


இனிய பழங்களை ஒன்றான இனிமையை கொண்டுள்ளது ஸ்ரீ
கோவிந்த ஹரியின் நாமம்
கெட்ட குணங்களை கொன்று போடிடும் இத்திருநாமம்

ஸெக்கர் தூ3துமிவ்ளி ஸோகுக்க2ள்யெ ஸொகன் ஸே ஸ்ரீ
ஸங்கு சக்ரதா4ரி நமமு
ஸிள்ளொ கா3ம்தே3ய் யே நமமு


சக்கரை பால் கலந்து தாகத்தைத் தணித்தது போல் உள்ளது ஸ்ரீ
சங்கு சக்ரதாரியின் நாமம்
குளுமையான ஊரைத் தரும் இத்திருநாமம்

சொக்கட்மி:டாய் ஜுக்கு ஜுக்கு க2யெஸொகன் ஸே ஸ்ரீ
சொவ்த் லோக் பொ4ரெ ஹரி நமமு
சூக் ஸாநா யே நமமு

நல்ல மிட்டாய்களை அதிநிறைய உண்டது போல் உள்ளது ஸ்ரீ
பதினான்கு உலகில் நிரம்பிய ஹரியின் நாமம்
குற்றம் பொருக்குமே இத்திருநாமம்

கே4ர:ந்நவ் ஸொம்மு ஹொய்ரி:யெஸ் மொகொ
கெ3ருடோ4ரவய் ஹரி நமமு
கே4ர் அவைகி ஸெரொ அவை யே நமமு


வீடு, பணம், நகை ஆகவுள்ளது எனக்கு
கருடவாகனன் ஹரியின் நாமம்
வீடுபேறு கிடைக்க செய்யும் இத்திருநாமம்

பூ2ல் ஸிர்க்கண் பான:ப்பள் ஸொகன் ஸே லொ:வ்வத3மர்
பூ2ல் பதா3ல் ஹரி நமமு
ஜெலுமவ்நா பொஸயி யே நமமு

மலர், சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது செந்தாமரை
மலர் தாளினை கொண்ட ஹரியின் நாமம்
ஜென்மம் எடுப்பதை துடைத்து போடும் இத்திருநாமம்


நரகுஜானார:வாய் யே ஜநி க3வேத் ஸ்ரீ
நடனகோ3பால நமமு
விர்ஜாநெத்தி3க் பொ3ல்ஸொடை3 யே நமமு


நரகத்தை தவிற்கலாம், அறிந்து பாடினால் ஸ்ரீ
நடன கோபாலனின் நாமம்
விர்ஜை நதிக்கு கொண்டு போய்விடும் இத்திருநாமம்

வடபத்ரார்யுநு மொகொ க்ருப கராஸ்
வைகுண்டு வாடு நமமு
வாட்சலேத் ஸுக2ம் தே3ய் யே நமமு


வடபத்திரர் எனக்கு கருணை புரிந்துள்ளார்
வைகுண்ட வழி இத்திருநாமம்
வழியில் இன்பங்களை பல தந்துள்ளன இத்திருநாமம்.


பருப்பு நெய் கலந்து உண்டது போல் உள்ளது ஸ்ரீ
தாமோதரனின் திருநாமம் – பூஜை
செய்து வாழ்பவர்க்கே கிடைக்கும் இத்திருநாமம்

பாவம் தொலையும் கேளுங்கள் பாயசம் போலிருக்கே ஸ்ரீ
கோபாலன் ஹரி இத்திருநாமம்
பாபிகளுக்கிடைக்குமோ இத்திருநாமம்

வாழைப்பழம் தேங்காய் கலந்து உண்டது போலிருக்கே ஸ்ரீ
கேஸவ ஹரியின் நாமம்
கருணை தருகிறதே இத்திருநாமம்

இனிய பழங்களை ஒன்றான இனிமையை கொண்டுள்ளது ஸ்ரீ
கோவிந்த ஹரியின் நாமம்
கெட்ட குணங்களை கொன்று போடிடும் இத்திருநாமம்

சக்கரை பால் கலந்து தாகத்தைத் தணித்தது போல் உள்ளது ஸ்ரீ
சங்கு சக்ரதாரியின் நாமம்
குளுமையான ஊரைத் தரும் இத்திருநாமம்

நல்ல மிட்டாய்களை அதிநிறைய உண்டது போல் உள்ளது ஸ்ரீ
பதினான்கு உலகில் நிரம்பிய ஹரியின் நாமம்
குற்றம் பொருக்குமே இத்திருநாமம்

வீடு, பணம், நகை ஆகவுள்ளது எனக்கு
கருடவாகனன் ஹரியின் நாமம்
வீடுபேறு கிடைக்க செய்யும் இத்திருநாமம்

மலர், சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது செந்தாமரை
மலர் தாள் ஹரியின் நாமம்
ஜென்மம் எடுப்பதை துடைத்திடும் இத்திருநாமம்

நரகத்தை தவிற்கலாம், அறிந்து பாடினால் ஸ்ரீ
நடன கோபாலனின் நாமம்
விர்ஜை நதிக்கு கொண்டு போய்விடும் இத்திருநாமம்

வடபத்திரர் எனக்கு கருணை புரிந்துள்ளார்
வைகுண்ட வழி இந்நாமம்
வழியில் இன்பங்களை பல தந்துதிருக்குமே இத்திருநாமம்.

இப்பதிவு "மதுரையின் ஜோதி" பதிவின் ஐம்பதாவது பதிவு, என்னுடைய இருநூற்றி ஐம்பாதவது பதிவுமாகும்.

Tuesday, August 15, 2006

எனக்கெப்போது கருணை புரிவாய்...

கண்ணனை மனமுருகி அழைப்பதில் ஸ்ரீமந்நாயகி சுவாமிகளுக்கு நிகர் அவரே.

கண்ணனை அழைப்பவர், தான் மட்டும் அழாமல் அந்த கண்ணனையே சில சமயங்களில் அழவைத்துவிடுவார். அப்படி ஒரு பாடலை பாடி அவரது சீடர்கள் பலர் அழுது தொழுத பாடல். ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் ஒரு பாடல். இப்பாடலை ஸ்ரீமந்நாயகி சுவாமிகள் சங்கீத சமிதியை சேர்ந்த இருபத்தைந்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் (S.P. கீதா பாரதி குழுவினர்) குழுவாக பாடியுள்ளனர்.


கண்ணினு
மொக் கொ2ப்பா3க் க்ருபகரநவஸ்தெ---மொர
பாபுந் கொ2ப்பா3க் து4வை ஜாஸ்தெ ஹரி

தொக் கொ2ப்பா3கு யேடவாஸ்தெ---தொர
மொந்மொர்ஹோர் கொ2ப்பா3க் ஹுத்ரஸ்தெ ஹரி

களதெ3க்ட3ஹா தொர மொந்நு---மீ
காய்கரு தொகொ யே காய் கு3ண்ணு ஹரி

ஸொளஹோஸ்தெ கொ2ப்பா3க்மோ தி3ந்நு--தொகொ
ஸொண்ணாரி:யேஸ் ஏ மொர் கு3ண்ணு ஹரி

கு3ண்ணுனு மரி சொக் கு3ண்ணு தே3---தே3
கோ3விந்தா3 கோ3பாலா பதா3ல் தே3 தே3

தி3ந்நுன் கோ3 ஜாரேஸ் ஸேவ தே3---தே3
ஸ்ரீ தே3வு தொர்நாவுக் உடாவ் தே3 தே3

தே3மெனி மக3ரி:யெ மொகொ தூ---ஸேவ
தே3நாஜியெத் காய்ஹோய் லோகுர் தூ

ஸாமெனி மெநொரி:யெ மொக தூ---தொ3ளர்
ஸாநாஜியெத் காய்மெனய் ஜக3த் தூ

ஜக3துர்மொக தூ ஹாத்ஸொட3ன் ஹோய்கி--ஜெநெ
மாய் நு:க்ருக் மரி தொ3வ்ட3ன் ஹோய்கி ஹரி

ஹொக3த் தொர நமம்விநா ஸேகி---ஹோய்கி
மொரஹோர் தொகொ ராக் கொக3ஹால்கி ஹரி

ராக் தெ2வெத் மீ சொக்கடொ4வுகி---ஸ்ரீ
ராமா தொகொ கொ2ப்பா3க் ஸவுகி மீ தூ

யோக் ஹொய்லஸ்தெ கோந் கலம்கி---தூ
யோசன கர்லேத் ரி:யெஸ்தெ கொக3கி ஹரி

து3ஸ்ர ஹட்வுநொகரே---க்ருஷ்ணா
தொரநமம் மொகொ தூ3த்ஹொய்ரி:யெஸ்ரே ஹரி

பிஸொ தெ4ரஸ்திஸொ ஸாரே---த்யே
பிஸொ தெ4ர்நாஸ்தெக காய் ஸுக2ம்ஸேரே ஹரி

ஸுக2ம் தே3நவயி மெல்லி மீ ரி:யெஸி---
ஸோத3ன கர்லேத் தூ ரி:யெஸி ஹரி

யெகஸ்ஹா மீ தொகொ தா3ஸொ:யெஸ்தெ--- ஹரி
யேஸ்ஹா மொர ப்ராப்தமு ஸேஸ்தெ ஹரி

தீ3ஸ் நிக்ளெத் ஹந்தா3ர் ஜ:கில்ராய்கி---தே3வூ
தொர கிர்பகெது3ர் கர்முனு ரா:ய்கி ஹரி

தூ விநா து3ஸர் கோந்தி ஸேகீ---தொர
மாயா கட்வென் மொரஹால் ஹோய்கி ஹரி

கடிஹேடி3 யே கர்முநு மூளு---மீ
காய்கருயே லோக் தொரெ கே2ளு ஸ்ரீ

நடனகோ3பாலா கோ3 பீளு க4ல்நக
நசி க3வஸ்தகோஸ் ஏ வேளு



மொக் கொ2ப்பா3க் க்ருபகரநவஸ்தெ – எனக்கு எப்போது கருணை புரிவாய் மொர பாபுந் கொ2ப்பா3க் து4வை ஜாஸ்தெ ஹரி – என் பாபங்கள் எப்போது தீரும், ஹரி

தொக் கொ2ப்பா3கு யேடவாஸ்தெ – நீ எப்போது இங்கு வரப்போகிறாய்
தொர மொந்மொர்ஹோர் கொ2ப்பா3க் ஹுத்ரஸ்தெ ஹரி – நீ என்பால் எப்போது மனமிறங்கப் போகிறாய்

களதெ3க்ட3ஹா தொர மொந்நு – கரிய கல்லோ உன் மனம்
மீ காய்கரு தொகொ யே காய் கு3ண்ணு ஹரி – (அப்படி இருந்து விட்டால்) நான் என்ன செய்வேன் ஏன் இப்படி பட்ட குணமுனக்கு.

ஸொளஹோஸ்தெ கொ2ப்பா3க்மோ தி3ந்நு- எப்போது விடியுமோ என் இருண்ட நாட்களில்

தொகொ ஸொண்ணாரி:யேஸ் ஏ மொர் கு3ண்ணு ஹரி – உன்னை விடாமல் இருப்பதே என் குண்மாகும் ஹரி

கு3ண்ணுனு மரி சொக் கு3ண்ணு தே3 - தீய குணங்களை கொண்று நற்குணங்களை அருள்வாய்
தே3 கோ3விந்தா3 கோ3பாலா பதா3ல் தே3 தே3 – கோவிந்தா கோபாலா உன் பாதார விந்தத்தை அருள்வாய்

தி3ந்நுன் கோ3 ஜாரேஸ் ஸேவ தே3- நாட்கள் கரைந்தோடுகிறதே அருள்வாய்
தே3 ஸ்ரீ தே3வு தொர்நாவுக் உடாவ் தே3 தே3 – ஒளிகுறையாத தெய்வமே உன் பெயரை அருள்வாய்

தே3மெனி மக3ரி:யெ மொகொ தூ- நீ என்னை தரச்சொல்லி கேட்கிறாயோ
ஸேவ தே3நாஜியெத் காய்ஹோய் லோகுர் தூ – சேவை தராவிட்டால் உலகில் என்னவாகும்

ஸாமெனி மெநொரி:யெ மொக தூ- நீ பாரென்று சொல்கிறாய் என்னை தொ3ளர் ஸாநாஜியெத் காய்மெனய் ஜக3த் தூ – நீ உலகில் இருந்தும் என் கண்கள் காணாவிட்டால் இந்த உலகம் என்ன சொல்லும்.

ஜக3துர்மொக தூ ஹாத்ஸொட3ன் ஹோய்கி – இவ்வுலகின் என்னை கைவிடலாமோ ஹரி
ஜெநெ மாய் நு:க்ருக் மரி தொ3வ்ட3ன் ஹோய்கி ஹரி – பெற்ற தாய் பிள்ளையை கொல்வாளோ ஹரி...

ஹொக3த் தொர நமம்விநா ஸேகி – உன்நாமம் அன்றி வேறு மருந்தும் உள்ளதோ?
ஹோய்கி மொரஹோர் தொகொ ராக் கொக3ஹால்கி ஹரி – என்மீது கோபம் எதனாலோ ஹரி...

ராக் தெ2வெத் மீ சொக்கடொ4வுகி – கோபங்கொண்டால் நான் நன்றாக இருப்பேனோ?
ஸ்ரீ ராமா தொகொ கொ2ப்பா3க் ஸவுகி மீ தூ – ஸ்ரீராம எப்போது உன்னை நான் காண்பேனோ? ஹரி...

யோக் ஹொய்லஸ்தெ கோந் கலம்கி – ஒன்றாகும் நாள் எக்காலமோ
தூ யோசன கர்லேத் ரி:யெஸ்தெ கொக3கி ஹரி – நீ யோசனை செய்வது எதனாலோ ஹரி...

து3ஸ்ர ஹட்வுநொகரே – உன்னையன்றி வேறு சிந்தனை வேண்டாமைய்யா
க்ருஷ்ணா தொரநமம் மொகொ தூ3த்ஹொய்ரி:யெஸ்ரே ஹரி – கிருஷ்ணா உன் திருநாமம் எனக்கு பாலாகி (அமுதமாகி) இருந்ததைய்யா. ஹரி...

பிஸொ தெ4ரஸ்திஸொ ஸாரே – பித்து பிடித்தது போல் இருக்கிறதே
த்யே பிஸொ தெ4ர்நாஸ்தெக காய் ஸுக2ம்ஸேரே ஹரி – அந்த பித்தம் பிடிக்காமல் என்ன சுகமுண்டோ – ஹரி...

ஸுக2ம் தே3நவயி மெல்லி மீ ரி:யெஸி – நீ சுகமளிப்பாய் என நானிருந்தேன்
ஸோத3ன கர்லேத் தூ ரி:யெஸி ஹரி – நீ சோதனை தந்துகொண்டிருந்தாய் - ஹரி...

யெகஸ்ஹா மீ தொகொ தா3ஸொ:யெஸ்தெ – இதற்காகவா நானுன் தாஸனானேன்
ஹரி யேஸ்ஹா மொர ப்ராப்தமு ஸேஸ்தெ ஹரி – இல்லை இது தான் என் பிராப்தமோ என்னவோ. ஹரி...

தீ3ஸ் நிக்ளெத் ஹந்தா3ர் ஜ:கில்ராய்கி – சூரியன் வந்தால் இருள் நிற்க்குமோ?
தே3வூ தொர கிர்பகெது3ர் கர்முனு ரா:ய்கி ஹரி - உன் கருணைக்காக எத்தனை வினைகளை தாங்கனுமோ?

தூ விநா து3ஸர் கோந்தி ஸேகீ – உன்னையன்றி வேறு யவரேனுமுண்டோ
தொர மாயா கட்வென் மொரஹால் ஹோய்கி ஹரி – உன் மாயையை அறுக்க வேறு யவருமுண்டோ? ஹரி...

கடிஹேடி3 யே கர்முநு மூளு – அறுத்தெரிவாய் வினைபயனை
மீ காய்கருயே லோக் தொரெ கே2ளு ஸ்ரீ – நான் என் செய்வேன் உலகே உன் மேடை ஸ்ரீ...

நசி க3வஸ்தகோஸ் ஏ வேளு – உன்னை பாடி ஆடுபவர்களுக்கு இப்போது
நடனகோ3பாலா கோ3 பீளு க4ல்நக – நடன கோபாலா தடைகளை போடாதே.

Monday, August 14, 2006

சீதாராமா என்னை பாரப்பா...

