Monday, August 14, 2006

சீதாராமா என்னை பாரப்பா...

ஸீதாராம் தொ3ளர் ஸெய்லெ ராம்
ஸேவொ மொகொ தூ தீ3டெ3 ராம்
ஏ ஜெகதுர் தொ2வி கே2ள் கெந்நொக ராம்
ஏ ஜென்மு க23ன் ஸெக்காநி ராம் [ஸீ]


சீதா ராமா எம்மை பார் ராமா,
சேவை எனக்கு தந்திடு ராமா,
இந்த உலகில் என்னை வைத்து விளையாடாதே ராமா,
இந்த ஜென்ம கடனை தாங்க முடியவில்லையே ராமா.

சீதைக்கு அனுகிரகமளித்தவனே எம்மையும் அனுகிரகிப்பாய்,
சேவை தந்து என்னையும் ஒரு மனிதனாக்கிடுவாய். இந்த உலகமானது பெண்ணிற்க்கு எப்படி புகுந்த வீடோ அப்படி எனக்கும் சற்று சலனமாக உள்ளது, அப்பேற்பட்ட ஒரு இடத்தில் வைத்து என்னை உன் திருவிளையாட்டிற்க்கு ஆளாக்காதே, சீக்கிரம் என்னை உன்னடியில் சேர்த்துக்கொள். இந்த கடன் என்னால் சகிக்க முடியவில்லை, தாங்க முடியவில்லை. சீக்கிரம் உன் சேவை தருவாய் ராமா.

2 comments:

குமரன் (Kumaran) said...

சிவமுருகன்.

சுவாமிகள் சொல்வது 'ஏ ஜென்மு க2ட3ன் ஸெக்காநி ராம்' - இந்த ஜென்மங்கள் எடுப்பது தாங்க முடியவில்லை இராமா. khadan என்பதை தமிழ் கடன் என்று படித்துவிட்டீர்கள் போலிருக்கிறது.

Sivamurugan said...

நீங்கள் சொல்வது சரி தான்.
நன்றி அண்ணா