Thursday, March 20, 2008

கண்ணன் கைத்தலம்பார் கனாகண்ட...

வைணவ மரபில் அப்பனாம் பெருமாளின் திருவருளைப் பெறுவதற்கு முதலில் தேவையானது அன்னையாம் திருமகளின் திருவருள். அப்பனின் கருணையே அம்மையாக வடிவ்ம் கொண்டிருக்கிறது. உலக மக்களுக்கு எல்லாம் தந்தையாக இருக்கும் பெருமானே பக்கம் சாரா பெருமகனாகவும் இருப்பதால் நாம் செய்த நல்லது கெட்டது பார்த்து தான் அவன் தீர்ப்பு அமையும். அவன் உகக்கும்படியாக (மகிழும்படியாக) நாம் செய்தது மிகவும் குறைவே என்று நமக்கு நன்கு தெரியும். அதனால் தாயாரின் திருவடியை முதலில் பற்றிவிட்டால் நாம் தந்தையாரின் திருவடியைப் பற்றும் போது நம் தாய் நமக்காக பெருமாளிடம் பரிந்துரைப்பாள். அப்படி பெருமாளின் ஒரு பக்கத்தில் (பாரிசத்தில்) அமர்ந்து திருவானவள் பரிந்துரைப்பதால் தான் அந்த நற்செயலுக்கு ஸ்ரீபாரிசு ..> சிபாரிசு என்று பெயர் வந்ததாகப் பெரியோர்கள் சொல்லுவார்கள்.

இந்த மரபினை ஒட்டியே திருப்பாவை பாடிய கோதை நாச்சியாரும் முதலில் நப்பின்னை பிராட்டியைச் சரண் புகுந்து அவள் துணையுடன் கண்ணனைச் சரணடைகிறாள். நப்பின்னையை ஒத்த இன்னொரு பிராட்டி தானே கோதையும். அப்படியிருக்க அவரும் நப்பின்னையைச் சரணடைய வேண்டுமோ என்றால் நமக்கு அந்த நல்வழியைக் காட்டியருளத் தானே அவதரித்தாள் கோதை? அந்த அவதார நோக்கத்தின் படி அந்த நல்வழியைத் தானே பின்பற்றி நமக்கு நல்ல ஆசிரியையாக அமைகிறாள்.

இப்படி இருக்க நாம் சரணடைவது யாரை? திருமகளையா? நப்பின்னை பிராட்டியையா? அவர்களைச் சரணடைந்தாலும் பெருமாளின் திருவருள் பெறத் துணையாவார்கள் தான். ஆனால் தாயாகவும் ஆசிரியையாகவும் இருக்கும் ஆண்டாளைச் சரணடைந்தால்? இன்னும் அது பெருமாளுக்கு உகப்பான செய்கையாக இருக்குமே?

அப்படி கண்ணன் கைத்தலம் பற்றும் கனாவினைக் கண்ட சூடிக் கொடுத்தச் சுடர்கொடியின் திருவடியைப் பற்றும் வாய்ப்பு எப்போது கிட்டும் என்று இந்தப் பாடலின் மூலம் வியக்கிறார் நாயகி சுவாமிகள்.

இதோ முழுப்பாடலும். பாடலின் வரிகளுக்கான பொருளை அடுத்த இடுகைகளில் காணலாம்.

கண்ணன் கைத்தலம் பார் கனா கண்ட நாச்சியார்
கருணைக்கு ஆவது எப்போது?
புண்ணியஸ்தலமாம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
போய் சேருவது எப்போது?

ஆயர் மகன் மேல் ஆசை கொண்டாள் அடிக்கு
அன்பு செய்வது நாம் எப்போது?
வேயர் புகழ் வில்லிபுத்தூருக்கு ஏக நாம்
விருப்பம் வைத்திடுவது எப்போது?

அச்சுதன் அனந்தன் மேல் ஆசை வைத்தாள் மலர்
அடி சிரம் அணிவது எப்போது?
முச்சகம் போற்றும் வில்லிபுத்தூருக்கு
முடிவில் செல்வது நாம் எப்போது?