ஸீதாராம் தொ3ளர் ஸெய்லெ ராம்
ஸேவொ மொகொ தூ தீ3டெ3 ராம்
ஏ ஜெகதுர் தொ2வி கே2ள் கெந்நொக ராம்
ஏ ஜென்மு க23ன் ஸெக்காநி ராம் [ஸீ]


சீதா ராமா எம்மை பார் ராமா,
சேவை எனக்கு தந்திடு ராமா,
இந்த உலகில் என்னை வைத்து விளையாடாதே ராமா,
இந்த ஜென்ம கடனை தாங்க முடியவில்லையே ராமா.

சீதைக்கு அனுகிரகமளித்தவனே எம்மையும் அனுகிரகிப்பாய்,
சேவை தந்து என்னையும் ஒரு மனிதனாக்கிடுவாய். இந்த உலகமானது பெண்ணிற்க்கு எப்படி புகுந்த வீடோ அப்படி எனக்கும் சற்று சலனமாக உள்ளது, அப்பேற்பட்ட ஒரு இடத்தில் வைத்து என்னை உன் திருவிளையாட்டிற்க்கு ஆளாக்காதே, சீக்கிரம் என்னை உன்னடியில் சேர்த்துக்கொள். இந்த கடன் என்னால் சகிக்க முடியவில்லை, தாங்க முடியவில்லை. சீக்கிரம் உன் சேவை தருவாய் ராமா.

Friday, August 11, 2006

மொழிபற்றும் இறை பற்றும்

பா4ஷா ப4க்தி நீ:ஸ்தெநொ பா4த் நீ:ஸ்தெ பொ4ந்நொ
நித்ய முக்தி பொந்த்3யாஸ் தெங்கொ காய் உந்நொ
ஸெத்து தொப்பி சலெஸ்தெநொ பெ4டெ3 செந்நொ
ஸித்3து3லுவாட் சலெஸ்தெநொ உக்கு செந்நொ


மொழிபற்று இல்லாதவன் உணவில்லாத பானை
நித்ய முக்தி பெற்றவன் – என்ன குறையுள்ளவன்?
சத்தியத்தை தவறி நடந்தவன் கோழையவன்
சித்தமளிக்கும் வழியில் நடந்தவன் எஃகானவன் (வலிமையானவன்)

ஸ்ரீமந் நடன கோபல நாயகி சுவாமிகளும், சௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்துக்களை அறிவித்தவரான ஸ்ரீமான் மேதாவி. ராமராய் அவர்களும் சந்தித்த போது இந்த நாமாவளி பாடியதாக குறிப்புள்ளது.

பாஷை பக்தியும் பகவத் பக்தியும் வண்டியின் இருசக்கரங்களாக இருக்கவேண்டும் என்றும், அப்படி இல்லாதவன் உணவில்லாத பானை பசித்தவனுக்கு எப்படி உணவில்லாத பானை பயனாகாதோ அப்படியே இதுவும் பயணளிக்காது என்று சொன்னவர், பக்திக்கு அவசிய தேவை சத்திய வழி இதை பற்றாதவன் கோழை என்றும், சித்தமளிக்கும் வழியான வைகுண்ட வழியை நடந்தவன் (உக்கு என்றால் எஃகு என்று பொருள் படும், உக்கு செந்நொ) எஃகானவன் அதாவது வலிமையானவன் என்று சொல்கிறார்.

(உதாரணமாக மதுரை கீழவாசலுக்கருகில் “விளக்கு தூண்” பகுதிக்கு நம் சௌராஷ்டிரர்கள் “உக்கு காம்பு” என்று புழங்கி வந்தனர், பின் அது மருவி “முக்கு காம்பு” என்று வழங்கலாயினர், எஃகினால் ஆன அந்த விளக்கு தூண் என்பதையே இது குறிக்கிறது)

Thursday, August 10, 2006

நரக வேதனை தீர

நடனகோ3பால் நமம் படன கரோ ஏ
நரகு3பா3த ஸொடி3 ஜவாய் ஜவாய்-அம்ரெ
வடபத்ரார்யுனு வாட் சலேத் தென்
வைகுண்டுமு ஜெய்கிநு ர:வாய் ர:வாய்


நடன கோபல நாமத்தை பற்றிக்கொள்
நரகவேதனை உனக்கில்லை ஒத்துக்கொள் – நம்
வடபத்திரர் வழி சென்றவர்கள்
வைகுண்டம் சென்று இருந்தவர்கள்

நடனகோ3பால் நமம் படன கரோ - நடனகோபாலனின் நாமத்தை இடையறாது சொல்லுங்கள்
ஏ நரகு3பா3த ஸொடி3 ஜவாய் ஜவாய் - இந்த நரக உபாதையை விட்டுப் போகலாம் போகலாம்
அம்ரெ வடபத்ரார்யுனு வாட் சலேத் - நமது வடபத்ரார்யரின் வழியில் நடந்தால்
தென் வைகுண்டுமு ஜெய்கிநு ர:வாய் ர:வாய் - அவர்கள் வைகுண்டத்திற்குச் சென்று இருக்கலாம் இருக்கலாம்.


நரக வேதனை தீர பல வழிகள் இருந்தாலும், எப்போதும் ஒரே நிரந்தர வழி அது தன் குருநாதர் வடபத்திரர் தந்த சத்வழி என்று சொல்லும் சுவாமிகள், அவ்வழியை பற்றியவர்கள் வைகுண்டத்தை அடைந்தவர்கள் என்றும் சொல்லும் எளிய நாமாவளி இது.

Wednesday, August 09, 2006

தயவு தாட்சன்யமில்லாதவன்

3க்ஷண் நீ:ஸ்தெனொபா33தெ3க்ஷணு தெனொ---அம்ரெ
லெக்ஷணான் த3தா3கு பொ3வ்லே ஜிவ்லுவாய் (த3க்ஷண்)

தயவு தாட்சனபமில்லாதவனப்பா தெற்க்கு திசையிலிருப்பவன்–நம்
இலட்சுமணன் அண்ணனை கூப்பிட்டுக்கொள் வாழ்ந்துகொள்ளலாம்.

தெற்க்கு திசை என்பது யமனின் ஆட்சிக்குரிய திசையாகும் அத்திசையிலிருப்பவன் உன்னை அழைத்து செல்ல வரும் போது எப்படி வேண்டினாலும் உன்னை விடமாட்டான், அதற்க்கும் மருந்து உண்டு, சேவைக்கு இலக்கணமான இலக்குவனின் அண்ணன் அந்த ஸ்ரீராம சந்திரனின் நாமத்தை பற்றிக்கொள், அனுமனும் இதை பற்றி தான் இந்துமாஹா சமுத்திரத்தை கடந்து பஜ்ரங்க பலியானான், இச்சம்சாரசாகரத்தை கடக்க இதை பற்றிக்கொள். இவ்வுலகிலும் அவ்வுலகிலும் வாழ்ந்து கொள்ளலாம்.

இன்றே இப்போதே

ஒன்றே செய்க, ஒன்றும் நன்றே செய்க, நன்றும் இன்றே செய்க என்பர்.

கோவிந்த நாமத்தை சொல்ல வேண்டும், அதுவும் இன்றே செய்ய வேண்டிய அவசியத்தை சொல்கிறார் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள்.

கோ3விந்தா3 கோ3பாலா மெனி
ஹிந்தோ3ஸ் ப4ஜனெகரொ
ஸொந்தொ3 ர:நி காய்நிஜமு அமி
ஸொந்தொ3 ர:நி காய்நிஜமு


கோவிந்தா கோபால என
இன்றே பஜனை செய்வீர்
நாளை இருப்பது நிச்சயமில்லை நாம்
நாளை இருப்பது நிச்சயமில்லை.

Friday, August 04, 2006

திருவெட்டெழுத்து ஒரு இனிய பழம்

கோ3விந்த3 நமமுஸ் கு3ள்ளே பொள்ளொ
2ள்ளி க2வகா தா3ஸுன் துமி
ஜீவ் ஹெள்னா முல்லோ
அவி மூக3 மிள்னா முல்லோ


கோ3விந்த3 நமமுஸ் கு3ள்ளே பொள்ளொ
கோவிந்த நாமமான திருவெட்டெழுத்து ஒரு இனிய பழம்

அவி மூக3 மிள்னா முல்லோ
கூட்டம் கூடுவதற்க்கு முன்னரே.

2ள்ளி க2வகா தா3ஸுன் துமி
ஜீவ் ஹெள்னா முல்லோ
முடியும் மட்டும் உண்டு விடுங்கள் அடியார்வர்களே



கோவிந்த நாமமான திருவெட்டெழுத்து ஒரு இனிய பழம் கூட்டம் கூடுவதற்க்கு முன்னரே, முடியும் மட்டும் உண்டு விடுங்கள் அடியார்வர்களே. அது அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரத்தில் இருந்தாலும், நமக்கோ பிறர்க்கோ கிடக்காதோ என்று எண்ணாமல் முடிந்த வரை சங்கோஜமில்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

கோவிந்த நாமமே இனிய பழம் (உலகில் மற்ற விஷயங்கள் எல்லாம் இனிப்பவை போல் இருந்தாலும் அவை இனியவை இல்லை)எடுத்து உண்ணுங்களே அடியவர்களே நீங்கள்உயிர் எடுக்கப்படுவதன் முன்னர்(உங்கள் பூதவுடலைப் பார்ப்பதற்காக) கூட்டம் வந்து கூடுவதற்கு முன்னர்.

அவனை வணங்காதவர்கள் கதி?

கடவுள் என்பவர் எல்லோருக்கும் சமம் என்ற சொல்லும் ஒரு நாமாவளி. மனிதன் வெளுப்பாகவோ, கருப்பாகவோ பிறக்கிறான், ஆனால் எந்த விதபேதமும் இல்லாமல் அவனுள்ளும் அந்த மாயவன் இருந்து ஆட்சி செய்கிறான். அவனை வணங்காதவர்கள் எப்பாவத்திற்க்கு ஆளாகின்றனர் என்று சொல்லும் இந்த நாலுவரி நாமாவளி இதோ.

லிம்பு3 பொள்ளொ ஸொக உஜெதிகாய் களொ
ஜெம்பு பொள்ளொ ஸொக ரி:யெதிகாய் ஜெநெ
அம்ப3ன் போட் து3வ்ந கரஸ்தகஸ்நா ஹொயாஸ்
ஹரி ப4ஜன கர்நாஸ்தெநு



லிம்பு3 பொள்ளொ ஸொக உஜெதிகாய்
எலுமிச்சை பழம் போன்று மஞ்சளாக பிறந்தாலும்

களொ ஜெம்பு பொள்ளொ ஸொக ரி:யெதிகாய்
கரிய நாவல் பழம் போல் இருந்தாலும்

ஹரி ப4ஜன கர்நாஸ்தெநு
ஹரியின் பஜனை செய்யாதவன்

ஜெநெ அம்ப3ன் போட் து3வ்ந கரஸ்தகஸ்நா ஹொயாஸ்
பெற்ற தாயின் வயிறெரிய வைத்த பாவத்திற்க்கு ஆளாவான்

எலுமிச்சை பழம் போன்று மஞ்சளாக பிறந்தாலும்
கரிய நாவல் பழம் போல் இருந்தாலும் பெற்ற
ஹரியின் பஜனை செய்யாதவன்
தாயின் வயிறெரிய வைத்த பாவத்திற்க்கு ஆளாவான்.

இந்த நாமாவளியில் கருப்பு, வெளுப்பு, என்று மறைபொருளாக சொல்லும் நாயகி சுவாமிகள், மனிதன் எந்த குடியில் பிறந்தாலும் மலர்மிசை ஏகினான் தாழ் பணியவேண்டும் என்று சொல்கிறார். கங்கை கரையில் காராம் பசுவை கொண்ற பாவமும் தாயை நிந்தித்த பாவமும், தாயை கொடுமை செய்த பாவமும் தீர்க்க முடியாத பாவத்திற்க்கு ஆளாவோம் என்று இந்த நாமாவளியில் சொல்கிறார்.


அண்ணன் குமரன் அவர்கள் இதற்கான விளக்கம் அழகாக தந்திருந்தார்.

கோதையின் ஐயைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று திருப்பாவை தனியன் பாடல் சொல்வதைப் போல் சொல்கிறார் சுவாமிகள்.

மானிடராய்ப் பிறந்தவர்கள் எல்லோரும் தன் தாய் வயிற்றில் இருக்கும் போது அந்தத் தாய் எத்தனை எத்தனை வலிகளை அனுபவிக்கிறாள் என்பது தாயாய் இருந்தவர்களுக்குத் தெரியும்; இல்லை அருகிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். கருவுற்ற முதல் மூன்று மாதங்கள் எந்த உணவையும் உட்கொள்ள முடியாமல் எதனை உண்டாலும் வாயிலெடுத்துத் துன்பப்படுவார்கள். எப்போதும் களைப்புடனே இருப்பார்கள். கடைசி ஆறு மாதங்கள் வயிற்றில் உள்ள குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு புறமாகவே சாய்ந்து படுத்து நிற்க, உட்கார, படுக்க, உண்ண என்று எல்லாவிதங்களிலும் எத்தனை எத்தனை துன்பங்கள் அனுபவிக்கிறாள்.அந்தத் துன்பங்களெல்லாம் ஒன்று அனுபவித்தால் தெரியும். இல்லை அருகில் இருந்து பார்த்தால் தெரியும். இதெல்லாவற்றையும் விட பிள்ளை பிறக்கும் போது செத்துப் பிழைக்கிறாளே அந்த வலி பிள்ளை பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று சொல்லுவார்கள். பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் புரிகிலாதது அது.

சுவாமிகள் சொல்ல வருவது - ஹரி பஜனை செய்யாதவர்கள் அப்படி பெற்றத் தாய்க்கு வயிற்றில் சுமக்கும் வலியைக் கொடுக்க மட்டுமே பயன்பட்டவர்கள்; மற்ற எதற்கும் பயனில்லாதவர்கள் என்கிறார்.

எலுமிச்சம்பழம் போல் இருந்தால் தான் என்ன? கருப்பு நாவற்பழம் போல் பிறந்தால் தான் என்ன? பெற்றத் தாயின் வயிற்றில் வலியேற்படுத்தத் தானே ஆனார்கள் ஹரி பஜனை செய்யாதவர்கள்!!!

யாரை கண்டால் தூர விலக வேண்டும்?

தமது பாடல்கள் மூலம் யாரிடம் நமது உற்ற உறவு இருக்க வேண்டும் என்று சொன்னவர் யாரை கண்டால் தூர விலக வேண்டுமென்றும் சொல்லி இருக்கிறார். உனக்காக கண்ணீர் விடவில்லை என்றாலும் பரவாயில்லை, உனக்காக முதலை கண்ணீர் வடிப்பவரிடமிருந்து தள்ளி நிற்க்க வேண்டும் என்று சொல்லும் இப்பாடல் இப்பதிவில். இப்பாடலை தமது துள்ளலிசையுடன் திரு. சந்திரசேகர் பாடியுள்ளார்.

கோ3 கோ3 கோ3 தொ3ளாம்பனி க2ள்ளன் தும்ர
3திக்வாட் ஸெய்ல்வொமெனி மென்னான் (கோ3)

சொ3ட்டா3 சொ3ட்டி3ன் த்யேவேள் (கோ3)

கோட் காய் தொ2வ்ரி:யாஸ்மெனி புஸன்
கோட் க3டி3 தொ2வ்ரி:யாஸ்மெனி அஸன் (கோ3)

ஸங்கொ3மெனி லெகுத்தொ பி3ஸன்
தொங்கி3 தொங்கி3 நஸன் (கோ3)

வொங்கி3 வொங்கி3 பனி பொஸன்
ஸங்கி3 ஸங்கி3 மெனி நெஸன் (கோ3)

காஸ் ஹன்னவ் க3திமெல்லன் அம்மான்
களாநாஸ்தக்விதி3 அவேஸ்மெனி ரொள்ளன் (கோ3)

மேடின் ஜியெவாட் ஜாமென்னான்
நடனகோ3பாலுக் பாய்ம் பொண்ணான் (கோ3)


கோ3 கோ3 கோ3 தொ3ளாம்பனி க2ள்ளன் தும்ர
3திக்வாட் ஸெய்ல்வொமெனி மென்னான் (கோ3)
சும்மா சும்மா கண்ணீரை காட்டுவார் உனக்கு
என்ன வேண்டுமென்று கேட்டு வைப்பார்


சொ3ட்டா3 சொ3ட்டி3ன் த்யேவேள் (கோ3)
தீய துஷ்டர்கள் அப்போது (சும்மா)

கோட் காய் தொ2வ்ரி:யாஸ்மெனி புஸன்
கோட் க3டி3 தொ2வ்ரி:யாஸ்மெனி அஸன் (கோ3)

எங்கு என்ன இருக்கிறதென்று கேட்பார்
எங்கு எதை புதைத்தாய் என்று சிரிப்பார்


ஸங்கொ3மெனி லெகுத்தொ பி3ஸன்
தொங்கி3 தொங்கி3 நஸன் (கோ3)

சொல்ல சொல்லி அருகில் வந்தமர்வார்
தாங்கி தாங்கி ஆடுவார்

வொங்கி3 வொங்கி3 பனி பொஸன்
ஸங்கி3 ஸங்கி3 மெனி நெஸன் (கோ3)

வந்து வந்து சேவை செய்வார்
சொல்ல சொல்லி கேட்டு வைப்பார்

காஸ் ஹன்னவ் க3திமெல்லன் அம்மான்
களாநாஸ்தக்விதி3 அவேஸ்மெனி ரொள்ளன் (கோ3)

பெண்டிர் பணம் பொருள் கதி என்பர்
தெரியாத விதி வந்துவிட்டெதென அழுவர்

மேடின் ஜியெவாட் ஜாமென்னான்
நடனகோ3பாலுக் பாய்ம் பொண்ணான் (கோ3)

பெரியவர்கள் சென்ற வழியில் செல்ல மாட்டர்
நடன கோபாலனின் காலில் விழமாட்டர்

சும்மா சும்மா கண்ணீரை காட்டுவார் உனக்கு
என்ன வேண்டுமென்று கேட்டு வைப்பார் (சும்மா)

தீய துஷ்டர்கள் அப்போது (சும்மா)

எங்கு என்ன இருக்கிறதென்று கேட்பார்
எங்கு எதை புதைத்தாய் என்று சிரிப்பார் (சும்மா)

சொல்ல சொல்லி அருகில் வந்தமர்வார்
தாங்கி தாங்கி ஆடுவார் (சும்மா)

வந்து வந்து சேவை செய்வார்
சொல்ல சொல்லி கேட்டு வைப்பார் (சும்மா)

பெண்டிர் பணம் பொருள் கதி என்பர்
தெரியாத விதி வந்துவிட்டெதென அழுவர்(சும்மா)

பெரியவர்கள் சென்ற வழியில் செல்ல மாட்டர்
நடனகோபாலரின் காலில் விழமாட்டர் (சும்மா)

Thursday, August 03, 2006

யாருக்கு மோக்ஷம்?

யாருக்கு மோக்ஷம்? # 1
யாருக்கு மோக்ஷம்? # 2-4
யாருக்கு மோக்ஷம்? # 5-7

யாருக்கு மோக்ஷம்? # 8
அவி க3வி நசுநாஸ்தெக நீ: மோக்ஷு
அவி ஐகெஸ்தெக ஸே மோக்ஷு
ஸெய்ல்நாஸ்த ஸிநெஸ்தெக நீ: மோக்ஷு
ஸிவிவாட் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)


வந்து ஆடி பாடாதவனுக்கு மோக்ஷமில்லை
வந்து கேட்டவனுக்கு மோக்ஷமுண்டு
பாரமல் களைத்தவனுக்கு மோக்ஷமில்லை
பானகவழி அறிந்தவனுக்கு மோக்ஷமுண்டு

சத்சங்கதில் சேர்ந்தவன் வெறும் ஒருமுறை வந்த படியில்லாம சத்சங்க கொள்கைகளான ஹரியின் நாமத்தை பாடி, ஆடி வேண்டும், அவ்வாறு செய்யாதவன் மோக்ஷத்தின் வழியிலிருந்து திசைமாறுவதை குறிப்பதாக சொல்கிறார், அவ்வாறில்லாமல் வந்து அதற்க்காக தம்மை தயார் படுத்தி கொள்ள காது கொடுத்து கேட்டவனுக்கு மோக்ஷமுண்டு.

இறைவனை காணாமல் வேறு சிலவற்றை கண்டு களைத்தவனுக்கு மோக்ஷமில்லை,
இவ்வுலகம் ஒரு முட்கள் நிறைந்த காடு, அக்காட்டின் வழியறிந்தவனுக்கு மோக்ஷமுண்டு.

ஊசி, காற்று போன்ற நுன்னிய கருவிகள் புகாத இடத்திலும் செல்ல கூடிய இறைவழியை கண்டவனுக்கு மோக்ஷமுண்டு என்று சொல்கிறார். (“ஸிவிவாட் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு”)

கடைசி வழியாக ஊசி வழி என்று சொல்லும் சுவாமிகள், அவ்வழி அடைய இந்த எட்டாவது நிலையில் வைக்கிறார். இவ்வாறாக அடைந்த மோக்ஷ வழியை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்று அடுத்த இரு சரணங்களில் சொல்கிறார்.


யாருக்கு மோக்ஷம்? # 9

ஹரிஸ் அதா4ரஸ்கி லோகுரு
ஹரிபதா3ல் அந்தா3ய் விவேகிநுகு
ஹரிவிநா தே3வ் நீ: க்3யாநிநுகு
ஹரிஅப்3பொ3ய்கியே அக்3யாநிநுகு (மொந்நூ)

ஹரியே இவ்வுலகிற்க்கு ஆதாரம்
ஹரியின் பதாரவிந்தத்தை எட்டுமோ விவேகிக்கு?
ஹரியை தவிர வேறு தெய்வமில்லை ஞானிக்கு.
ஹரி கிடைப்பானோ அயோகிக்கு?

உலகை படைத்தவர் நான்முகன், உலகை அழிப்பவர் மஹாகாலன், இவ்விருவருக்கும் இடப்பட்ட தொழிலான காப்பதை செய்பவன் ஸ்ரீமந் நாராயணன் ஆகவே இந்த இடைத்தொழிலன் தான் இவ்வுலகிற்க்கு ஆதாரம், பெற்றல் மட்டும் போதாது அதை பேணி பாதுகாக்க தெரியவேண்டும் அவ்வாறு பாதுகாக்கும் ஹரியின் திருவடியை விவேகி நிலையில் இருந்து தேடினால் எட்டாது, கிட்டாது. அவனை தவிர வேறு தெய்வமில்லை என்ற ஞானியின் பார்வைக்கு வசப்படும் கோவிந்தன் தீய செயல்களை செய்யும் அயோகிக்கு கிடைப்பானோ?


யாருக்கு மோக்ஷம்? # 10

வடபத்ரார்யுநு வாட் தெ4ல்லே --யே
வாட்நா: மெனெஸ்தெநொ மு:டொ3 ஜல்லே
நடனகோ3பால் நமம் மெல்லே
விரஜாநெத்3தி3ஸேயே அண்ட3முஹொல்லே (மொந்நூ)


வடபத்திரர் வழியை பற்றிக்கொள்
இதை அறியாதவன் மூடன் அறிந்துகொள்
நடனகோபாலன் நாமம் சொல்லிக்கொள்
விர்ஜை நதியிலேயே இந்த அண்டம் பார்த்துக்கொள்.

இந்த மோக்ஷத்தின் வழியை தமது குருவிடமிருந்து பெற்றதை நினைவுருத்தும் சுவாமிகள், இவ்வழியை மோக்ஷவழியென்று சொல்லாதவன் மூடன், குருவின் சொல்லை கேளாமல் அதை மீண்டும் தன் சிற்றறிவை கொண்டு ஆராய்பவன் மூடனன்றி யாராக இருக்ககூடும்? அந்த பேரானந்கமான மோக்ஷத்தை தக்க வைத்துக்கொள்ள நடனகோபாலனின் பேரை சொல்லிக்கொள், வைகுண்டத்தில் ஓடும் நதியான விர்ஜை நதிமேல் தான் இவ்வுலகம் உள்ளது பார்த்துக்கொள்.

இவ்விரு சரணங்களில் மனிதனை அதே புனிதத்தில் திளைக்க செய்யும் வழிகள்.

யாருக்கு மோக்ஷம்?

யாருக்கு மோக்ஷம்? # 1
யாருக்கு மோக்ஷம்? # 2-4

யாருக்கு மோக்ஷம்? # 5
தா3ஸோ நாஸ்தெக நீ: மோக்ஷு
தா3ஸுநு தா3ஸொ யெஸ்தெக ஸே மோக்ஷு
காஸநி க33ஸ்தெக நீ: மோக்ஷு
கைங்கர்யம் கரஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

அடியாராகவனுக்கு மோக்ஷமில்லை
அடியாருக்கு அடியாரானால் மோக்ஷமுண்டு
பணத்தை புதைத்தவனுக்கு மோக்ஷமில்லை - இறை
பணி செய்தவனுக்கு மோக்ஷமுண்டு

சுவாமிகள் எப்போது தாஸனுக்கு தாஸன் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர், பல கீர்த்தனைகளில் இதை வலியுறுத்தியுள்ளார்.

அரங்கனின் அடியாராகாதவனுக்கு மோக்ஷமில்லை என்பவர் அரங்கனுக்கும் மேலாக அவன் அடியாருக்கு அடியாரானாலேயே மோக்ஷத்தை அடையலாம். தன்னிடம் உள்ள செல்வத்தை புதைப்பவனுக்கு, மறைப்பவனுக்கு மோக்ஷமில்லை, இறைபணி செய்தவனுக்கு மோக்ஷமுண்டு என்பதை நாயகி சுவாமிகள் மிக மிக எளிதாக இந்த சரணத்தில் சொல்கிறார்.

இச்சரணத்தில் மோக்ஷத்திற்க்கான ஐந்தாவது நிலை, அங்கே வரும் அடியவர்க்கு வழிகாடும் குருவும் ஒரு அடியவரே அவருக்கு அடியாராகும் பேற்றை பெறும் படி சொல்கிறார்.


யாருக்கு மோக்ஷம்? # 6
மந்துர் ஐகுநாஸ்தெக நீ: மோக்ஷு
மாத4வாஸ் தே3வ்மெந் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு
மந்துர் ஜெபுநாஸ்தெக நீ: மோக்ஷு
மந்துர் ப்ரபா4வ் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

மந்திரம் கேட்காதவனுக்கு மோக்ஷமில்லை
மாதவனே தெய்வம் என்று அறிந்தவனுக்கு மோக்ஷமுண்டு
மந்திரம் ஜபிக்காதவனுக்கு மோக்ஷமில்லை
மந்திரத்தின் சக்தியை, வீரியத்தை அறிந்தவனுக்கு மோக்ஷமுண்டு.

இந்த ஆறாவது நிலையில் அவ்வாறு அடியாருக்கு அடியாராகி பின் சில உட்செயல்களை செய்யவேண்டும். சிறுவர்களை நற்செயல்களை செய்யாத போதிலும் தீய செயல்களையாவது தவிர்க்கவேண்டும் என்று சொல்வர், தீய செயல்களை தவிர்த்த பின் சில சில நற்செயல்களை செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதற்க்கு முதல் செயல் மந்திரம் ஜபிப்பது, தன்னிடமிருந்த தீய செயல்களை நிறுத்தியவர், பின் நற்செயல்களை தம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பின் மாதவனே தெய்வமென்று அறிந்தவனாக வேண்டும், மந்திரம் ஜபிப்பதை முதலில் கேட்க வேண்டும், பின் மாதவனை உணரவேண்டும், பின் ஜபிக்க வேண்டும், பிறகு மந்திரத்தின் பொருளணர்ந்து கொள்ள வேண்டும். போருளுணர்ந்து பிறர்க்கு போதிக்க வேண்டும்.


யாருக்கு மோக்ஷம்? # 7
பர தந்தூர் ஹோநாஸ்தெக நீ: மோக்ஷு
பர தந்தூர் ஹொயெஸ்தெக ஸே: மோக்ஷு
நியாவுநு கரஸ்தெமொ நீ: மோக்ஷு
நரஹரி ப4ஜநாமூஸ் ஸே மோக்ஷு (மொந்நூ)

பரமாணந்தத்தில் ஆகாதவனுக்கு மோக்ஷமில்லை
பரமாணந்தத்தில் ஆணவனுக்கு மோக்ஷமுண்டு
வெறும் நியாயங்க செய்தவனுக்கு மோக்ஷமில்லை
சீரீய தெய்வமான ஹரியை பாடியவனுக்கு மோக்ஷமுண்டு

யாருக்கு மோக்ஷம்?

யாருக்கு மோக்ஷம்? # 1

யாருக்கு மோக்ஷம்? # 2

ஸத் கு3ருவுக் செர்னாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கர்மு கரஸ்தெக ஸே மோக்ஷு
ஸஹஸ்ர நமம் மெந்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கு3ண்ணு பொ4ரெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)


சத்குருவை சேராதவனுக்கு மோக்ஷமில்லை
சத் கர்மத்தை செய்தவனுக்கு மோக்ஷமுண்டு
சஹஸ்ர நாமத்தை சொல்லாதவனுக்கு மோக்ஷமில்லை
சத் குணங்கள் நிறைந்தவனுக்கு மோக்ஷமுண்டு

உண்மை குருவை சேர்பவனுக்கு மோக்ஷத்தை அடைய வழிகிடைத்துவிடும்,
அழியா செல்வமான, மோக்ஷம் கிடைப்பது அரிதிலும் அரிது. அப்பேற்பட்ட வழியை தரும் சத்குருவை அடைபவன் மோக்ஷத்தின் பாதிவழியை கண்டவன் ஆகிறான்.
பின் சத்கர்மாவான, ஸ்லோகங்களை சொல்வது, நித்ய கர்மாவான சூர்ய நமஸ்காரம், ப்ராணாயாமம் செய்வது, சந்தியா வந்தனம் செய்வது போன்றவை செய்பவன் மோக்ஷத்தின் வழியில் ஏற்படும் எல்லாவித தடைகளை தகர்த்தெறியும் சத்குணங்களை நிறைந்த ஆற்றலை பெறுகிறான்.

முதல் சரணத்தில் சீருடை அணிவித்தவர், இந்த சரணத்தில் வகுப்பிற்க்கு வழிசொல்கிறார்.


யாருக்கு மோக்ஷம்? # 3

ஸமாஸ்ரண கல்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸதா3சார்யு செரெஸ்தெக ஸே மோக்ஷு
யெமா த4க்குநாஸ்தெக நீ: மோக்ஷு
ஸம்ஸார் கடில்லெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

சமாஸ்சர சேவைகளை ஏற்காதவனுக்கு மோக்ஷமில்லை
சதாசர சேவைகளில் சேர்பவனுக்கு மோக்ஷமுண்டு
இம்மார்கத்தில் பயபடாதவனுக்கு மோக்ஷமில்லை
சம்சாகரத்தை அறுத்தவனுக்கு மோக்ஷமுண்டு

இச்சரணத்தில் நமது தடைகளை, இருக்கும் ஓட்டைகளை அடைகிறார்.


யாருக்கு மோக்ஷம்? # 4

அண்டு பா4த் ஜெமஸ்தெக தீ: மோக்ஷு
ஹடுல்நாஸ்தக் ஹந்த3ஸ்தெக ஸே மோக்ஷு
குண்டுவாட் சலஸ்தெக நீ:: மோக்ஷு வை
குண்டும:ட்வன் தெ2வெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

தீட்டு உணவை உண்டவனுக்கு மோக்ஷமில்லை
தீட்டென்று எண்ணாமல் சமைத்தவனுக்கு மோக்ஷமுண்டு
தவறான வழியில் செல்பவனுக்கு மோக்ஷமில்லை
தவறாத வழியில் கவனம் செலுத்தியவனுக்கு மோக்ஷமுண்டு

இச்சரணத்தில் சில ஆசாரங்களை கடைபிடிக்க சொல்கிறார், தீட்டு உணவை சாப்பிடக்கூடாது அவ்வாறு சாப்பிடுபவர்கள் இறந்தவர்களுக்கு கடமைபட்டவராகின்றனர் அவ்வாறு கடமைபட்டவர் பகவத் கடமையாற்றுவது சற்று இயலாத காரியமாகிவிடும் என்பதால் அவ்வாறு சொன்னவர், அவர்களது வீட்டில் இருப்பவர்களுக்காக உணவு தயாரித்தவர்கள் மோக்ஷத்திற்க்கு தகுதி பெற்றவராகின்றனர் என்றும் சொல்கிறார்.

தவறான வழியில் செல்லாமல், தவறாத வழியான வைகுண்டவழியை கண்டவன், கொண்டவன், மோக்ஷத்தை அடைவது இயலாத காரியமா?

இச்சரணத்தில் சில நுனுக்கமான செயல்களை (fine tune) செய்ய செய்கிறார்.

Wednesday, August 02, 2006

யாருக்கு மோக்ஷம்?