துளசி வனம் தனில் உலக மகிழ் ஆண்டாளுக்கு
தொண்டு செய்திடுவது எப்போது?
குளம் மூன்றும் ஒன்றாய் வில்லிபுத்தூருக்கு ஏக
உளம் மகிழ்ந்திடுவது எப்போது?

அன்ன நடை எங்கள் ஆண்டாள் திருவடிக்கீழ்
அமர்ந்திடுவது எப்போது?
அன்னவயல் ஸ்ரீ புதுவைக்கு ஏக நாம்
ஆசை வைத்திடுவது எப்போது?

திருவாடிப்பூரத்தில் அவதரித்தாள் சே
வடிக்கீழ் புகுவது எப்போது?
திருப்பாவை அருளும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
செல்வது இனி நாம் எப்போது?

குயிலைக் கூவாய் என்னும் குயில் மொழியாள் அடிக்
கீழ் குடி ஆவது எப்போது?
குயிலினங்கள் ஆர் ஸ்ரீவில்லிபுத்தூர் தனில்
குடியேறி வாழ்வது எப்போது?

பெண்மணியாம் கோதை ஆண்டாள் திருப்பாதம்
பேணிப் பணிவது எப்போது?
கண்குளிர அப்பனை வில்லிபுத்தூர் தனில்
கண்டு களிப்பது எப்போது?

இண்டர் நடைக்குணம் கொண்டாடும் ஆண்டாள்
இணையடி பணிவது எப்போது?
அண்டர் முனிவர்கள் தொண்டர் ஏத்தும் புத்தூர்
கண்டு களிப்பது எப்போது?

திருவரங்கேசனை மருவி வாழ் ஆண்டாள் தன்
திருவடை அடைவது எப்போது?
இருநிலம் புகழ் வில்லிபுத்தூருக்கே போவேன் என்று
இயம்பி நடப்பது எப்போது?

நடனகோபாலனை நாடும் கோதைத் திரு
அடி நாடி வாழ்வது எப்போது?
வடபத்ரஸாயி அருளும் வில்லிபுத்தூர்
மருவி வாழ்ந்திடுவது எப்போது?

Wednesday, March 19, 2008

எப்போது எங்கு...

கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர் ஜியேத்
எதுகுலகாம்போ3தி ராகு
ஆதி3 தாளு


பல்லவி
கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர் ஜியேத்
கோன் ஜெலுமவைகி கோநொக்கி த்யே கொங்க்ஹால்தி ஜநன் ஹோய்கி (கோன்)

அநுபல்லவி
மான்ஹோர் ஐகுநாஸ்தக் கான்தீ3 ஐகோ ஐகோ
த்4யாந் கரோ ஹரி முக்தி தே3நவயி ஸெத்ல (கோன்)


சரணு
ஸுநொ மஞ்ஜ்ரி கூ4ஸொ:ய் உஜெதி3ந்நு பு4ந்நஹா
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா பொந்தெ3
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா
ஹந நவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
மொந் ஹரிஹோர் தொ2வொ முக்திதே3யி ஸெத்ல (கோன்)

கள கொ3ரொ ரூப்ஹொய் உஜெதி3ந்நு பு2ந்நஹா
கரெ கருமுன் பு2ந்நஹா பு2ள்ளோ
கரெ கருமுன் பு2ந்நஹா
கெ3ளரவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
ஸிள ஹரிக் த4யாந்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

ஸீன்ஸெர ஜென்முந் க2டெ3 தி3ந்நுந் பு2ந்நஹா
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா யே ஸெய்லுவோ
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா
பான்ப23ஸ்தெ யெமாக்காய்கரன் ஹோய் தும்ரால்
ஸீன் திர்ஜாய் த்4யான்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

மொ:டொதெநொ யெநொ மெநேத் ஸொட்டி3 ஜேடை3ஹா யெமுட்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3யெமுட3வேத்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3
வடபத்ரார்யுநு க்ருபஹால் மொ:டொ மந்தூர் அப்3பே3ஸ் மொகொ
நடனகோ3பாலூஸ் தே3வ் நஜ்ஜாநகோநைகொ (கோன்)