மோக்ஷம் யாருக்குரியது?
யவர்க்கு கிடைக்கும்?
யார் அதற்க்கு தகுதி பெறுவர்?

தகுதி பெற வழியென்ன என்று கேட்ட போது ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் ஒரு கீர்த்தனை பாடி அதன் பதிலாக சொன்னார். அவர் பாடிய அக்கீர்த்தனை நமக்கெல்லாம் இன்றும் நல்வழி காட்டும் ஒரு கலங்கரைவிளக்காக உள்ளது. இப்பாடலை திரு வி.என்.நாகராஜ பாகவதர் பாடியுள்ளார்.

இப்பாடலில் பல்லவியும் அனுபல்லவியும் முதலில் ஒரு மனிதனை மனிதனாக்கும் வரிகள், பின்வரும் ஒவ்வொரு சரணங்களும் மனிதனை புனிதனாக்கும் ஒவ்வொரு அடியாக கருதப்படுகிறது, முதல் சரணத்தில் மனிதனின் தோற்றத்தை மாற்ற சொல்கிறார், திருமணிட்டுக்கொள், ஆண்டவனை பாடியாடு, அவரது புகழ் பரப்பும் திருமண்ணை வீணாக்காதே என்று பல அறிவுரைகளை சொல்லும் சுவாமிகள். மோக்ஷத்தின் அடுத்த அடியாக ஸத் சங்கத்தில் இருக்கவேண்டும், சத்சங்கம் என்றால் உண்மையான சங்கம், உலகம் இருக்கும் வரை இருக்க கூடிய ஒரு சங்கம், ஒரு இயக்கம், ஒரு கூட்டு, ஒரு நட்பு என்று இருக்க வேண்டும். அவர்களுடன் இணந்து இயங்கவேண்டும். என்று சொல்லும் இரு சரணங்களையும் இப்பதிவிலும் மற்ற சரணங்களை அடுத்து வரும் பதிவுகளிலும் காண்போம்.



பல்லவி
மொந்நூ மீ ஸங்குஸைகி மோக்ஷுகுவாட் து3ர்
கு3ண்ணுந் ஸெர மிள்நா ரா:ஸ்தேஸ்வாட் (மொந்நூ)

அநுபல்லவி
புந்நு பாப்ஹாலவெ ஸெரிரநித்யம் தொர
ஜுந்ந ஹட்வனுந் ஸோட்3 ஸோட்3 ஸோட்3 ஸோட்3 (மொந்நூ)

சரணு
1. நாம் லவ்ல் நாஸ்தெங்க நீ: மோக்ஷு ஹரி
நமம்மெநி நசியாஸ்தெங்கொ ஸே மோக்ஷு
நாம் ஹாத் து4வெஸ்தெகொ நீ: மோக்ஷு
நாம்ஹோர் பி3கித் லௌநாஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

2. ஸத் கு3ருவுக் செர்னாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கர்மு கரஸ்தெக ஸே மோக்ஷு
ஸஹஸ்ர நமம் மெந்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கு3ண்ணு பொ4ரெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

3. ஸமாஸ்ரண கல்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸதா3சார்யு செரெஸ்தெக ஸே மோக்ஷு
யெமா த4க்குநாஸ்தெக நீ: மோக்ஷு
ஸம்ஸார் கடில்லெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

4. அண்டு பா4த் ஜெமஸ்தெக தீ: மோக்ஷு
ஹடுல்நாஸ்தக் ஹந்த3ஸ்தெக ஸே மோக்ஷு
குண்டுவாட் சலஸ்தெக நீ:: மோக்ஷு வை
குண்டும:ட்வன் தெ2வெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

5. தா3ஸோ நாஸ்தெக நீ: மோக்ஷு
தா3ஸுநு தா3ஸொ யெஸ்தெக ஸே மோக்ஷு
காஸநி க33ஸ்தெக நீ: மோக்ஷு
கைங்கர்யம் கரஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

6. மந்துர் ஐகுநாஸ்தெக நீ: மோக்ஷு
மாத4வாஸ் தே3வ்மெந் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு
மந்துர் ஜெபுநாஸ்தெக நீ: மோக்ஷு
மந்துர் ப்ரபா4வ் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

7. பர தந்தூர் ஹோநாஸ்தெக நீ: மோக்ஷு
பர தந்தூர் ஹொயெஸ்தெக ஸே: மோக்ஷு
நியாவுநு கரஸ்தெமொ நீ: மோக்ஷு
நரஹரி ப4ஜநாமூஸ் ஸே மோக்ஷு (மொந்நூ)

8. அவி க3வி நசுநாஸ்தெக நீ: மோக்ஷு
அவி ஐகெஸ்தெக ஸே மோக்ஷு
ஸெய்ல்நாஸ்த ஸிநெஸ்தெக நீ: மோக்ஷு
ஸிவிவாட் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

9. ஹரிஸ் அதா4ரஸ்கி லோகுரு
ஹரிபதா3ல் அந்தா3ய் விவேகிநுகு
ஹரிவிநா தே3வ் நீ: க்3யாநிநுகு
அப்3பொ3ய்கியே அக்3யாநிநுகு (மொந்நூ)

10. வடபத்ரார்யுநு வாட் தெ4ல்லே --யே
வாட்நா: மெனெஸ்தெநொ மு:டொ3 ஜல்லே
நடனகோ3பால் நமம் மெல்லே
விரஜாநெத்3தி3ஸேயே அண்ட3முஹொல்லே (மொந்நூ)

பல்லவி
மொந்நூ மீ ஸங்குஸைகி மோக்ஷுகுவாட் து3ர்
கு3ண்ணுந் ஸெர மிள்நா ரா:ஸ்தேஸ்வாட் (மொந்நூ)

மோக்ஷத்திற்க்கு என்னிடம் உள்ள வழி சொல்கிறேன் கேள் மனமே - நீச
குணங்களை அண்டவிடாமல் இருப்பதே பெருவழி

அநுபல்லவி
புந்நு பாப்ஹாலவெ ஸெரிரநித்யம் தொர
ஜுந்ந ஹட்வனுந் ஸோட்3 ஸோட்3 ஸோட்3 ஸோட்3 (மொந்நூ)

புண்ணியங்களால் வந்த இவ்வுடலநித்யம் - நீ
எண்ணிய பழையதை விடு விடு விட்டுவிடு

பாவம் செய்தாலும், புண்ணியம் செய்தாலும் மறுபடியும் இவுலகில் பிறந்து அதன் பலனை அனுபவிக்க வேண்டும், அது அல்லவையே ஆனாலும் அதை மறந்து மோக்ஷ வழிகளை பின்பற்றினால், அவை எல்லாம் தீர்ந்து பூர்த்தியாகி மோக்ஷம் என்னும் இப்பிறப்பின் முக்கிய நோக்கத்தை அடையாலாம்.

சரணு
நாம் லவ்ல் நாஸ்தெங்க நீ: மோக்ஷு ஹரி
நமம்மெநி நசியாஸ்தெங்கொ ஸே மோக்ஷு
நாம் ஹாத் து4வெஸ்தெகொ நீ: மோக்ஷு
நாம்ஹோர் பி3கித் லௌநாஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

திருமண் இடாதவனுக்கு மோக்ஷமில்லை
திருநாமத்தை சொல்லி பாடி ஆடியவர்க்கு மோக்ஷமுண்டு
திருமணிட்ட கையை கழுவியவனுக்கு மோக்ஷமில்லை
திருநீரிட்ட நெற்றியுள்ளவனுக்கு மோக்ஷமுண்டு

Tuesday, August 01, 2006

உண்மையாக இருந்தவனே!

நாயகி சுவாமிகளின் பல பாடல்களில் ஹரியையே இருவிதமாக பாடும் கலையை கையாண்டுள்ளார். அப்படி இயற்றிய அவரது ஒரு மிக எளிமையான ஒரு பாடல். இப்பாடலில் கடவுள் உண்மையாக கடந்த காலத்தில் இருந்திருக்கிறார், நிகழ்காலத்தில் இருக்கிறார், வருங்காலத்திலும் இருப்பார் என்று உறுதியாக சொல்கிறார்.

ஸெத்துகன் ரி:யெஸ்தெநொ
மொத்துகா4ம் பொடெ3ஸ்தெநொ
ரெத்தும் ஸங்கே3ஸ் தொகொ மொகொ [ஸெ]


ஸெத்துகன் ரி:யெஸ்தெநொ – உண்மையாக இருந்தவன் என்று பொருள் படும் இந்த இருபதத்தில் எல்லா அவதாரங்களும் உண்மையாக, சத்தியமாக என்று ஆணையிட்டு கூறும் படியாகவும், எல்லா (நான்கு) யுகங்களிலும் வாழ்ந்தவர், வாழ்பவர், வாழ இருப்பவர் என்றும் பொருள் பாடியாக பாடுகிறார்.

மொத்துகா4ம் பொடெ3ஸ்தெநொ – “மத்தினால் அடிபட்டவன்” என்று பொருள் பட்டாலும், கண்ணனாக வந்து வெண்ணை திருடி உண்ட போது தாயின் கையில் இருந்த வெண்ணை கடையும் மத்தினால் அடிபட்டவன் என்ற பொருளிலும் மேலும் பாற்கடலை கடைய மத்தாக பயன்பட்ட மந்திர மலை தாங்கி நின்ற கூர்ம அவதார மூர்த்தியை குறிப்பதாகவும் வருவது குறிப்படத்தக்கது.

ரெத்தும் ஸங்கே3ஸ் தொகொ மொகொ – ரதத்தில் உனக்கும் எனக்கும் (கீதையை) போதித்தவன். என்று பொருள் படும் இந்த நான்கு பதங்கள் வேறு விதமாக பார்க்கும் போது, சத்தியத்தை காக்கும் நன்பனை காக்க அவனுக்காக தம்மால் சண்டையிட முடியாத நிலையிலும் கூட, அவனக்கு சாரதியாக வந்தாவது போராட வேண்டும் என்ற பொருளிலும் சொல்லாமல் செய்து காட்டியது கண்ணனின் இந்த லீலை என்று சொல்வது போல் உள்ளது இந்த எளிமையான மூன்று வரி பாடல்.


सेत्तुकन् रि:येस्तेनो
मोत्तुघाम् पोडेस्तेनो
रेत्तुम् सङ्गॆस् तोको मोको [से]

settukan ri:yesteno
mottuGAm poDesteno
rettum sanggEs toko moko [se]

s£ttukan ri:y£st£nµ
mµttugh¡m pµ¢£st£nµ
r£ttum sa±ges tµkµ mµkµ [s£]

ஓ ரெங்கநாதா யாரை காண்பாயோ?

நாயகி சுவாமிகள் பல நாமாவளிகளை பல சமயங்களில் இயற்றியுள்ளார். ஹரியை மனமுருகி பாடுபவனுக்கு எந்த குறையுமில்லை, ஏனெனில் ஹரியே அவரது தாயாகவும் தந்தையாகவும், குருவாகவும் எல்லாமுமாகவும் இருப்பதால் என்று நாயகி சுவாமிகள் விளக்கும் ஒரு நாமவளி இப்பதிவில். எதுகை மோனைகள் விளையாடும் இப்பாடலை திரு. ராமரத்தினம் அவர்கள் பாடி இருப்பதை கேட்க இங்கே.

ஓ ரெங்க3ஸாயி தூ கொங்கஸாயி---தொக
பொங்கெக33வி பொ3வெத் தெங்கஸாயி
தெங்க உன்னகாயி தூஸ் பா3பு மாயி---தி3வ்ய
ஸெங்கு செக்குருநு ஸேவ தே3யி தே3யி
ஸெங்கோ3ஸி ரெ:ய்லோயி ஸெங்ஹொய்
தொ3ளர் ஸெய்லோயி


ஓ ரெங்க3ஸாயி - ஓ ரெங்கநாதா
தூ கொங்கஸாயி - நீ யாரை காண்பாயோ?
தொக - உன்னை
பொங்கெக33வி பொ3வெத் - மனமுருகி பாடி அழைத்தால்
தெங்கஸாயி - அவர்களை காண்பாய்.
தெங்க உன்னகாயி - அவரக்கு என்ன குறையேதும் உளதோ?
தூஸ் பா3பு மாயி - நீயே (அவருக்கு) தாய்தந்தையே
தி3வ்ய ஸெங்கு செக்குருநு - திவ்ய சங்கு சக்ரதாரியாய்
ஸேவ தே3யி தே3யி - அவர்களுக்கு காட்சி தந்து
ஸெங்கோ3ஸி - உடனிருந்து அவர்களுக்கு
ரெ:ய்லோயி ஸெங்ஹொய் - துணையும் ஆவாய்
தொ3ளர் ஸெய்லோயி - கண்ணின் மணியாய், கண்ணுக்குள் கண்ணாய் இருப்பாய்

ஓ ரெங்கநாதா, நீ யாரை காண்பாயோ? - உன்னை
மனமுருகி பாடி அழைத்தால் அவரை காண்பாய்.
அவரக்கு என்ன குறையேதும் உளதோ? நீயே (அவருக்கு) தாய்தந்தையே – திவ்ய
சங்கு சக்ரதாரியாய் அவர்களுக்கு காட்சி தந்து
கண்ணின் மணியாய், கண்ணுக்குள் கண்ணாய் வத்து, உடனிருந்து அவர்களுக்கு துணையாகி இருப்பாய்..


Nagari notation:
ऒ रेङगसायि तू कोङकसायि---तोक
पोङकेग गवि बोवेत् तेङकसायि
तेङक उननकायि तूस् बापु मायि---दिव्‌य
सेङकु चेक्‌कुरुनु सॆव दॆयि दॆयि
सेङगॊसि रे:यलॊयि सेङहोय
दोळर सेयलॊयि

English notation:
O rengagasAyi tU kongakasAyi - toka
pongakega gavi bovet tengakasAyi
tengaka unanakAyi tUs bApu mAyi---divya
sengaku cekkurunu sEva dEyi dEyi
sengagOsi rehyalOyi sengahoya
doLar seyalOyi.

Latin notation:
o r£ngagas¡yi tÀ kµngakas¡yi - tµka
pµngak£ga gavi bµv£t t£ngakas¡yi
t£ngaka unanak¡yi tÀs b¡pu m¡yi---divya
s£ngaku c£kkurunu seva deyi deyi
s£ngagosi r£hyaloyi s£ngahµya
dµ©ar s£yaloyi.

Monday, July 31, 2006

மனமே என்னை மோசம் செய்யாதே...

கண்ணினு
மொன்னுபா3ரே மொக மோஸ்கர்நகொரே தொக
புன்னவயிரே ஜு:க்கு தி3ந்நு ர:வ்வாய்ரே [மொ]

ஜானகொரே த4மி ஜானொகொரே தூ
ஸானகொரே ஸங்கே3 தா4னுகைகிரே [மொ]

ஹிப்பி3ரா:ரே மொன்னு ஹிப்பி3ரா:ரே தொகொ
கொ2ப்பி ஹல்லுநா பத3ம் ஹரி தே3யிரே [மொ]

தி3ந்நுஜேட3ரேஸ் எமாக் கு3ண்ணு கைநீ:ரே மொக
மோஸ்கரொரேஸ் தொகொ ஸெர்கநா:ரே [மொ]

வடஸேரே அம்கொ வடஸேரே அம்ரெ
வடபத்ரஸாயி ஜொவள் வடஸேரே [மொ]

கெட்டராவ்ரே தெங்க்3ள கெட்டராவ்ரே ஸ்ரீ
நடனகோ3பால நாயகி ஹொய்லுவாய்ரே [மொ]

கண்ணினு
மொன்னுபா3ரே மொக மோஸ்கர்நகொரே தொக
புன்னவயிரே ஜு:க்கு தி3ந்நு ர:வ்வாய்ரே [மொ]

மனமென்ற ஐயா என்னை மோசம் செய்யாதே, உனக்கு
புண்ணியம் கோடி, பல காலம் வாழலாம்

ஜானகொரே த4மி ஜானொகொரே தூ
ஸானகொரே ஸங்கே3 தா4னுகைகிரே [மொ]

போகாதே (என்னை விட்டு) ஓடாதே ஐயா நீ
பார்க்காதே (முறைக்காதே), சொன்னதை கேள்ளையா.

ஹிப்பி3ரா:ரே மொன்னு ஹிப்பி3ரா:ரே தொகொ
கொ2ப்பி ஹல்லுநா பத3ம் ஹரி தே3யிரே [மொ]

நில்லைய்யா மனமே நில்லப்பா, நீ
நிலைக்க செய்யும் நிலையை ஹரி தருவானைய்யா.

தி3ந்நுஜேட3ரேஸ் எமாக் கு3ண்ணு கைநீ:ரே மொக
மோஸ்கரொரேஸ் தொகொ ஸெர்கநா:ரே [மொ]

நாட்கள்கள் கழியுதையா, எமன் வேறு அறியாதவனையா, என்னை மோசம் செய்கிறாய், உனக்கு சரியில்லைய்யா.

வடஸேரே அம்கொ வடஸேரே அம்ரெ
வடபத்ரஸாயி ஜொவள் வடஸேரே [மொ]

இடம் உண்டையா நமக்கு இடம் உண்டைய்யா
நம் வடபத்திர ஸாயிடம் இடம் உண்டைய்யா.
கெட்டராவ்ரே தெங்க3 கெட்டராவ்ரே ஸ்ரீ
நடனகோ3பால நாயகி ஹொய்லுவாய்ரே [மொ]

கரையேறைய்யா அவரது கரையேறைய்யா ஸ்ரீ
நடனகோபால நாயகி(பக்தன்) ஆகலாமைய்யா.

Saturday, July 29, 2006

அடையுங்கள் அடையுங்கள்



நேற்றைய பதிவின் தொடர்ச்சி,

மிடியாரிருவினைகள் பொடியாம் மேலாமிடமேறப் படியாம்
நெடியோனடி குடியாம் நீங்கா செல்வத்துக்கடியாம்
படிவாழ்வதென அப்படி அலையாமல்
அடியார் மகிழ் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இவ்வுலக அடியார்களின் இருவினைகளும் தீர்ந்துவிடும், விண்மண் மண் அளந்த நெடியோனின் அடியார் குடியாம், குறையாத செல்வத்துக்கு அடித்தளமாம், அதன்படி தான் வாழ்கிறோம் என்று திரியாமல், அடியார்கள் கூடி மகிழும், திருவல்லிபுத்தூரதினில் சென்று ஆண்டாளின் பாதகமலங்களை பற்றி கொள்ளுங்கள்.

துன்பவினை ஓடி வரும் துணை தொண்டரருள் கிருபை நாடி வரும்
இன்பகவி பாடவரும் ஹிருதயம் ஒளிவுதயமாகும்
துன்ப சரீர போகம் இன்பமென்றடையாமல்
அன்பர்குழாம் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

துன்பவினைகள் உங்களை நோக்கி ஓடி வரும் அதை தடுக்க, அதன் பாதயிலுருந்து அகன்று தொண்டரருளை துணையாக கொண்டு விட்டால், அவனடியார்கள் கிருபை நாடி வரும், நீங்களும் பன்னெடுத்து பாடலாம், உங்கள் உள்ளத்தில் தெளிவும், ஒளியும் பிறக்கும், துன்பங்கொண்ட சரீரத்தால் போகத்தை நிலையான இன்பம் என்று இருக்காமல், அடியார் குழாத்துடன், ரெங்கமன்னர் வழும் தலமாம் திருவல்லிப்புத்தூர் தன்னில் சரணடையுங்கள்.

வித்தமதருளும் கைசேரும் விளையும் துன்பவினை தீரும்
நித்தமும் கைங்கர்யம் நேரும் நெஞ்சமதிலே வஞ்சம் தீரும்
பித்தமர் உலகுதனில் திரிந்தலையாமல்
அத்தன் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வித்தைகளை தினமும் அருளி கைகூடவைக்கும், விளைகின்ற துன்பவினைகள் தீரும், நித்தமும் பகவத் கைங்கர்யம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும், நெஞ்சத்தில் உள்ளத்தில் ஏற்படும் அழுக்கான அழுக்காறு, வஞ்சங்கள் தீர்ந்து விட செய்யும். துன்ப வினைகள் கொண்ட பித்தத்துடன் இந்த உலகில் திரியாமல், அத்தனையும் செல்வங்களும் தரும் திருவல்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள்.

வடபத்ராரியர் அருள்பெறலாம் மலராள் சந்நதிக்கே பெறலாம்
நடனகோபாலன் கிருபை பெறலாம் நாயகியார் எனும் பேர் பெறலாம்
சடலமதை நம்பி கெட்டலையாமல்
திடவில்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வடபத்ரரின் அருள்பெறலாம், மலராளாம், பூமகளின் திருஅவதாரமாம் ஆண்டாளின் சந்நதியை அடைந்தாள் அவை அனைத்தும் பெறலாம், உயிருள்ள சடலமான இவ்வுடலை நம்பி கெட்டலையாமல், உண்மையான-திடமான நம்பிக்கை தரும் திருவல்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள்.

தமிழக அரசின் சின்னத்திலும் இத்திருவல்லிபுத்தூரின் கோவிலின் கோபுரம் இடம்பெற்றிருப்பது குறிபிடத்தக்கது.

Friday, July 28, 2006

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி

ஒருமுறை நாயகி சுவாமிகளின் வரகவிதுவத்தை ஆண்டாள் நாச்சியார் கேட்க எண்ணி அவர் கனவில் தோன்றி, தம்மை திருவில்லிபுத்தூரில் தம்மை சந்திக்கும்படி வேண்டியதை அவளிட்ட கட்டளையாக பாவித்து சுவாமிகளும் உடனே அங்கே எழுந்தருளி அங்கிருந்த அரங்கனையும், ஆண்டாளையும் தரிசித்து நின்று தமது கீர்த்தனைகளால் பாடி அங்கிருந்தவர்களை பரவச படுத்தியும் தாமும் பரவசப்பட்டார். இன்றைய ஆடி பூரம் “நல்ல நாளில்” மேலும் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டும் அவர் அன்று பாடிய பாடல் இப்பதிவில். இப்பாடலை டி.எம்.எஸ்.அவர்கள் பாடியுள்ளார்.


பல்லவி
அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்
நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள் (அடையுங்கள்)


அநுபல்லவி
விடையேறும் சிவனாதி தேவர்கள் போற்றும்
நடனகோபாலனிடம் சேர்த்திடுவாள் (அடையுங்கள்)


சரணங்கள்
பவரோக அவதி தீரும் பஞ்சேந்திரியம் ஒன்றாய்ச் சேரும்
தவமாம் நல்வழி கைகூடும் தாரணியோர் வாய்புகழ் பாடும்
சவமாய் உடலம் தரைசாய்ந்திடுமுன்
புவனம்தனில் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

தாமசமாம் குணம் ஒழியும் சாகர சஞ்சலம் ஒழியும்
நேமமிகும் வழி தெரியும் நிஜமாகிய பக்தி விரியும்
பாமர வாழ்கையிலே கிடந்தலையாமல்
க்ஷேமம் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

நித்யானந்தவாழ்வு நிலை அடையாதிருப்பதே தாழ்வு
பக்திசெய்திடுவார்க்கே வாழ்வு பலநெறி நடப்பவர்கே தாழ்வு
செத்துப்போமாக்கை நித்தியமென்றிருக்காமல்
சித்திதரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

தன்னருட்காளாயிடலாம் தாஸர்களுக்குத் தாஸனாகலாம்
விண்ணவர் கிருபைக்காளாயிடலாம் வீதிகள்தோறும் பாடி ஆடலாம்
எண்ணம்பல வழிநண்ணி கெட்டலையாமல்
அண்ணல் வாழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

கேட்ட வரம்தனை அளிப்பாள் கிருபாசாகரமாய் இருப்பாள்
கூட்டங்கூட்டமாய் அழைப்பாள் கொணர்ந்து ஸமர்ப்பித்ததே வகிப்பாள்
சேட்டைவளர் ஜெகம்தனில் திரிந்தலையாமல்
ஆட்டமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இகபர வாழ்வு பலிக்கும் எண்ணமது நல்வழி நிலைக்கும்
சுகமென்மேலும் பலிக்கும் தொண்டுசெய்திடும் பக்தி வலுக்கும்
இகவாழ்வே சுகமென்றிடரடையாமல்
அகமகிழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இருவினையும் குடிவாங்கும் இகமேற் பற்பல இடர் நீங்கும்
குருவருளும் தானோங்கும் கோபாலன் திருவடி தலை தாங்கும்
வறுமைதரும் வையம் திரிந்தலையாமல்
அரி அருளாய் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

பந்தமறும் பாத்தியமாம் பரமானந்த ஹிருதயமாம்
அந்தகன் வந்தனம் செய்வான் ஹரிவந்து கொடு நெறி செய்வான்
இந்தவகிலமே சொந்தமென் றலையாமல்
அந்தமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

மிடியாரிருவினைகள் பொடியாம் மேலாமிடமேறப் படியாம்
நெடியோனடி குடியாம் நீங்கா செல்வத்துக்கடியாம்
படிவாழ்வதென அப்படி அலையாமல்
அடியார் மகிழ் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

துன்பவினை ஓடி வரும் துணை தொண்டரருள் கிருபை நாடி வரும்
இன்பகவி பாடவரும் ஹிருதயம் ஒளிவுதயமாகும்
துன்ப சரீர போகம் இன்பமென்றடையாமல்
அன்பர்குழாம் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வித்தமதருளும் கைசேரும் விளையும் துன்பவினை தீரும்
நித்தமும் கைங்கர்யம் நேரும் நெஞ்சமதிலே வஞ்சம் தீரும்
பித்தமர் உலகுதனில் திரிந்தலையாமல்
அத்தன் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வடபத்ராரியர் அருள்பெறலாம் மலராளை சந்நதிக்கே பெறலாம்
நடனகோபாலன் கிருபை பெறலாம் நாயகியார் எனும் பேர் பெறலாம்
சடலமதை நம்பி கெட்டலையாமல்
திடவில்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்
நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள் (அடையுங்கள்)


அடையுங்கள் ஸ்ரீஆண்டாளின் திருவடிகளை அடையுங்கள்.

விடையேறும் சிவனாதி தேவர்கள் போற்றும்
நடனகோபாலனிடம் சேர்த்திடுவாள் (அடையுங்கள்)


அந்த நந்தீஸர் மீது வலம் வரும் மஹாதேவன் ஈசனும் ஏனைய தேவர்களும் போற்றும், அந்த நடன கோபாலனிடம் சேர்த்திடுவாள். எனவே ஆன்றோர்களே! சான்றோர்களே! அடையுங்கள், அவளடியை அடையுங்கள். இந்த அனுபல்லவியில், மார்கழி மாத திருப்பாவை பாடினால் நடன கோபாலனிடம் சேர்ந்திடலாம் என்பதை மறைபொருளாக சொல்லியிருக்கிறார் சுவாமிகள்.

சரணங்கள்
பவரோக அவதி தீரும் பஞ்சேந்திரியம் ஒன்றாய்ச் சேரும்
தவமாம் நல்வழி கைகூடும் தாரணியோர் வாய்புகழ் பாடும்
சவமாய் உடலம் தரைசாய்ந்திடுமுன்
புவனம்தனில் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)


மாறி பிறவி எடுக்க வைக்கும் இப்பிறவி பிணிதன்னை அதிகரிக்கும் ஐந்திரியங்களும் ஒன்றாகும், பல காலம் தவம் செய்தாலும் கிட்டாத நல்வழியாம் வைகுண்ட வழி கைகூடும். உன்னை ஏசி திறிந்த உலக்கதார் வாய் உன்னை புகழ்வர், இறந்து தரை சேற்வதற்க்கு முன்னால், உலகிலிருக்கும் திருவல்லி புத்தூருக்கு சென்று ஆண்டாளை சரணனடையுங்கள்.


தாமசமாம் குணம் ஒழியும் சாகர சஞ்சலம் ஒழியும்
நேமமிகும் வழி தெரியும் நிஜமாகிய பக்தி விரியும்
பாமர வாழ்கையிலே கிடந்தலையாமல்
க்ஷேமம் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

எல்லாவற்றையும் தள்ளி போடும் தாமச குணத்தை ஒழிக்கும், சஞ்சலங்களை ஒழிக்கும், நேசம் மிகுந்து விடும், வைகுண்ட வழிதெரியும், என்றும் உண்மையான பக்தி வழி தெரியும், ஏதும் தெரியாத பாமர வாழ்வு வாழ்வதை விட, எல்லா நன்மைகளையும் அள்ளி தரும் அந்த திருவல்லிபுத்தூர்தனில் உறையும் தெய்வமான ஆண்டாளை சரணடையுங்கள்.

நித்யானந்தவாழ்வு நிலை அடையாதிருப்பதே தாழ்வு
பக்திசெய்திடுவார்க்கே வாழ்வு பலநெறி நடப்பவர்கே தாழ்வு
செத்துப்போமாக்கை நித்தியமென்றிருக்காமல்
சித்திதரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)


நித்யமும் ஆனந்த வாழ்வு தரும் நிலை அடைவதே வாழ்வு அதை அடையாமல் அடைய முயற்ச்சிக்காமல் இருப்பது வாழ்வல்ல அது தாழ்வு, என்றும் இருப்போம் என்று இருமாப்பு கொள்ளாமல் அனைத்து சித்திகளையும் தரும் திருவல்லிபுத்தூர்தனில் இருக்கும் ஆண்டாளை சரணடையுங்கள்.

தன்னருட்காளாயிடலாம் தாஸர்களுக்குத் தாஸனாகலாம்
விண்ணவர் கிருபைக்காளாயிடலாம் வீதிகள்தோறும் பாடி ஆடலாம்
எண்ணம்பல வழிநண்ணி கெட்டலையாமல்
அண்ணல் வாழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அவளை கரம் பற்றியவனின் அருளுக்கு ஆளாயிடலாம் அவனடியாருக்கு அடியாராகிடலாம், தேவர்களுக்கு ஆளாயிடலாம் வீதிகள் தோறும் ஆடி பாடிடலாம். பல வழி உண்டு என்ற எண்ணி கெட்டு அலையாமல், அண்ணலாம் திருவரங்கன் எழுந்து வந்து ஆண்டாளை கரம்பற்றிய திருவல்லிபுத்தூர்தனில் சென்றடையுங்கள்.

கேட்ட வரம்தனை அளிப்பாள் கிருபாசாகரமாய் இருப்பாள்
கூட்டங்கூட்டமாய் அழைப்பாள் கொணர்ந்து ஸமர்ப்பித்ததே வகிப்பாள்
சேட்டைவளர் ஜெகம்தனில் திரிந்தலையாமல்
ஆட்டமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

கேட்டதை வரமாக தரும் கற்பக தருவான, அன்பு கடலான இருப்பவளை வணங்க, குழுவாக, கூட்டமாக ஒன்றாக வர அழப்பவளாம், அவளை பூ,இலைகளை சமர்ப்பித்து, சூட்டி, எப்போதும் அனர்த்தங்கள் அதிகரிக்கும் இவ்வுலகம் தன்னில் அலையாமல், எப்போதும், திருவிழாகோலம் கொண்டிருக்கும் திருவல்லிபுத்தூர் தனிலிருக்கும் ஸ்ரீஆண்டாளை சரணடையுங்கள்.

இகபர வாழ்வு பலிக்கும் எண்ணமது நல்வழி நிலைக்கும்
சுகமென்மேலும் பலிக்கும் தொண்டுசெய்திடும் பக்தி வலுக்கும்
இகவாழ்வே சுகமென்றிடரடையாமல்
அகமகிழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அவ்வுலக வாழ்வு கிட்டும், எண்ணங்கள் நல்வழியில் நிலைக்கும்,
சுகம் மென் மேலும் பெருகும் கிட்டும், தொண்டு செய்ய செய்ய பக்தி வலுக்கும், அதிகரிக்கும். இவ்வுலக வாழ்வே சுகம் என்று தளர்வடையாமல், உள்ளம் மகிழ வைக்கும் திருவல்லிபுத்தூரில் உறையும் ஸ்ரீஆண்டாளை அடையுங்கள்.

இருவினையும் குடிவாங்கும் இகமேற் பற்பல இடர் நீங்கும்
குருவருளும் தானோங்கும் கோபாலன் திருவடி தலை தாங்கும்
வறுமைதரும் வையம் திரிந்தலையாமல்
அரி அருளாய் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வல்வினை, தீவினை இருவினைகளை, மறுபிறப்பை மீண்டும் மீண்டும் பற்பல முறை பிறவி எடுக்கும் இடரை நீக்கும், குருவருளையும், தான் ஆளும் கோபாலன் திருவடியை உன் தலைக்கு அளித்து, வறுமையான சிறுமை, அறியாமையை இவ்வுலகில் திரிந்தலையாமல், ஹரியின் அருளாக, அருளுடன் திருவல்லிபுத்தூருக்கு சென்றடையுங்கள்.