பல்லவி
கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர் ஜியேத்
கோன் ஜெலுமவைகி கோநொக்கி த்யே கொங்க்ஹால்தி ஜநன் ஹோய்கி (கோன்)

எப்போது எங்கு விழுந்து போகுமோ இவ்வுயிர் போனால்
எந்த ஜென்மம் வருமோ என்னவோ, இதை யாரால் அறியசெய்ய முடியுமோ

அநுபல்லவி
மான்ஹோர் ஐகுநாஸ்தக் கான்தீ3 ஐகோ ஐகோ
த்4யாந் கரோ ஹரி முக்தி தே3நவயி ஸெத்ல (கோன்)


கழுத்து மீது என்றில்லாமல் காது கொடுத்து கேட்ப்பீர்
தியானித்தால் ஹரி முக்தி தர சத்திய (எப்போது)

சரணு
ஸுநொ மஞ்ஜ்ரி கூ4ஸொ:ய் உஜெதி3ந்நு பு4ந்நஹா
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா பொந்தெ3
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா
ஹந நவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
மொந் ஹரிஹோர் தொ2வொ முக்திதே3யி ஸெத்ல (கோன்)


நாய், பூனை, பெருச்சாளியாய் பிறந்தது நாட்கள் போதாதா
சுகம், துக்கம் போதாதா அடைந்த
சுகம், துக்கம் போதாதா
அடிக்க வரும் எமனை என்ன செய்ய இயலும் உம்மால்,
ஹரிமீது மனம் வைக்க, முக்தியளிப்பான் சத்திய (எப்போது)

கள கொ3ரொ ரூப்ஹொய் உஜெதி3ந்நு பு2ந்நஹா
கரெ கருமுன் பு2ந்நஹா பு2ள்ளோ
கரெ கருமுன் பு2ந்நஹா
கெ3ளரவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
ஸிள ஹரிக் த4யாந்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

கருப்பு வெள்ளை ரூபத்துடன பிறந்த நாட்கள் போதாதோ
செய்த கர்மங்கள் போதாதோ பின்னால்
செய்த கர்மங்கள் போதாதோ
யமன் கழுத்தை நெறிக்க வரும் போது என்ன செய்ய இயலும் உம்மால்
(பாற்கடலில்) குளிர்ச்சியாய் இருக்கும் ஹரியை தியானித்தால் முக்தியளிப்பான் சத்திய (எப்போது)


ஸீன்ஸெர ஜென்முந் க2டெ3 தி3ந்நுந் பு2ந்நஹா
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா யே ஸெய்லுவோ
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா
பான்ப23ஸ்தெ யெமாக்காய்கரன் ஹோய் தும்ரால்
ஸீன் திர்ஜாய் த்4யான்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

இளைப்புகளை தரும் ஜென்மங்களை எடுத்த நாட்கள் போதாதோ
சாணத்தில் புழுவாய் இருந்தனையே பாருங்கள்
சாணத்தில் புழுவாய் இருந்தனையே
ஜாதகத்தை கிழிக்கும் எமன் முன் என்ன செய்யமுடியும் உம்மால்
இளைப்புகளை தீர்க்க தியானிப்பீர் முக்தியளிப்பான் சத்திய (எப்போது)

மொ:டொதெநொ யெநொ மெநேத் ஸொட்டி3 ஜேடை3ஹா யெமுட்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3யெமுட3வேத்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3
வடபத்ரார்யுநு க்ருபஹால் மொ:டொ மந்தூர் அப்3பே3ஸ் மொகொ
நடனகோ3பாலூஸ் தே3வ் நஜ்ஜாநகோநைகொ (கோன்)

அவன், இவன் பெரியவன் எனச் சொன்னார் விடமாட்டான் எமன்
உடையாமல் போகுமோ இப்பானை எமன் வந்தால்
உடையாமல் போகுமோ இப்பானை
வடபத்ரர் கிருபையினால் பெரியமந்திரம் எனக்கிட்டியது
நடனகோபாலனே கடவுள் கெட்டு விடாதீர் கேளும் (எப்போது)