பந்தமறும் பாத்தியமாம் பரமானந்த ஹிருதயமாம்
அந்தகன் வந்தனம் செய்வான் ஹரிவந்து கொடு நெறி செய்வான்
இந்தவகிலமே சொந்தமென் றலையாமல்
அந்தமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

பந்தங்களை அறுக்கும் பத்தியாமாம், அந்த பரமானந்த ஹிருதயமாம், அரங்கனிடம் சேர்ப்பாள், கண்தெரியாத அந்தகனாய், அறியாமை கண்மறைக்கும் அந்தகனை ஹரி வந்து ஆட்கொள்ள இருக்கும் நீ, இந்த உலகமே உன் எல்லை என்றில்லாமல், ஆதி அந்தமில்லா ஊரான திருவல்லிபுத்தூருக்கு சென்றடையுங்கள்.

அடுத்த சரணங்கள் அடுத்த பதிவில்.

Monday, July 24, 2006

ராம பஜனை செய்வாய் மனமே


எப்போது இறைவனை வணங்கவேண்டும் என்று கேட்டதற்க்கு விழிப்பில்(ஹுடினும்), தளர்வாக இருக்கும் சமயத்தில்(பிஸினும்), நடக்கும் சமயத்திலும்(சல்னிம்), தூக்கத்திலும் (ஹோங்கும்) என்று சொன்னவர், அப்படி என்ன எல்லாம் எவ்வளவு செய்ய வேண்டும் என்றும் சொல்லும் படியாக அமைந்த பாடல், இப்பதிவில் உள்ள பாடல், இப்பாடலிலும் மனதை விளிப்பது போல் விளித்து கிடைப்பதற்கரிய நாத நாமக்ரியா ராகத்தில் பாடத்தை பாடலாக சொல்லியுள்ளார். இப்பாடலை டி.எம்.எஸ். அவர்களும் இராம ரத்தினம் அவர்களும் பாடியுள்ளனர்.


ராம்ப4ஜன காரி மொந்நு தூ

நாத3நாமக்ரியா ராகு

ஆதி3 தாளு

பல்லவி
ராம்ப4ஜன காரி மொந்நு தூ
ராம் ப4ஜன காரி


அநுபல்லவி
ராம்ப4ஜன கரேத் காம் நீ:ஸ்தகன் ரி:யெ
கா3ம்லெகுத்தவி த்யே தா2ம் தெகஹோய் [ரா]


சரணு
ஸீன் திரி ஜாய்ரே மொந்நு ஏ
ஸீன் திரி ஜாய்ரே
ஸீன் திரி ஜாய் தீ3 கான் தீ3 ஐகோ
மான்ஹோர் ஐகுநொகன் நா:ன் வேது3நும்ஸே [ரா]

ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே
ஆஸெநு ஸுட்டி ஹரி தா3ஸுனுநுக் தா3ஸொய்
ஸ்ரீநிவாஸ ஹரி கேஸவா மெநி மெநி [ரா]

து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே
து3க்கு ஸரீர் ஸுடை ஜு:க்கு ப4க்தி ஹுடை
உக்குக்கா2ம்பு3மவெ சொக்கட் நரஸிம்ஹ [ரா]

ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே ஸங்கி3மொந்
ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே
ஸெங்க்3 ஹரிவிந நீ: ரெங்க3நாத2 ஹரி
கொங்கி3டி3 ரெ:ய்லி லோக்
பொ4ங்க3 பி2ரள்ளேத் ரி:யேஸ் [ரா]

நித்தவாடும் சாலி மொந்நு தூ
நித்தவாடும் சாலி
நித்தவாடும் சலெத் பி4த்தர் ரி:யே ஹரி
வத்த கரஸ்தக அத்த யெதூ3ரவை [ரா]

வாடு ஸங்கு3ஸ் ஐகி மொந்நு தொகொ
வாடு ஸங்கு3ஸ் ஐகி
வாடும் சொக்கட்வா டேடு உநிஸியேத்
தீ4டு விஸிஷ்டா த்3வைதம் ஹொயெ வாடுஸ் [ரா]

தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ மொந்நு தொர்
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ பு3ள்ளிபீ2 ர:ட்வநு
மொந்நு தொ2வி லங்கா ஹ§ந்நொகரெ ஸீதா [ரா]

வடபத்ரார்யுநுக் ஸாரே மொந்நு தூ அம்ரெ
வடபத்ரார்யுநுக் ஸாரே
வடபத்ரார்யுநுக் ஸா நடனகோ3பால் தொக
கெடொ ஹிங்க3டி3 ஸொடை3 ஹுடுநா ப4க்தி ஹுடை[ரா]



பல்லவி
ராம்ப4ஜன காரி மொந்நு தூ
ராம் ப4ஜன காரி


ஆஞ்சனேயர் செய்த ராம பஜனைபோல் நீயும் ராம பஜனை செய்வாய் மனமே.

அநுபல்லவி
ராம்ப4ஜன கரேத் காம் நீ:ஸ்தகன் ரி:யெ
கா3ம்லெகுத்தவி த்யே தா2ம் தெகஹோய் [ரா]

ராம் பஜன செய்தால் உன்பொருப்புகள் எல்லாம் தீர்ந்து, உனக்கு தேவலோக இடமட்டுமல்லாமல், பரமபதமும் கிடைக்கும்.

சரணு
ஸீன் திரி ஜாய்ரே மொந்நு ஏ
ஸீன் திரி ஜாய்ரே
ஸீன் திரி ஜாய் தீ3 கான் தீ3 ஐகோ
மான்ஹோர் ஐகுநொகன் நா:ன் வேது3நும்ஸே [ரா]

வலி தீர்ந்து போகும் மனமே இந்த வலிதீர்ந்து விடும்
வலி தீர்ந்து போகும் இரு காது கொடுத்து கேட்பாய்
காற்று வாக்கில் கேட்காதே, இவை அனைத்தும் வேதத்தில் சொல்லப்பட்டது, வேதத்தில் இருப்பது, இராம பஜனை செய்வாய்.

ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே
ஆஸெநு ஸுட்டி ஹரி தா3ஸுனுநுக் தா3ஸொய்
ஸ்ரீநிவாஸ ஹரி கேஸவா மெநி மெநி [ரா]

ஆசைகள் தீர்ந்து போகும் மனமே இந்த
ஆசைகள் தீர்ந்து போகும்
ஆசைகள் தீர்ந்து போகும் ஹரியின் அடியாருக்கு அடியாராகி
ஸ்ரீநிவாச, ஹரி கேஸவா என்று ராம பஜனை செய்வாய்

து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே
து3க்கு ஸரீர் ஸுடை ஜு:க்கு ப4க்தி ஹுடை
உக்குக்கா2ம்பு3மவெ சொக்கட் நரஸிம்ஹ [ரா]

(சுக)துக்கங்கள் உடலை விட்டு தீர்ந்து விடும் மனமே இந்த
துக்கங்கள் உடலை விட்டு தீர்ந்து விடும்
துக்கங்கள் உடலை விட்டு நிறம்ப பக்தி கிளம்பும்
எஃகு தூணிலிருந்து வந்த நல்ல நரசிம்மனை எண்ணி இராம பஜனை செய்வாய்.

ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே ஸங்கி3மொந்
ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே
ஸெங்க்3 ஹரிவிந நீ: ரெங்க3நாத2 ஹரி
கொங்கி3டி3 ரெ:ய்லி லோக் பொ4ங்க3 பி2ரள்ளேத் ரி:யேஸ் [ரா]

துணையே ஹரியன்றி யாருள்ளார் சொல்வாய் மனமே
துணையே ஹரியன்றி யாருள்ளார்
துணையே ஹரியன்றி யாருமில்லை, திருவரங்கன் ஹரியே
எல்லாமுமாக இருந்து உலக பம்பரத்தை இயக்கும் இராமனை பஜனை செய்வாய்.

நித்தவாடும் சாலி மொந்நு தூ
நித்தவாடும் சாலி
நித்தவாடும் சலெத் பி4த்தர் ரி:யே ஹரி
வத்த கரஸ்தக அத்த யெதூ3ரவை [ரா]

நேர்வழியில் நடப்பாய் மனமே நீ
நேர்வழியில் நடப்பாய்
நேர்வழியில் நடந்து உனுள்ளே இருக்கும் ஹரி
பேசுவதற்க்கு அப்போதே முன்வருவான் எனவே மனமே இராம பஜனை செய்வாய்.

வாடு ஸங்கு3ஸ் ஐகி மொந்நு தொகொ
வாடு ஸங்கு3ஸ் ஐகி
வாடும் சொக்கட்வா டேடு உநிஸியேத்
தீ4டு விஸிஷ்டா த்3வைதம் ஹொயெ வாடுஸ் [ரா]

வழிசொல்கிறேன் கேள் மனமே உனக்கு
வழிசொல்கிறேன் கேள்
இங்கே இருக்கும் வழியில் மிக சிறந்த வழி
திடமான விஸிஷ்டா த்வைதம் கொண்ட வழியே எனவே இராம பஜனை செய்வாய் மனமே.


தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ மொந்நு தொர்
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ பு3ள்ளிபீ2 ர:ட்வநு
மொந்நு தொ2வி லங்கா ஹுந்நொகரெ ஸீதா [ரா]

சிலர் இன்று நாளை என்று நாட்களை கடத்துவர் அவர்களை கண்டு
நாட்களை கடத்த கூடாது மனமே உன்
நாட்களை கடத்த கூடாது
நாட்களை கடத்தாமல் இப்போதே மனமே இராம பஜனை செய்வாய்
இலங்கைக்கு தீ வைத்து சீதையை கண்டவனை (அனுமனை) போல் மனதை வைத்து, ஸ்ரீ இராம பஜனை செய்வாய்.


வடபத்ரார்யுநுக் ஸாரே மொந்நு தூ அம்ரெ
வடபத்ரார்யுநுக் ஸாரே
வடபத்ரார்யுநுக் ஸா நடனகோ3பால் தொக
கெடொ ஹிங்க3டி3 ஸொடை3 ஹுடுநா ப4க்தி ஹுடை[ரா]

வடபத்ராரியரை பாரப்பா மனமே நீ நம்
வடபத்ராரியரை பாரப்பா
வடபத்ராரியரை பார் நாராயணன் உன்னை
பிறவி கடலில்லிருந்து உன்னை கரையேற்றுவான், எழும்பாத பக்தி எழும்பும் எனவே இராம பஜனை செய்வாய்.

Wednesday, July 19, 2006

எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா - 3

ரஜொ ஹா மொர பா3பு
அம்பொ3 அம்பொ3 (ரஜொ)
மீ ரஜொ ஹா மொரபெ3டொ
ராஜ்ஜலன் ஜாஸ்ஹா தெகொ3ஹால் [நொ]


எந்தந்தையோ ஸ்ரீராங்கார்யர், என்றால் ஸ்ரீரங்கத்திற்க்கே அரசன் என்று பொருள், ஆனால் அப்பதவி பறிபோய் அப்பெயர் என் மகனக்கு சூட்டி அவனை அரசனாக்க வேண்டி வரும். (தமது தந்தையின் பெயரை, தன் மகனுக்கு சுட்டுவது குடும்ப வழக்கம்) ஆகவே எனக்கு திருமணம் வேண்டாம். (இப்போது அவரது தாய் சற்றே யோசிக்க ஆரம்பிக்கிறார், அதை கண்ட சுவாமிகள் சந்தோஷத்துடன் தொடர்ந்தார்)

காய் ஜிவ்னம் ஜிவ்ன ஹோய்கி
அம்பொ3 அம்பொ3 (காய்)
சொக்கட் கைங்கர்யமு வாடு
கர்னாதிஸொ ஹொய்யாய் [நொ]

மாயையின் விளக்கம் கேட்ட தேவ முனிவரான நாரதரையே ஒரு வழிசெய்துவிட்ட இல்வாழ்க்கை, என்னை என்ன பாடு படுத்துமோ, என்ன வாழ்க்கை வாழவேண்டிவருமோ, நல்வழியான பகவத் சேவை செய்ய வழி இல்லாமலாகிவிடும். எனவே இதை தடுக்கும் திருமணம் எனக்கு வேண்டாம்.

ஸொம்மு ஸொமந்து3 மைலைவோ
அம்பொ3 அம்பொ3 (ஸொம்மு)
மீ ஸொம்புஹோர்ஜிவ்னம் கரெதி
ஸொந்தோஷ் ஹோர் வத்தான் கரை [நொ]

நகை, பணம், என்று உன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் நல்ல வார்த்தை சொல்லியோ, அதட்டியோ தான் அடைந்து விடுவாள், நான் மேலும் சில சந்தோஷ வாழ்க்கையை வாழவேண்டும் என்று மேலும் சில வார்த்தைகளை சொல்வாள், என்னை மற்றவரிடமிருந்து பிறிப்பாள், தனக்கே உரியவளாக்கி கொள்வாள். என்னை மற்றவரிடமும், நான் வணங்கும் கோவிந்தனிடமிருந்து பிறிக்கும் சடங்கான திருமணம் எனக்கு வேண்டாம் அம்மா.

மாய் பா3பு வத்தொ ஹெடை3யாய்
அம்பொ3 அம்பொ3 (மாய்)
லோகுர் மாயாம் ஸம்டில்லி தோணும்
மத்தி தைலுவையாய் [நொ]

தாய் தந்தையிரின் பேச்சை கேட்டு கேளாதவனாகி விடுவேன் அம்மா, நாரதன் அகப்பட்ட குழந்தை, மனைவி என்ற பந்தத்தில் அகப்பட்டு என் வாயில் நானே மண்ணிட்டு கொண்டது போலாகிவிடும். எனவே மாயையில் அகப்பட வைக்கும் திருமண பந்தம் எனக்கு வேண்டாம்.

2ல்சொ சலஸ்தெ காய் தெ3க்யாஸ்வோ
அம்பொ3 அம்பொ3 (ப2ல்ஸொ)
அத்தொ சொக்கட் க3தி பஜெமெனி
சொக்கட் வாடும் சல்லேத் ரீ:ரேஸ் [நொ]

அம்மா, பின்னர் என்ன நடக்க போவதை யாரறிவார், ஆனால் இப்போது நான் நல்வழியானை கோவிந்தனை பற்றி, நல் வழியில் நடந்து வருகிறேன். அது போதும், அப்படி நல்வழியிலிருந்து பிறழவைக்கும் திருமணம் என்ற சடங்கு எனக்கு வேண்டாம்.

செடனான் ஹொடை3 ஹொராட்3 ஹால்
அம்பொ3 அம்பொ3 (செடனான்)
ஸ்ரீ நடனகோ3பாலுக் நொம்மேத்
செடனானஸ்கி கடை ஜாய் [நொ]

இராமாயண, மஹாபாரத சண்டைகள் முதல் எல்ல சண்டை, சச்சரவுகளும் திருமணத்தால் தான் வந்தது, வளர்ந்தது அப்பேற்ப்பட்ட சண்டைகளால் நான் வணங்கும் இராமனும், கிருஷ்ணரும் இருந்துள்ளனர், அவர்களது அருளால் தான் அதுவும் தீர்ந்தது, எனவே அம்மா, அவர்களை நம்பி, இருக்கும் சண்டைகளை தீர்ப்பான். எனவே எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா.

எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா - 2

தொகொ3 மொகொ3 ஜு:க்கு விரோத் ஹோய்
ஹோய் அம்பொ3 (தொகொ)
தூ கிக்கராக் அல்லியேத் மொள்ளொ
நெக்கித்க மொகொ3 லைனாஜாய் [நொ]

தற்போது அம்மா நீ ஒரு சிறிய சுடு சொல் சொன்னாலும் நான் பயந்து விடுகிறேன், அதை எப்படியாவது தீர்க்க எண்ணுகிறேன் ஆனால் அம்மா எனக்கு திருமணம் என்ற சடங்கு நடந்து விட்டால், உனக்கும் எனக்கும் விரோதம் வளர்ந்திடும், பிறகு நீ எப்பேற்பட்ட கோபம் கொண்டாலும் அதை தவிற்க்கும், தீர்க்கும் வழி தேடாமல் இருந்து, அதுவே வழக்கமாகி விடும் அம்மா. எனவே அப்பேற்பட்ட சடங்கு எனக்கு வேண்டாம்.


பாபினு ஸெர மிளையாய்
அம்பொ3 அம்பொ3 (பாபி)
தூ ஸாபன தே3ஸ்திஸொ ஹொய்யாய்
சொக்கட் கெ3தி மொகொ3 ந்ஹீஜாய் [நொ]

பாவிகள் என்று எவரை சொல்வேன், அப்பாவி என்று எவரை எண்ணுவது என்று எல்லாம் நூறு ஆசிரியர்களுக்கு ஒப்பான தாயவள் நீ சொல்லி தானே உணர்ந்தேன். நீயே சில காலத்திற்க்கு பிறகு என்னுடைய மனைவியையும் அவளது குடும்பத்தையும் “பாவி” என்று சபிப்பாய், அப்பாவத்திற்க்கு நானும் ஆளாகிவிடுவேன், அவளை சபித்தாலும் என்னை சபித்தாலும் இரண்டும் ஒன்று தானே. தாயின் சாபத்திற்க்கு ஆளானால் நல்ல கதி எப்படி ஏற்படும், அதை தான் இப்போது நான் சொல்கிறேன். எனவே அம்மா எனக்கு திருமணம் வேண்டாம்.


அவஸ்தெ நொவ்ரி கோன்கா3தெனொகி
அம்பொ3 அம்பொ3 (அவஸ்தெ)
மீ கரஸ்தெ காம் ஹந்நௌ அஸ்கி
தெகோ3ஸ் தெ3னோகி காய்கி [நொ]

வரக்கூடிய மனைவியானவள் எப்பேற்பட்டவளோ, நான் வேலை செய்து சம்பாதிக்கும் பணம், பொருள் எல்லாம் அவளுக்கே தரவேண்டுமோ என்னவோ. பிறகு உன்னை பரிபாலிப்பார் யாரிருக்கிறார்கள். உன்னை காக்கும் கடமையிலிருந்து தவறிவிடுவேன். (காம் – வேலை, ஹந்நௌ – பணம், பொருள்)

பை3லு வத்தொ கான் ஹுகுடா3ய்
அம்பொ3 அம்பொ3 (பை3லு)
லோகுர் ஸெய்லே தொர் வத்தானுகு
அஸ்கோ கான் ஜ:க3ய்யாய்வோ [நொ]

மனைவியின் சொல்லுக்கு செவிசாய்க்க வேண்டிவரும், இந்த உலகத்தார், சுற்றத்தார் மற்றும் உன்பேச்சுகளை கேட்டும் கேட்காத செவிடன் ஆகிவிடுவேன். அம்மா எனவே எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா.

ஹொராட் மெனஸ்தே வத்தஸோட்
அம்பொ3 அம்பொ3 (ஹொராட்)
தொகொ34ராட் ஸொடி3 வெடி3க்
ஸாஸ்திஸொ ஹொய்யாய் தெகொ3ஹால் [நொ]

திருமணம் என்ற பேச்சை இத்தோடு விட்டு விடு அம்மா. உன்னை மறந்து, வீட்டை துறந்து வேடிக்கை பார்க்க வேண்டி வரும் அம்மா,

இப்படியெல்லாம் சில சாக்குகளை சொல்லி தன் தாயை சமாதான படுத்த முயல்கிறார், ஆனால் தாயோ, அதை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், பொருத்துக்கொள்கிறேன், திருமணம் செய்து கொள் என்று மேலும் வற்புறுத்த, அப்போது தமது பக்கம் இருக்கும் மேலும் சிலவற்றை சரணங்களாக பாடுகிறார் அவற்றை அடுத்த பதிவில்...

Tuesday, July 18, 2006

எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா - 1

ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் தாயார், சுவாமிகளின் திருமண வயது காலத்தில் திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தி வந்தார். அதை தவிர்க்கும் விதத்திலும், தன் தாயாரை சமாதானம் செய்யும் விதத்திலும் ஸஹாநா ராகத்தில் “அம்மா எனக்கு திருமணம் வேண்டாம்” என்று சௌராஷ்ட்ர மொழியில் பாடலை பாடி, திருமணம் செய்வதால் தமக்கு வரும், வரவிருக்கும் பிரச்சனைகளையும் அப்பாடலில் தாயாருக்கு விளக்கினார்.

இந்த பாடல் சுவாமிகளின் 300க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் சௌராஷ்ட்ர மொழி பாடல்களில் என்னுடைய விருப்பப் பாடலாகும்.


பல்லவி
நொக்கொ அம்பொ3 மொகொ3 ஹொராடு3
அம்பொ3 அம்பொ3


அநுபல்லவி
தொகொ பு4க்கொ தைனாஸ்தக் மீ பா4த்
4ல்லேத் ர்ஹியெஸ்தெ நஜ்ஜாய் [நொ]


சரணு
தோண்போ4ர் அம்பொ3 மென் பொவரேஸ்
அம்பொ3 அம்பொ3 (தோண்)
ஏ தோணூஸ் தொகொ3 தூ3ஷண கரை
தூ ஸங்கு3னொகொ மொகொ [நொ]


நொக்கொ அம்பொ3 மொகொ3 ஹொராடு3
அம்பொ3 அம்பொ3

அம்மா! அம்மா! வேண்டாம் அம்மா எனக்கு திருமணம்

தொகொ பு4க்கொ தைனாஸ்தக் மீ பா4த்
4ல்லேத் ர்ஹியெஸ்தெ நஜ்ஜாய் [நொ]

திருமணம் செய்து இன்னொருத்தியிடம் என் உணவிற்க்காக நானே தவமிருக்க வேண்டியிருக்கும் அப்போது உன் பசி பற்றி நினைவில் இருக்காது, ஆகவே இப்போது உன்னை பட்டினி போடாமல் நான் உணவூட்டி வருவது கெட்டு விடும். எனவே, அம்மா எனக்கு திருமணம் என்ற பந்தம் வேண்டாம்.


தோண்போ4ர் அம்பொ3 மென் பொவரேஸ்
அம்பொ3 அம்பொ3 (தோண்)
ஏ தோணூஸ் தொகொ3 தூ3ஷண கரை
தூ ஸங்கு3னொகொ மொகொ [நொ]

அம்மா! அம்மா! அந்த கோகுல கண்ணன் தன் தாய் யசோதையை “அம்மா” என்று அழைத்தானே அதே போல் நானும் உன்னை வாய் நிறைய “அம்மா” என்றழைக்கிறேன். இதேவாய் உன்னை நிந்திக்கும்படியாகிவிடும். என்னை திருமணத்திற்க்கு வற்புறுத்தாதே அம்மா.


அடுத்த சரணங்கள் அடுத்த பதிவில்.

***

அன்னையை நிந்தித்தப் பாவமும் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவமும் எந்த விதப் பரிகாரமும் இல்லாத பாவங்கள் என்று படித்தது இந்த முதல் சரணத்தைப் படிக்கும் போது நினைவிற்கு வருகிறது.

Monday, July 17, 2006

அங்கும் இங்கும் இருப்பவனே ...

“ஹேமா பிரியா” அவர்கள் தமது பின்னூட்டத்திலும், தனி மடலிலும் ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் சில பாடல்களை பதிக்கும்படியும், அண்ணன் குமரன் அவர்கள் சிறிய நாமவளிகளை இடும்படியும் கேட்டிருந்தனர் “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பார்களே! இப்போதும் அதே போல் தான் இங்கும். பிரியா அவர்கள் கேட்ட “யேலா தேலா கோபாலா” என்ற நாமாவளியை இப்பதிவில் இடுகிறேன்.

மாய கண்ணனை கணவனாக வரித்து “நாயகி பாவத்தில்” பக்தி செய்து வந்த ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் கண்ணனை குழந்தையாகவும், தன்னை காக்கும் அரசனாகவும்(உடையவனாக) பார்க்கும் ஒரு பாடல், இந்த நாலு வரி நாமாவளிப் பாடல் எளிமையாகவும், இனிமையிலும் இனிமையாக இருப்பதும் மேலும் சிறப்பு.

யேலா தேலா கோ3பாலா
ஜாலமு கர்நகொ கோ3பாலா
ஜிலபி தெ3வுஸ் கோ3பாலா
பாலி மொகொ கோ3பாலா


யேலா தேலா கோ3பால – பல அர்த்தங்களை கொண்ட இந்த முதல் இருவார்த்தைகள். இங்கும் அங்கும் நிறைந்தவனே கோவிந்தனே, கோபாலனே, இங்கும் அங்கும் உள்ளவனே கோவிந்தனே, கோபாலனே, இங்கும் அங்கும் என்றில்லாமல் எங்கும் இருப்பவனே கோவிந்தனே, கோபாலனே, என் நினைவும் இங்கும், அங்கும் உன்னை தேடும் கோவிந்தனே, கோபாலனே என்றும் மேலும் பலவாறும் கொள்ளலாம்.

ஜாலமு கர்நகொ கோ3பாலா
உன்மாய விளையாட்டுக்களை என்னிடம் காட்டாதே கண்ணா, உன்னையே கதியென்று இருப்பவர்களிடம் மாயாஜாலத்தை காட்டினால் அவர்கள் என்ன செய்வர். தயவு செய்து உன்ஜாலத்தை காட்டாதே.

ஜிலபி தெ3வுஸ் கோ3பாலா
உனக்கு விருப்பமான இனிப்பான ஜாங்கிரியை தருகிறேன், உன்னை மகிழ்விக்கிறேன், உன்னை குழந்தையாக பாவித்து ஆராதிக்கிறேன், உனக்கு நைவேத்தியம் செய்கிறேன். (ஜிலபி – ஜாங்கிரி)

பாலி மொகொ கோ3பாலா
என்னையும் உன் அடியவர்களையும் ஏனைய எல்லோரையும் ஒரே இனமாக பாவிக்கும் கண்ணா, என்னையும் ஏனைய பிறரையும், அனைவரையும் உடையவனாக, அரசனாக பாலித்து காப்பாய்.

இப்பாடலை என்னுடைய அம்மா தன் திருமணத்திற்க்கு முன்பு பாடியதாகவும் திருமணத்திற்க்கு பிறகு இப்பாடலையும் மேலும் ஒருசில நாயகி சுவாமிகளின் பாடல்களையும் பாடுவதில்லை என்று சொல்வார். ஏனென்று நீங்கள் எண்ணுவது எனக்கும் புரிகிறது, என்னுடைய அப்பாவின் பெயர் “கோபால் ராம்”.

Thursday, July 13, 2006

இறைவனின் உண்மை தொண்டர்

ஒரு இறைவனின் உண்மை தாஸர், உண்மை தொண்டர், எவ்வாறு இருப்பார் அவரது அங்க அடையாளங்கள் என்ன என்ன? என்பதையும், அவர் எதை, எங்கு, யாரிடம், என்ன சொல்வார் என்று தன்னுடைய நடையில் நாயகி சுவாமிகள் சொல்லியுள்ளார். இந்த பாடல் ஆதி சங்கரர் இயற்றிய பஜகோவிந்தத்தில் வரும் 22வது பாடலை ஞாபக படுத்துகிறது. கலியுகத்தில் வாழ்ந்த நடனகோபல நாயகி ஸ்வாமிகளும் அதே கருத்தை சொல்லியுள்ளதும் ஒத்த கருத்துள்ளது, காலம் சுழன்றாலும் தாஸனின் அடையாளங்கள் மாறாமல் இருப்பது வியப்பலும், வியப்பானது.


இந்த பாடலை நானும், என்னுடைய அண்ணனும் பல முறை வீட்டிலும், ஒருமுறை அழகர் கோவிலிலும் பாடியுள்ளோம் (எல்லாம் கேள்வி ஞானம் தான்). கணிணிவகையை சேர்ந்த இப்பாடல் அனுபல்லவி, பல்லவி என்று இல்லாமல், வேகமாக பாடும் படியாக இருக்கும்.


இந்த பாடலை ‘அயி கிரி நந்தினி’ மெட்டில் பாட அருமையாக இருக்கும். அதே ராகத்தில் இப்பாடலை திரு. ராமரத்தினம் அவர்கள் தன்னுடைய சங்கீத குரலில் பாடியுள்ளார்.


ஹரிக் க3வி நசி பொ3வி ஆனந்து3ம்
பு3டெ3ஸ்தேஸ் ஆங்கு3 விஸ்ரை பொட3யி
கு3ரு சரணுகு த்4யான் கரொயி
ரொட3யி அஸயி கோ3ரா:ய் பாய்ம்பொட3யி


பிஸ தெ4ரெஸ்தெந ஸொக பி3ஸயி
4மயி கொங்கிடி3 பி2ரிஸெய் பொ3வயி
பிஸலோக் மென்க்யான்ஸெர தெ3ஸி
தெ3ஸ§நாஸ்தக ரெ:ய் ஹரிக் க3வயி


தி3க்குனுஸாய் தே3வ் அவயிமெநி
தெ3க்குநாஸ்தெனொ ஹொய் பொ3வயி
சொக்கட் ஏ மெனிகு ஜெலும்மென் ஸங்கி3 கொங்கிக்
சொக்கட் வாடும் பி2ர்வொயி


வடதேட் மொகொ ஸேமென் ஜனெஸ்தெந ஹொய்
வாடும் யேடும் சல்லேது ரா:யி
கெடொ ஹிங்¢கு3லுவாய் அவொமெநி பொ3வி
கேஸவ ஸொகொ க்ருப ஸாயி ஸாயி


நடனகோ3பால் நமம் படன கர்லுவோ மெநி
படனகர் தே3யி தே3யி
வடபத்ரார்யுநு வாடும் சலஸ்தென்
வைகுண்டுகு ஜாயி ஜாயி (ஹரி க3வி)




ஹரிக் க3வி நசி பொ3வி ஆனந்து3ம் - ஹரியையே எப்போதும் (பாடியும்) ஆடியும், அழைத்தும், ஆனந்தித்திருப்பார்.


பு3டெ3ஸ்தேஸ் ஆங்கு3 விஸ்ரை பொட3யி - அந்த ஆனந்தத்தில் குளித்திருப்பார் (திளைத்திருப்பார்), உடலையும் மறந்திருப்பார், மறந்து விடுவார்.


கு3ரு சரணுகு த்4யான் கரொயி - குருவின் பாத சரணங்களை தியானிப்பார்


ரொட3யி அஸயி கோ3ரா:ய் பாய்ம்பொட3யி - (ஒரு காரணமில்லாமல்) அழுவார், சிரிப்பார், தனித்திருப்பார், (எங்கோ நோக்கி) வணங்குவார்.


பிஸ தெ4ரெஸ்தெந ஸொக பி3ஸயி -

பித்து பிடித்தவர் போல் (எங்கும்) அமர்வார்.


4மயி கொங்கிடி3 பி2ரிஸெய் பொ3வயி - (அடுத்த விணாடியே) ஓடுவார், திரும்பி எங்கோ நோக்கி அழைப்பான்


பிஸலோக் மென்க்யான்ஸெர தெ3ஸி

தெ3ஸுநாஸ்தக ரெ:ய் ஹரிக் க3வயி


பித்து பிடித்தவர் போல் தெரிந்தாலும் அவர்களிடமிருந்து ஒட்டி ஒட்டாமல் (தனியாக) தெரிவார். ஹரியை பாடுவார் (பைத்தியக்கார உலக மக்களுடன் ஒட்டியும் ஒட்டாமல் இருந்து ஹரியைப் பாடுவார்.)

தி3க்குனுஸாய் தே3வ் அவயிமெநி - திக்குகளை நோக்கி பரமன் வருவார் என்று


தெ3க்குநாஸ்தெனொ ஹொய் பொ3வயி - காணாதவன் போலாகி அழைப்பார்.


சொக்கட் ஏ மெனிகு ஜெலும்மென் ஸங்கி3 - இந்த மனித ஜென்மம் நல்லதே என்று சொல்லியும்


கொங்கிக் சொக்கட் வாடும் பி2ர்வொயி - யாவரையும் அந்த நல்ல வழியில் திருப்புவார்


வடதேட் மொகொ ஸேமென் ஜனெஸ்தெந ஹொய் - எனக்கு அங்கே (பரமபதத்தில்) இடம்முண்டு என்று தெரிந்திருப்பார்


வாடும் யேடும் சல்லேது ரா:யி - வழியிலும், (அங்கும்) இங்கும் நடந்த படியிருப்பார்.


கெடொ ஹிங்¢கு3லுவாய் அவொமெநி பொ3வி - கடைத்தேற்றிகொள்ளலாம் வாருங்கள் என்று அழைத்து


கேஸவ ஸொகொ க்ருப ஸாயி ஸாயி - கேஸவனின் நற்கிருபையை அருளை பார்பார்


நடனகோ3பால் நமம் படன கர்லுவோ மெநி - நடன கோபாலனின் திருநாமத்தை மனனம் செய்து கொள்க என்று


படனகர் தே3யி தே3யி - பாடங்களை(தீக்ஷை) தருவார்.


வடபத்ரார்யுநு வாடும் சலஸ்தென் - வடபத்ராரியர் வழியில் நடந்து


வைகுண்டுகு ஜாயி ஜாயி - வைகுண்டத்ற்க்கு செல்வார் (வைகுண்டத்தை அடைவார்).


ஹரியையே எப்போதும் (பாடியும்) ஆடியும், அழைத்தும், ஆனந்தித்திருப்பார்.

அந்த ஆனந்தத்தில் குளித்திருப்பார் (திளைத்திருப்பார்), உடலையும் மறந்திருப்பார், மறந்து விடுவார்.

குருவின் பாத சரணங்களை தியானிப்பார்

(ஒரு காரணமில்லாமல்) அழுவார், சிரிப்பார், தனித்திருப்பார், (எங்கோ நோக்கி) வணங்குவார்.


பித்து பிடித்தவர் போல் (எங்கும்) அமர்வார்.

(அடுத்த விணாடியே) ஓடுவார், திரும்பி எங்கோ நோக்கி அழைப்பான்

பித்து பிடித்தவர் போல் தெரிந்தாலும் அவர்களிடமிருந்து ஒட்டி ஒட்டாமல் (தனியாக) தெரிவார். ஹரியை பாடுவார்


திக்குகளை நோக்கி பரமன் வருவார் என்றவர்

காணாதவன் போலாகி அழைப்பார்.

இந்த மனித ஜென்மம் நல்லதே என்று சொல்லியும்

யாவரையும் அந்த நல்வழியில் திருப்புவார்.


எனக்கு அங்கே (பரமபதத்தில்) இடம்முண்டு என்று தெரிந்திருப்பார்

வழியிலும், (அங்கும்) இங்கும் நடந்த படியிருப்பார்.

கடைத்தேற்றிகொள்ளலாம் வாருங்கள் என்று அழைத்து

கேஸவனின் நற்கிருபையை அருளை பார்பார், மற்றவர் பெறுவதற்க்கும் வழிகாட்டுவார்.


நடன கோபாலனின் திருநாமத்தை மனனம் செய்து கொள்க என்று

பாடங்களை(தீக்ஷை) தருவார்.

வடபத்ராரியர் வழியில் நடந்து

வைகுண்டத்ற்க்கு செல்வார் (வைகுண்டத்தை அடைவார்).

Monday, July 10, 2006

200: குருவை தியானம் செய்வாய்...

இன்று குரு பௌர்ணமி, ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகள் முதன் முதலில் பாடியதாக கருதப்படும் இந்த பாடல், சுவாமிகளின் எந்த கீர்த்தனைகளின் தொகுப்பிலும் முதலில் இடம்பெற்றிருக்கும், அதை 200வது பதிவாக, குரு பௌர்ணமி சிறப்பு பதிவாக பதிவிட, என்குருவின், குருவை வணங்கிட, எண்ணினேன்.

பல்லவி

கு3ருத்4யாந் காரிமொந்நு தூ ஸத்
கு3ருத்4யாந் காரிமொந்நு (கு3ரு த்யான் காரி)

அநுபல்லவி

கு3ருத்4யாந் காரிஸ்ரீ ஹரிதெநோஸ் மெநிஹட்வி
திருமந்தூர் த்3வய சரம ஸ்லோகு நப்3பை3 (கு3ரு த்யான் காரி)


சரணு

ஹரிரூ பவயிமொந்நு த்4யாந் ஹால்
ஹரிரூ பவயிமொந்நு
ஹரிரூ பவயிஸத் கு3ருத்4யாந் கரேதீஸ்
ஸரிர்ஸொடி3 ஜெய்பி2ரி அவ்நா ரெ:ய்லுவாய் (கு3ரு த்யான் காரி)

2நிமா ஸாநு ஸோடி3 ஹோநாஸ்தெ
பெநிமா ஸாநுஸோடி3
2நிமா ஸாநுஸொடி3 காந்நாக் ஹொல்லெ தூஜெய்
தெ3நிம்ஸீந் நீ:ஸ்தகரி:யெதே3வு ஹொய்லுவாய் (கு3ரு த்யான் காரி)

பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு மீ தொகொ
பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு
பாய்ம்பொடு3 ஸுகு3ருவுந் பாயிர்பொடி3 பாய்ம்போட்3
பாய்ம்பொடெ3தீஸ் கரெ பாபுநுஜாய் ஹரி (கு3ரு த்யான் காரி)

கடெஜா:ட் ஸொகபோடி3 பு2ள்ளொகரெ
கருமுஜாய் பாய்ம்போடி3
வடபத்ரார்யுநு வாட்யேஸ் வைகுண்டு
நடனகோ3பால நாயகி ஹொய்லுவாய் (கு3ரு த்யான் காரி)


பல்லவி
கு3ருத்4யாந் காரிமொந்நு தூ ஸத்
கு3ருத்4யாந் காரிமொந்நு (கு3ரு த்யான் காரி)

குருவை தியானம் செய்வாய் மனமே நீ, சத்
குருவை தியானம் செய்வாய்

அநுபல்லவி
கு3ருத்4யாந் காரிஸ்ரீ ஹரிதெநோஸ் மெநிஹட்வி மொ:ட்டொ
திருமந்தூர் த்3வய சரம ஸ்லோகு நப்3பை3 (கு3ரு த்யான் காரி)

அந்த ஹரியே என்றெண்ணி குருவை தியானிப்பாய்,
பெரிய திருமந்திரமான திவ்ய பாதாவிந்தம் கிடைக்கும்

சரணு
ஹரிரூ பவயிமொந்நு த்4யாந் ஹால்
ஹரிரூ பவயிமொந்நு
ஹரிரூ பவயிஸத் கு3ருத்4யாந் கரேதீஸ்
ஸரிர்ஸொடி3 ஜெய்பி2ரி அவ்நா ரெ:ய்லுவாய் (கு3ரு த்யான் காரி)


ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும், தியானிப்பதால்
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும்
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும் குருவை தியானித்தால்
இவ்வுடல் விட்டு போய் திரும்பாமல் (மறுபிறப்பில்லாமல்) இருக்கலாம்.

2நிமா ஸாநு ஸோடி3 ஹோநாஸ்தெ
பெநிமா ஸாநுஸோடி3
2நிமா ஸாநுஸொடி3 காந்நாக் ஹொல்லெ தூஜெய்
தெ3நிம்ஸீந் நீ:ஸ்தகரி:யெதே3வு ஹொய்லுவாய் (கு3ரு த்யான் காரி)


உண்ணும் ஆவலை விடு, அல்லாத
பருகும் ஆவலை விடு
உண்ணும் ஆவலை விட்டு தூரத்தில் மேலனப்பும்
உலகில் இருந்து பார்க்க தகும் தெய்வமாகலாம்

பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு மீ தொகொ
பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு
பாய்ம்பொடு3 ஸுகு3ருவுந் பாயிர்பொடி3 பாய்ம்போட்3
பாய்ம்பொடெ3தீஸ் கரெ பாபுநுஜாய் ஹரி (கு3ரு த்யான் காரி)


வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே நான் உன்னை
வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே
குருவை திருவடியில் விழுந்து வணங்கி
வணங்கினாலே செய்த பாவங்கள் தீரும்

கடெஜா:ட் ஸொகபோடி3 பு2ள்ளொகரெ
கருமுஜாய் பாய்ம்போடி3
வடபத்ரார்யுநு வாட்யேஸ் வைகுண்டு
நடனகோ3பால நாயகி ஹொய்லுவாய் (கு3ரு த்யான் காரி)

குருவின் பாதத்தில் வெட்டப்பட்ட மரம்போல் விழுவாய் முன் செய்த
வினைகள் அகலும் வணங்குவாய்
வடபத்திரர் வழியான வைகுண்டு வழிபெற்று, அந்த
நடன கோபலனுக்கு நாயகி ஆகலாம்

பிறருக்கு சொன்னால் எங்கே ஆகாதவன் ஆகிவிடுவோமோ என்று தாம் சொல்ல எண்ணும் விஷயங்கள் எல்லாம் தம் மனத்திற்க்கு சொல்வது போல் சொல்லியிருக்கும் ஒரு அற்புதமான வழிகாட்டும் பாடல். இப்பாடலில் சுவாமிகளின் வார்த்தை அலங்காரங்கள் வெகு அற்புதமாக பயின்று வந்திருப்பதை காணலாம்.

1. கடே ஜாட் சொக போடி - வெட்ட பட்ட மரம் போல்,
2. பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு - வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே
3. ஹோனாஸ்த்த பெனிம் ஆஸானு ஸோடி - அல்லாத குடி மோகத்தை விடுவாய்.

இது போன்ற எளிய வார்த்தைகளை படிக்கும் சமயம் அதன் காட்சிகளும் கண்முன் வரும்.

பல்லவி
குருவை தியானம் செய்வாய் மனமே நீ, சத்
குருவை தியானம் செய்வாய்

அநுபல்லவி

அந்த ஹரி அவனே என்றெண்ணி குருவை தியானிப்பாய்,
பெரிய திருமந்திரமான (எட்டெழுத்தும்) திவ்ய பாதாவிந்தம் கிடைக்கும்

சரணு

ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும், தியானிப்பதால்
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும்
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும் குருவை தியானித்தால்
இவ்வுடல் விட்டு போய் திரும்பாமல் (மறுபிறப்பில்லாமல்) இருக்கலாம்.

உண்ணும் ஆவலை விடு, அல்லாத
பருகும் ஆவலை விடு
உண்ணும் ஆவலை விட்டு தூரத்தில் மேலனப்பும்
உலகில் இருந்து பார்க்க தகும் தெய்வமாகலாம்

வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே நான் உன்னை
வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே
குருவை திருவடியில் விழுந்து வணங்கி
வணங்கினாலே செய்த பாவங்கள் தீரும்

குருவின் பாதத்தில் வெட்டப்பட்ட மரம்போல் விழுவாய் முன் செய்த
வினைகள் அகலும் வணங்குவாய்
வடபத்திரர் வழியான வைகுண்டு வழிபெற்று, அந்த
நடன கோபலனுக்கு நாயகி ஆகலாம்

पललवि
गुरुध्यान कारिमोननु तू सत्
गुरुध्यान कारिमोननु

अनुपललवि
गुरुध्यान कारि श्रि हरि तेनॊस मेनि हट्वि - म्हॊट्टो
तिरुमन्तूर द्वय चरम स्लॊकु नब्बै

चरणु
हरिरू पवयिमोननु ध्यान हाल्
हरिरू पवयिमोननु
हरिरू पवयिसत गुरुध्यान करॆतीस्
सरिरसोडि जेयफिरि अवना रे:यलुवाय्

खनिमा सानु सॊडि हॊनास्ते
पेनिमा सानुसॊडि
खनिमा सानुसोडि काननाक् होलले तूजेय्
देनिमसीन नी:स्तकरि:येदॆवु होयलुवाय्

पायमपोडु सयकिमोननु मी तोको
पायमपोडु सयकिमोननु
पायमपोडु सुगुरुवुन पायिरपोडि पायमपॊड्
पायमपोडेतीस करे पापुनुजाय हरि

कटेजा:ट् सोकपॊडि फुळळोकरे
करुमुजाय पायमपॊडि
वटपत्रारयुनु वाट्यॆस वैकुणटु
नटनगॊपाल नायकि होयलुवाय्


palalavi
gurudhyAn kArimonanu tU sat
gurudhyAn kArimonanu

anupalalavi
gurudhyAn kAri Sri hari tenOs meni haTvi - mhOTTo
tirumantUr dvay caram slOku nabbai

caraNu
harirU pavayimonanu dhyAn hAl
harirU pavayimonanu
harirU pavayisat gurudhyAn karEtIs
sarirasoDi jeyaPiri avanA re:yaluvAy

khanimA sAnu sODi hOnAste
penimA sAnusODi
khanimA sAnusoDi kAnanAk holale tUjey
denimasIn nI:stakari:yedEvu hoyaluvAy

pAyamapoDu sayakimonanu mI toko
pAyamapoDu sayakimonanu
pAyamapoDu suguruvun pAyirapoDi pAyamapOD
pAyamapoDetIs kare pApunujAy hari

kaTejA:T sokapODi phuLaLokare
karumujAy pAyamapODi
vaTapatrArayunu vATyEs vaikuNaTu
naTanagOpAl nAyaki hoyaluvAy

Sunday, July 09, 2006

எங்கும் நிறைந்தவனே எனக்கு வேறு கதியில்லை...

இறைவா. எத்தனையோ பாவ புண்ணியங்கள் செய்து இங்கு அவற்றின் பயன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றைப் பற்றிச் சொல்லும் போது கூட புண்ணிய பாவங்கள் என்று சொல்ல வரவில்லை; பாவ புண்ணியங்கள் என்றே சொல்ல வருகிறது; அந்த அளவுக்கு பாவங்களையே மிகுதியாகச் செய்திருக்கிறேன். செய்த வினைகளின் பயன்களை அனுபவிக்கப் பிறவி எடுத்து விட்டு மேலும் மேலும் பாவ புண்ணியங்களைச் செய்து அந்த வினைகளின் கூட்டத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறேனே ஒழிய இந்த சுழலிலிருந்து விடுபடும் வழி தெரியவில்லை.

பார் என் மேல் கருணை கொண்டு பார். உன் கடைக்கண் பார்வையால் தான் என் வினைகள் அழிந்து எனக்கு நல்வழி கிடைக்கும். நான் எப்போது இந்த சம்சாரக் கடலைத் தாண்டுவேன்? உன் கருணைப் பார்வை என் மேல் விழாவிட்டால் எனக்கு வேறு கதி ஏது? கேஸவா; அழகிய சுருள் முடிகளை உடையவனே; கேசி எனும் அரக்கனைக் கொன்றவனே - உன்னை விட்டால் எனக்கு வேறு கதி இல்லை. திருமகளுடன் வந்து என்னை நீ அழைத்துக் கொள்.

ஸா க்ருப ஸா - பார் என்னை தயை கூர்ந்து பார்

யே ஸம்ஸார் - இந்தச் சம்சாரக் கடலை

மீ கொ2ப்பா3க் த3டு - நான் எப்போது தாண்டுவேன்?

ஸாநா ஜியெத் - நீ பார்க்காமல் போனால்

மொகொ கோட் வாடு - எனக்கு எது வழி?

ஸ்ரீ கேஸவா - கேஸவா

தொர விநா க3தி நீ: - உன்னையன்றி எனக்கு வேறு கதியில்லை

யேட் ஸெய்லே - இங்கே பார்

ஸ்ரீலக்ஷ்மி தே3வி ஸெர - ஸ்ரீ தேவியுடன்
அவி மொகொ தூ பொ3வ்லே - வந்து என்னை நீ அழைத்துக்கொள்

உன் திருநாமங்களைச் சொன்னால் 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்' என்றாளே ஆண்டாள் நாச்சியார். அதனால் உன் திருநாமங்களை 'ராமா. கிருஷ்ணா. கோபாலா. ஹரி ஹரி' என்று எங்கும் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன். எங்கும் எல்லா இடங்களிலும் கரந்தெங்கும் பரந்துளாயே. எங்கும் நிறைந்துளாயே. உன் திருவடிகளை எனக்குத் தந்தருள திருமகளுடன் கிளம்பி நான் இருக்குமிடம் வரவேண்டும்.

ஸ்ரீ ராமா - ஸ்ரீ ராமா

ஸ்ரீ க்ருஷ்ணா - ஸ்ரீ கிருஷ்ணா

ஸ்ரீ கோ3பாலா - ஸ்ரீ கோபாலா

ஸ்ரீ ஹரி - ஸ்ரீ ஹரி

யே கொம்மி ரி:யெஸ்தெ பொ4ரி - எல்லா இடங்களிலும் நிறைந்தவனே

தே3மாய் ஹொய்யவி - அப்பொருளானவனே

பதா3ல் கோ3 தூ - பவித்ரமான பாதங்களை

தே3ரெஸ்தா2ம் - தந்தருள

தே3வி ஸ்ரீலக்ஷ்மிஸெர - திருமகள் இலக்குமியுடன்

நிக்ளி அவி மீ ஸேஸ்தா2ம் - நானிருக்கும் இடத்திற்கு கிளம்பி வருவாய்

***

'விரைவில் வந்து காட்சி தருவாய்' என்றத் தலைப்பில் சிவமுருகன் இட்டப் பதிவில் இருக்கும் நாயகி சுவாமிகளின் பாட்டின் முதல் இரண்டு சரணங்களை விளக்கும் பதிவு இது. பல்லவி விளக்கப்பட்டப் பதிவு இங்கே இருக்கிறது. அனுபல்லவி விளக்கப்பட்டப் பதிவு இங்கே இருக்கிறது.

இந்தப் பாடலைத் திரு. டி.எம். சௌந்தரராஜன் பாடிக் கேட்க இங்கே செல்லுங்கள்.